Pages

Sunday, November 22, 2009

சந்திரபாபு நாய்டு குற்ற சாட்டு ?

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஜெகன்மோகன் ரெட்டி, சிரஞ்சீவி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜெகன்மோகன்ரெட்டி போகும் இடம் எல்லாம் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடக மந்திரி ஜனார்த்தன் ரெட்டி அவரது சகோதரர் சுதாகர் ரெட்டி ஆகியோர் ஆந்திராவில் ஏராளகமான இரும்பு கனிம சுரங்கங்கள் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி வருமானமாக கிடைத்தது. அதில் ரூ.5 ஆயிரம் கோடியை ரெட்டி சகோதரர்கள் ராஜசேகர ரெட்டிக்கு கொடுத்தனர்.

இந்த பணத்தை வைத்துதான் அவரது குடும்பத்தினர் டி.வி. சேனல், பத்திரிகை கள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடு பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்.


ராஜசேகர ரெட்டியின் இந்த முறைகேடுகள் விரைவில் வெளிவரும். நாட்டில் நடைபெறும் முக்கிய ஊழல் புகார் வழக்குகளை தற்காலிகமாக வேண்டுமானால் மூடிமறைத்து விடலாம். எதிர்காலத்தில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும் போது அத்தனை ஊழல் வழக்குகளும் முறைப்படி நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

இவ்வாறு சந்திரபாபுநாயுடு பேசினார்.

No comments:

Post a Comment