இதுகுறித்து அவர் உடனடியாக அடையாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
உதவி கமிஷனர் கார்த்தி கேயன், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக டைரக்டர் சீமான் ஆதரவாளர்களான மித்ரன், மணி, அருள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மித்ரன் டைரக்டர் சீமானிடம் உதவி இயக்குனராக உள்ளார். கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுடன் மதுரையை சேர்ந்த என்ஜினீயர் விஜயகுமார் (வயது 30) என்பவரும் காரில் வந்துள்ளார். இவர் டைரக்டர் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தில் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் தேடுவதை அறிந்ததும் விஜயகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிப்பதற்காக சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்துள்ளனர்.

No comments:
Post a Comment