Pages

Monday, November 30, 2009

பப்பாளி பழ மேனி

சமீபத்தில் நடிக்க வந்திருப்பதில் அழகான அம்சமான நடிகை யார் ?
பிரகாஷ் , சென்னை

சிந்து மேனன் . லேட்டஸ்ட் பப்பாளி பழ மேனி !.

அமெரிக்காவுக்கு இந்தியாவை விட பாகிஸ்தானே முக்கிய நாடு?

பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்ததால் இந்தியா, அமெரிக்கா உறவு மேம்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் சீனாவில் இருந்து வெளிவரும், கம்யூனிஸ்டு கட்சி பத்திரிகையில் இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

ஒபாமா- பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பால் இந்தியா, பாகிஸ்தான் இடையே உள்ள சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவலாம். ஆனால் அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போர் நடவடிக்கையில் இந்தியாவை விட பாகிஸ்தான்தான் அமெரிக்காவுக்கு முக்கிய நாடாக இருக்கும்.

தெற்கு ஆசியாவில் தீவிர வாத ஒழிப்புக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளே அமெரிக்காவுக்கு அதிக தேவையாக இருக்கின்றன.

அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்படுவதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள நீண்ட கால பிரச்சினைக்கு சற்று தளர்வு ஏற்படலாம்.

இவ்வாறு அதில் எழுதப்பட்டு உள்ளது.

சிங்கப்பூரில் இறக்குமதியாகும் பழங்கள், காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பும் முன் பரிசோதனை ?

சிங்கப்பூர் ஒவ்வோர் ஆண்டும் 400,000 டன்னுக்கும் அதிகமாகப் பழங்களும் காய்கறிகளும் இறக்குமதி செய்கிறது. இவையனைத்தும் உட்கொள்வதற்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிப் படுத்த வேளாண் உணவு, கால்நடை ஆணையம் பரிசோதனை செய்கிறது.
சிங்கப்பூரில் இறக்குமதியாகும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் பெரும் பாலானவை, விற்பனையாவதற்கு முன்பு பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை சந்தைக்குச் செல்கின்றன.
ஒவ்வொரு நாளும், பத்துக்கும் மேற்பட்ட வகை பழங்கள், காய்கறி களிலிருந்து ஏதேச்சையான முறையில் சிலவற்றை ஆணையம் தேர்ந்தெடுத்து, பரிசோதனை செய்கிறது.
சில வகை காய்கறிகள் மற்ற வகை காய்கறிகளை விட அதிகம் பாதிக்கப்படக் கூடியவை.
“குறிப்பாக, கீரை வகைகளும் பூச்சி களால் தாக்கப்படக்கூடிய காய்களும்” என்றார் ஆணையத்தின் விலங்கு பொதுச் சுகாதாரப் பிரிவின் துணை இயக்குநர் டாக்டர் பால் சியூ.
“இதுபோன்ற விளைச்சல்களில், விவசாயிகள் அளவுக்கு அதிகமாகப் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்திவிடக் கூடும்” என்றார் அவர்.
ஆணையத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில், ஒவ்வொரு மாதிரிப்பொருளும் 150க்கும் மேற்பட்ட இரசாயனங்கள், ஹார்மோன்கள், தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியா கிருமிகள் போன்றவை கலந்திருக்கிறதா எனப் பரிசோதிக்கப் படும்.
சென்ற ஆண்டு வாரியம் 11,000க்கும் மேற்பட்ட மாதிரிப் பொருட்களைப் பரிசோதித்தது. அவற்றில் 180 பொருட்கள் தேறவில்லை.
“மாதிரிப் பொருட்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் சோதிக்கப்படும்போது, அது எடுக்கப்பட்ட மொத்த சரக்குகள் இறக்குமதியாளரின் குளிர் கிடங்குகளில் தடுத்து வைக்கப்படுகின்றன.
ஆராய்ச்சிக் கூட சோதனை முடிவுகள் திருப்திகரமாக இல்லாவிட்டால், அந்த மொத்த சரக்கும் நிராகரிக்கப்படும்” என்றார் டாக்டர் சியூ.
காய்கறிகள் தவிர, மாமிசம், கடலுணவு இறக்குமதிகளும் விற்பனையாவதற்கு முன்பு பரிசோதிக்கப்படுகின்றன.
பன்றிகள், கோழிகள் ஆகியவற்றில் மனிதர்களுக்குப் பரவக்கூடிய நோய்க் கிருமிகள் இருக்கக்கூடும் என்பதால், மாமிசம் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது.

கைக்கு எட்டிய தூரத்தில் ஒசாமா பின்லேடன் - அமெரிக்கா தெரிந்தே விட்டது ?

அமெரிக்கா தேடி வரும் அனைத்துலக பயங்கரவாதி ஒசாமா பின் லாடன், ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு அமெரிக்கப் படையினருக்கு கைக்கு எட்டிய தொலைவிலேயே மறைந்திருந்ததாக அமெரிக்க செனட் அறிக்கை ஒன்று கூறுகிறது.
அல் காய்தா அமைப்பின் தலைவரான பின் லாடனைப் பின்தொடர்வதில்லை என்று அப்போதைய அமெரிக்க ராணுவத் தலைவர்கள் எடுத்த முடிவால் பின் லாடன் அன்று தப்பிச் செல்ல நேர்ந்தது என்று அந்த அறிக்கை கூறியது.
வெளியுறவு குழுவின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் அந்த அறிக்கையை தயார் செய்துள்ளார்.
பின் லாடனை உயிருடன் பிடிக்கவோ அல்லது கொல்லவோ தவறியதால் மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் அமெரிக்க வீரர்களை அனுப்புவது குறித்த அவரது முடிவை அறிவிக்கவுள்ள வேளையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையால், அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகளுக்கும் ராணுவத் தளபதிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
பின் லாடன் இன்னமும் ஆப்கானிஸ்தானில் டோரா போரா மலைப் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.பாத்திமா ரபீக் இசையமைப்பாளர் அவதாரம் ?

கலைஞர் டி.வி.,யில் டிசம்பர் 5ம்தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகவுள்ள நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.பாத்திமா ரபீக் இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறார். தமிழகத்தின் கனவு தொழிற்சாலையான கோடம்பாக்கத்தில் கற்பனைகளுடன் சென்னைக்கு வந்து போராடும் இளைஞர் கூட்டத்தை - வருங்கால இயக்குனர்களின் தாகத்தை ஊடகப்படுத்தும் புது தளமாக இந்த நிகழ்ச்சி அமையவிருக்கிறது. தொலைக்காட்சி வரலாற்றில் புதிய அம்சமாக உருவாகும் இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர்கள், பயிற்சி இயக்குனர்கள், இணை - துணை இயக்குனர்கள் இளம் இயக்குனர்கள் மற்றும் இயக்குனர் துறையில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள், இசையமைப்பாளர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். ஜெ.வி.மீடியா ட்ரீம்ஸ் தயாரிக்கும் இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் மதன், நடிகர் பிரதாப் போத்தன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். சிறப்பு விருந்தினர்களாக முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் இடையிடையே பகிர்ந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறந்த குறும்படங்கள் வாயிலாக தேர்ந்‌தெடுக்கப்பட்ட 5 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி பாத்திமா ரபீக் இளம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகவிருக்கிறார். நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சிக்காகவே அவர் பிரத்யேக பாடலை எழுதி, இசையமைத்து அசத்தியிருக்கிறாராம்.

ரஷ்யாவில் தீவரவாதம் ரயில் கவிழ்ப்பு

ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டதற்கு பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டு தான் காரணம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.ரஷ்யாவில் நெவ்ஸ்கி எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 28ம் தேதி மாஸ்கோ நகரில் இருந்து 661 பயணிகளுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்று கொண்டிருந்தது.மாஸ்கோவின் வடக்கு பகுதியில் இருந்து 350 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள உக்லோவா கிராமத்திற்கு அருகில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து இந்த ரயில் தடம் புரண்டது. இவ்விபத்தில் 39 பேர் பலியாயினர்; 95 பேர் காயமடைந்தனர்.
இந்த ரயில் சென்ற பாதையில் மற்றொரு இடத்தில் வெடிக்காத குண்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது. எனவே, இந்த ரயில் தடம்புரண்டதற்கு பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டு தான் காரணம் என, ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.இந்த குண்டு வெடிப்பு சதிக்கு காரணமான பயங்கரவாதியின் உருவத்தை, கம்ப்யூட்டர் மூலம் போலீசார் வரைந்துள்ளனர். இதையடுத்து, சந்தேகத் துக்குரிய பயங்கரவாதியை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவில் சியாட் டில் நகரில் நான்கு போலீசார் சுட்டு கொலை - எங்கே போகிறது அமெரிக்கா ?

அமெரிக்காவில் சியாட் டில் நகரின் தெற்கே 35 மைல் தொலைவில் டகோமா என்ற இடத்தில் விமானப்படை தளம் உள்ளது. அங்குள்ள விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு 4 போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை வந்தனர்.

வேலைக்கு செல்வதற்கு முன்பு அங்குள்ள காபி ஷாப் ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். லேப்- டாப் மூலம் தங்கள் பணிகளை பிரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 மர்ம மனிதர்கள் காபி ஷாப்புக்குள் நுழைந்தனர். துப்பாக்கியை எடுத்து 4 போலீஸ் அதிகாரிகளையும் குறி பார்த்து சுட்டனர்.

4 போலீஸ் அதிகாரிகளின் உடம்பிலும் ஏராளமான குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர். அதன் பிறகு 2 மர்ம மனிதர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மர்ம மனிதர்கள் காபி ஷாப்புக்குள் இருந்த மற்றவர்கள் யாரையும் சுடவில்லை. எனவே 4 போலீஸ் அதிகாரிகளை கொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு மர்ம மனிதர்கள் பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் ஒரு மாஸ்டர் ரோல் - சூப்பர் ஏமாற்று வேலை ?

டெல்லி மாநகராட்சியில் சுமார் 1 1/2 லட்சம் ஊழியர்கள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது. ஆனால் உண்மையில் ஊழியர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாகவும் போலியாக பல பெயர்கள் சேர்க்கப்பட்டு சம்பள பணத்தில் ஊழல் நடைபெறுவதாகவும் ஒரு தகவல் வெளியானது.
இதையடுத்து டெல்லி மாநகராட்சி கமிஷனர் ஜே.எஸ்.மெக்ரா அதிரடி நடவடிக்கையில் இறங்கி னார். மாநகராட்சி ஊழியர் களின் வருகை பதிவேட்டில் Òபயோ மெட்ரிக்Ó நவீன தொழில் நுட்பத்தை கொண்டு வந்தார்.

இதன் மூலம் மாநகராட் சியின் ஒவ்வொரு பிரிவி லும் உண்மையான ஊழியர் கள் எத்தனை பேர் உள்ள னர் என்ற விவரம் தெரிய வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங் கிய இந்த நவீன தொழில் நுட்ப வருகைப் பதிவேடு தற்போது மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கடைநிலை ஊழியர் கள் வரை அனைவருக்கும் விரிவு படுத்தப்பட்டு விட்டது.

இந்த நவீன தொழில் நுட்பம் காரணமாக டெல்லி மாநகராட்சியில் இதுவரை 22 ஆயிரத்து 853 போலி ஊழியர்கள் பெயர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எந்த வேலையும் பார்க்காமல் 22,853 பேரின் பெயரில் மாதந்தோறும் பணத்தை சிலர் வாங்கியுள்ளனர்.
இந்த மோசடி கண்டு பிடிக்கப்பட்டதும் 22,853 பேருக்கு போடப்பட்ட சம் பளம் நிறுத்தப்பட்டது. இதன் மூலம் டெல்லி மாநகராட் சிக்கு ஆண்டுக்கு ரூ.204 கோடி பணம் மிச்சமாகும் என்று மாநகராட்சி மேயர் டாக்டர் கன்வர் சயின் கூறி னார்.

8,000 டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு ?

சீனாவில் மெலமைன் ரசாயனப்பொருள் கலந்த கலப்பட மாவைக் குடித்ததால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நோயுற்றனர்.
அவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தையின் பெற்றோர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந் துள்ளனர்.
ஹினான் மாநிலத்தைச் சேர்ந்த மா சியூசின் என்பவர் 8,000 டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த பால் மாவைத் தயாரித்த சன்லு நிறுவனம் மற்றும் அந்த பால் மாவை விற்ற பேரங்காடிக்கு எதிராகவும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கலப்பட பால் மாவைக் குடித்ததால் சீனாவில் 6 குழந்தைகள் மரணம் அடைந்தனர்.

துபாய் வாழ் இந்தியர்கள் பணிநீக்கம் - அமெரிக்கா உள் அடி வேலை ? அமெரிக்கா பேச்சை கேட்கிறதா துபாய் அரசு ?

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் திடீர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ளன.

பொருளாதார நெருக்கடியால் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறுத்திவிட்டனர்.

இந்த பணிகளில் 60 லட்சம் பேர் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் 40 லட்சம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதில் 20 லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இவர்களில் ஏராள மானோருக்கு அந்தந்த நிறுவனங்கள் ஏற்கனவே வேலை நீக்க நோட்டீசு அனுப்பி விட்டது. விடு முறையில் ஊருக்கு வந்து இருப்பவர்களுக்கு நீங்கள் துபாய்க்கு திரும்பி வரவேண்டாம். உங்களுக்கு இனி வேலை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என செல்போன் எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயில் மூலம் அனுப்பி விடுகின்றனர்.

எனவே விடுமுறையில் வந்து இருப்பவர்கள் அனைவரும் வேலை பறி போய்விடுமோ என்று கலக்கத்தில் உள்ளனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாஜித் என்பவர் பக்ரீத்துக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரது இ மெயிலுக்கு அவர் வேலை பார்த்த நிறுவனம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.

அதில் உங்கள் வேலை காண்டிராக்டை ரத்து செய்து விட்டோம், வேலைக்கு வழங்கிய அனுமதியும் ரத்தாகி விட்டது. நீங்கள் துபாய்க்கு திரும்பி வரவேண்டாம். உங்கள் சம்பள பாக்கி, உங்கள் உடமைகள் அனைத்தும் தபால் மூலம் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி சாஜித் கூறும் போது எங்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் தரவில்லை. இப்போது வேலையை விட்டே நீக்கி விட்டார்கள். எனது நண்பர் கள் பலருக்கும் இதே போல நோட்டீசு வந்துள்ளது. எங்கள் கனவெல்லாம் வீணாகி விட்டது என்றார்.

துபாயில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வது அதிகமாக இருந்தது. சமீப காலமாக அது குறைந்து வந்தது. பொருளாதார நெருக்கடியும் முதலீடு கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

கத்திப்பாரா பாலம் மீது போலீஸ் உதவியுடன் பட்டபகலில் இந்திரன் படபிடிப்பு . விமானத்தை தவற விட்ட பயணிகள் கதறல்.

போலீசுடன் ரஜினி மோதும் அதிரடி சண்டை காட்சிகள் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இன்று பட மாக்கப்பட்டது.

ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஞ்ஞானி, எந்திரன் என்ற இரண்டு கெட்-அப்களில் ரஜினி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளிலும், ஐதராபாத், கோவா, டெல்லி, மகாராஷ்டிரா உள்பட வெளிமாநிலங்களிலும் கடந்த ஒரு வருடமாக நடந்தது.

கடந்த சில மாதங்களாக சென்னை என்ஜினீயரிங் கல்லூரிகளில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது விஞ்ஞானியான ரஜினி, எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டன.

பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகள், எரியும் காருக்குள் இருந்து ரஜினி தப்புவது, பங்களா வீடு கொழுந்து விட்டு எரிவது போன்ற காட்சிகள் அரங்குகள் அமைத்து எடுக்கப்பட்டன.

படப்பிடிப்புகள் முடிவடைந்து வருகிற மார்ச் மாதம் படம் ரிலீசாக உள்ளது. டப்பிங் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ரஜினி முதல் கட்ட டப்பிங் பேசி முடித்துவிட்டார்.

இதற்கிடையில் எந்திரன் படத்தில் மேலும் சில காட்சிகளை சேர்க்க திட்டமிட்டனர். இதற்காக புதிய காட்சிகள் ஷ§ட்டிங் நடந்து வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள பிரமாண்டமான மேம்பாலத்தில் இன்று காலையில் ஷ§ட்டிங் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பு குழுவினர் வந்தனர். அடுக்கு மேம் பாலத்தின் மேல் தள ரோட்டில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஒரு காரில் வித்தியாசமான கெட்-அப்பில் ரஜினி, மணப் பெண்ணை அழைத்து செல்வது போலவும், அந்த காரை போலீசார் துரத்தி செல்வது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டது.

அந்த காரை போலீசார் மடக்குகிறார்கள். உடனே அவர்களுடன் ரஜினி மோதுகிறார். கையில் துப்பாக்கியுடன் ரஜினி மோதும் அதிரடி சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டது.

ரஜினி வந்ததை அறிந்ததும் அதிகாலையிலேயே ஏராளமானவர்கள் அந்த பகுதியில் கூடினார்கள். ஆனால் ஷ§ட்டிங் நடைபெற்ற வட பழனி- தாம்பரம் மெயின் ரோட்டில் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

பஸ்கள் மற்றும் வாகனங்களை பாலத்தின் கீழ் வழியாக திருப்பி விட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்துக்குள் விமான நிலையம் செல்ல முடியாமல் சிலர் விமானங்களை தவற விட்டு தவித்தனர்.

பகல் 12 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. காலை 8 மணிக்கு மேக்கப்புடன் ரஜினி காரில் வந்தார். காட்சிகள் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ரேணிகுண்டா படத்திற்கு 'ஏ' சான்றிதழ் ? இயக்குனர் வன்முறை கட்சிகளை நீக்க maruppu

புதுமுகங்கள் நடித்த ரேணிகுண்டா படத்தை திரையிட தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதாக தணிக்கை சான்றிதழ் அளிக்கப்படவில்லை.

சிறுவர்கள் ரவுடிகளாகி வன்முறைகளில் ஈடுபடும் காட்சிகளை அனுமதிக்க முடியாது என்றும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை குழு உறுப்பினர்கள் வற்புறுத்தினர். ஆனால் ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வம் இதை ஏற்கவில்லை.

இதையடுத்து தணிக்கை குழுவின் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் “ஏ” சான்றிதழ் அளித்து திரையிட அனுமதி அளித்தனர்.

பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய புதிய நூல்

பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த நூலை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குநர் கே.நட்ராஜ் சென்னையில் வெளியிட்டார். பி.எஸ்.பி.பி.குழுமப் பள்ளிகளின் டீன் திருமதி. ஒய்.ஜி.பார்த்தசாரதி, இசைக் கலைஞர் சுஜாதா விஜயராகவன் ஆகியோர் அதைப் பெற்றுக்கொண்டனர். ஹம்சத்வணி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் திருமதி. ஒய்.ஜி.பி. பேசுகையில், எம்.எஸ். ஒரு முழுமையான இந்திய பெண். எளிமையான வாழக்கை வாழ்ந்தவர்; இசைக் கலைஞர்களும் இசை ஆர்வலர்களும் இந்த நூலை வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு இந்தியனும் எம்.எஸ்.,சின் இசை மற்றும் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். இந்த நூல் விற்பனையில் கிடைக்கும் தொகை, ஓரிருக்கை கிராமத்தில் காஞ்சிப் பெரியவரின் மணி மண்டபம் கட்டுவதற்காக ஸ்ரீ மகாலட்சுமி மாத்ருபூதேஸ்வரர் அறக்கட்டளையிடம் அளிக்கப்படும் என்று ஹம்சத்வணி செயலாளர் ஆர்.சுந்தர் தெரிவித்தார்.

மன்சூரலிக்ஹான் சிட்டிபாபு மீது செக் மோசடி வழக்கு - அரசியல் பின்னனியா?

நடிகர் மன்சூர்அலிகான் எழும்பூர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சினிமா படம் தயாரிக்க நடிகர் சிட்டிபாபு என்கிற சாஜித் அதீப் கடந்த 22.12.2008 அன்று என்னிடம் ரூ. 6 லட்சம் வாங்கினார். இந்த தொகையை பல்வேறு தவணைகளாக என்னிடம் பெற்றுக் கொண்டார். இந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை.

இதே போல அவரது மனைவி ஜெரீனா என்பவரும் என்னிடம் ரூ. 7 லட்சத்து 17 ஆயிரம் கடன் வாங்கினார். இவரும் பணத்தை திருப்பித் தரவில்லை.

அதற்கு பதில் காசோலைகளை இருவரும் தனித்தனியாக கொடுத்தனர். ஆனால் அவர்களது வங்கி கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

எனவே அவர்கள் மீது செக் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் நடிகர் மன்சூர்அலிகான் கூறி இருந்தார்.

இந்த மனு மீதான வழக்கு விசாரணை எழும்பூர் 14-வது கோர்ட்டு நீதிபதி காஞ்சனா முன்பு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் ஆஜராகும்படி சிட்டிபாபு, அவர் மனைவி ஜெரீனாவுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

ஆனால் அவர்கள் இன்று கோர்ட்டுக்கு வரவில்லை. இதனால் நடிகர் சிட்டிபாபு, ஜெரீனாவை கைது செய்து ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி காஞ்சனா உத்தரவிட்டார்.

Sunday, November 29, 2009

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும்

"அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்' என, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.




இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்து போட்டியிடப் போவதாக கடந்த சில மாதங்களாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்தன.எதிர்க்கட்சிகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. இருந்தாலும், பொன்சேகா இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தார்.




இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்து நான் போட்டியிடுவது உறுதி. துவக்கத்தில் அரசியலில் குதிக்க எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால், நாட்டின் அரசியல் சூழ்நிலை என்னை அரசியலில் குதிக்க வைத்து விட்டது. மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்.போர்க்களத்தில் இதுவரை நான் தோல்வியை சந்தித்தது இல்லை; தேர்தலிலும் தோற்க மாட்டேன். அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து வெற்றி பெறுவேன். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றியின் பயன், ஒரு குடும்பத்துக்கு மட்டும் (ராஜபக்ஷே குடும்பம்) சொந்தமானது அல்ல.வரலாற்று ரீதியாக இலங்கை, சிங்கள மக்களுக்கு சொந்தமானது. அதே நேரத்தில், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.




எனக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை இலங்கை அரசு குறைத்து விட்டது.சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, என் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நான் மட்டுமல்லாமல், என்னுடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களும் உயிரிழப்பர். இதை இலங்கை அரசு உணர வேண்டும்.அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இந்தியா, இலங்கையின் அண்டை நாடு மட்டுமல்ல; இந்த பிராந்தியத்தில் உள்ள சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்று. சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவாக நான் செயல்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.




புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்கு தேவையான ராணுவ தளவாடங்களை வாங்குவதற்காகவே, அங்கு சென்றேன். புலிகளுக்கு எதிரான போரின் போது இந்த நாடுகள், இலங்கைக்கு ராணுவ ரீதியாக சில உதவிகளைச் செய்துள்ளன. ஆனால், இந்தியா அரசியல் ரீதியாகவும் இலங்கைக்கு உதவியுள்ளது. இந்தியாவுடனான இலங்கையின் உறவு, மிகவும் உயர்ந்தது. நான் அதிபரானால், எதிர்காலத்திலும் இந்த சுமுக உறவைத் தொடர்வேன்.அதிபராக தேர்வு செய்யப்பட்டால், தற்போது இலங்கையில் அதிபருக்கு உள்ள சில விசேஷ அதிகாரங்களை ஆறு மாதங்களுக்குள் ரத்து செய்வேன்; பார்லிமென்ட் தேர்தலை நடத்துவேன். ஜனநாயகம், சமூக நீதி, பத்திரிகை சுதந்திரத்துக்கு வகை செய்யும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்படும்.இவ்வாறு பொன்சேகா கூறினார்.

ஒசாமாவை தப்பிக்க விட்டது புஷ் நிர்வாகம்:அமெரிக்க செனட் உறுப்பினர் புகார்

ஆப்கானிஸ்தான் மலை பகுதியில் ஒளிந்திருந்த அல் குவைதா தலைவர் ஒசாமாவை, ராணுவ அதிகாரி உத்தரவால் பிடிக்க முடியாமல் போனது, என அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.அமெரிக்க செனட்டின் வெளிவிவகாரக்குழு தலைவர் ஜான் கெர்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே ஆப்கானிஸ்தானின், டோரா போரா மலை பகுதிகளில் ஒளிந்திருந்த அல் குவைதா தலைவர் ஒசாமாவை அமெரிக்க படைகள் சுற்றி வளைத்தன. அப்போதே, ஒசாமாவை உயிரோடு அல்லது சுட்டு வீழ்த்தி பிடித்திருக்கலாம். ஆனால், ராணுவ தலைமை அதிகாரியின் உத்தரவின் காரணமாக, அப்போது அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறி விட்டன. அப்போதே சுட்டு வீழ்த்தியிருந்தால், தொடரும் பயங்கரவாத சம்பவங்களை தடுத்திருக்கலாம். அப்போது செய்த தவறால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் இன்று பயங்கரவாதம் தாண்டவமாடுகிறது.

எதிரியை ஒழிப்பதற்காக படையோடு ஆப்கானுக்கு சென்றாகி விட்டது. அங்கு சென்ற பின் எதிரியை கொல்வதற்கு என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது? பாகிஸ்தானுக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை பகுதிகளை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு, பாகிஸ்தான் வழியை அடைத்திருந்தால், ஒசாமாவின் கதை முடிந்திருக்கும். அதை புஷ் நிர்வாகத்தில் இருந்த ரம்ஸ்பீல்டு போன்றவர்கள் செய்ய தவறி விட்டனர்.எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த தவறினால், இன்று பல நாடுகளிலும் அல் குவைதா ஆதரவுடன் பயங்கரவாதிகள் கொடி கட்டி பறக்கின்றனர்.இவ்வாறு, ஜான் கெர்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

விடுதலை புலிகள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ?

விடுதலைப்புலி தலைவர் 1989-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை உரையாற்றிய மாவீரர் தின உரைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்துக்கு பழ. நெடுமாறன் அணிந்துரை எழுதியுள்ளார். கவிஞர்கள் காசிஆனந்தன், பெருஞ்சித்திரனார் கவிதை எழுதி உள்ளனர்.இந்த புத்தக வெளியீட்டு விழா ஈழத்தில் நடந்தது. விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ்.ஜெயானந்தமூர்த்தி பேசியதாவது:-

பிரபாகரனின் மாவீரர் தின உரைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிடுவது இந்த காலக் கட்டத்தில் மிகவும் அவசியம். இந்த உரை களை படித்துப்பார்த்தால் பிரபாகரன் தன் கொள்கையில் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளார் என்பது தெளிவாகப் புரியும்.

ஈழம் நாட்டை உருவாக்க அவர் எத்தனையோ விஷயங்களில் விட்டுக் கொடுத்துள்ளார். சர்வதேச சக்திகளிடம் பேச்சு நடத்தி உள்ளார்.

ஆனால் சர்வதேச சமூகம் அவருக்கு துரோகம் செய்து விட்டன. இப்போதும் பல நாடுகள் அவருக்கு எதிராக செயல்படுகின்றன.

ஈழத் தமிழர்களின் விடுதலையே இறுதி மூச்சு என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இந்த உண்மையை தற்போதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போதைய சூழ்நிலையில் என்னால் பல விஷயங்களை வெளியில் சொல்ல இயலாது. ஈழத்தமிழர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். காலம் வரும்போது அனைத்தும் வெளியில் வரும்.

எமது தலைவர் பிரபாகரன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் தன் உடல் எதிரிகளின் கைகளில் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தவர். இதற்காகவே தன் அருகில் போராளிகளை வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் உடலை முள்ளி வாய்க்காலில் கண்டெடுத்தோம் என்று சிங்கள அரசு கூறும் கதையை சிறுபிள்ளை கூட நம்பாது.

இந்தியாவை நம்ப வைக்க இப்படி ஒரு நாடகத்தை இலங்கை அரசு நடத்தியது. எனவே நம் லட்சியத்தை அடையும் வரை அரசியல் ரீதியிலான போராட்டங்களை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.

இவ்வாறு ஜெயானந்த மூர்த்தி எம்.பி. பேசினார்.

தமிழக அரசுக்கு இளங்கோவன் பாராட்டு ?

எனது இல்லத்தில் குண்டு வீசியது தொடர்பாக தீவிரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாருக்கும், தமிழக அரசுக்கும் எனது மன மார்ந்த நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிடிப்பட்ட 3 பேரும் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள். தடை செய்யப்பட்ட தீவிரவாதத்துக்கு ஆதரவாக பேசியதால்தான் அந்த இயக்கத்தின் தலைவர் வெளிநாட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பல நேரங்களில் தீவிரவாதத்துக்கு ஆதரவாக அவர் பேசி உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலின்போது என்னை எதிர்த்து பிரசாரம் செய்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, முதல்- அமைச்சர் கருணாநிதி ஆகியோரையும் விமர்சித்து தாக்கி பேசி உள்ளார்.

என்னை தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி கொண்டு பேசி உள்ளார். உலக மக்கள் அனைவரும் தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்டு வருகிறார்கள். அப்படி ஒரு நிலைமை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தி விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, November 28, 2009

மறக்க முடியுமா 7



"வாழ்க்கை" படத்துக்குப் பின் அண்ணாவின் "ஓர் இரவு" நாடகத்தை படமாக்க ஏவி.எம். முடிவு செய்தார். கதை முழுவதும் ஒரே இரவில் நடப்பதுபோல் இந்த நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார். பழைய சம்பவங்கள் "பிளாஷ் பேக்" முறையில் சொல்லப்பட்டன.

இதை கே.ஆர்.ராமசாமி நாடகமாக நடத்தி வந்தார். இது மிகப்பெரிய வெற்றி நாடகம். இந்த நாடகத்தைப் பார்த்துவிட்டுத்தான், "தமிழ்நாட்டு பெர்னாட்ஷா" என்று அண்ணாவை "கல்கி" புகழ்ந்தார்.

இந்த நாடகத்தைப் படமாகத் தயாரிக்க விரும்புவதாக அண்ணாவிடம் ஏவி.எம். கூறினார். அதற்கு அண்ணா சம்மதித்தார். திரைக்கதை_வசனம் எழுதித்தர அண்ணாவுக்கு ரூ.10 ஆயிரம் தருவது என்று முடிவாயிற்று.

ஒரு வாரம் கழித்து, ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு அண்ணா வந்தார். அவருக்கு ஒரு அறை ஒதுக்கித் தரப்பட்டது.

இரவு டிபன் சாப்பிட்டதும், அண்ணா திரைக்கதை _ வசனம் எழுதத் தொடங்கினார். "எனக்கு ஒரு செம்பில் தண்ணீர், டம்ளர், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து விடுங்கள். நீங்கள் யாரும் எனக்காகக் காத்திருக்க வேண்டாம். திரைக்கதை_வசனத்தை எழுதி முடித்துவிட்டு, காலையில் உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன். காலையில் நான் கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்திருப்பேன். அப்போது என்னை வந்து பார்த்தால் போதும்" என்று ஏவி.எம்.மிடம் கூறினார்.

தரையில் பாய் போட்டு அமர்ந்து, முன்னால் சிறிய மேஜையை வைத்து வசனம் எழுதத் தொடங்கினார். இரவு சுமார் 10 மணிக்கு எழுதத் தொடங்கியவர், விடிய விடிய எழுதினார். அடித்தல், திருத்தல் இல்லாமல் மொத்தம் 300 பக்கங்களில் வசனத்தை எழுதி முடித்தார்.

காலையில் அவரை ஏவி.எம்.மும், ப.நீலகண்டனும் போய்ப் பார்த்தார்கள்.

"மொத்தம் 300 பக்கங்கள் எழுதி இருக்கிறேன். சினிமாவுக்கு இன்னும் ஏதாவது மாறுதல் செய்யவேண்டுமானால், தாராளமாக செய்து கொள்ளலாம்" என்று கூறினார், அண்ணா.


"ஓர் இரவு" படத்தில், ஆரம்பத்தில் இளைஞராகவும், பின் வயோதிகராகவும் வரும் முக்கிய வேடத்தில் டி.கே.சண்முகம் நடித்தார். அவருக்கு ஜோடி பி.எஸ்.சரோஜா. இளம் ஜோடியாக ஏ.நாகேஸ்வரராவ் _ லலிதா நடித்தனர். நாடகத்தில் நடித்த "கேரக்டர்" வேடத்தில் கே.ஆர். ராமசாமி நடித்தார்.

நாடகத்துக்கும், படத்துக்கும் ஒரு முக்கிய மாறுதல் இருந்தது. நாடகத்தில் பிளாஷ்பேக் முறையில் சொல்லப்பட்ட பழைய சம்பவங்கள், படத்தில் நேரடியாக சொல்லப்பட்டன. இடைவேளைக்குப் பிறகு வரும் சம்பவங்கள்தான் ஒரே இரவில் நடப்பவை.

ஏவி.எம்.மின் துணை டைரக்டராக இருந்து வந்த ப.நீலகண்டன், இப்படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட "ஓர் இரவு" 1951 ஏப்ரல் 11_ந்தேதி வெளிவந்தது. ஆனால், நாடகத்துக்குக் கிடைத்த வெற்றி படத்துக்கு கிடைக்கவில்லை.

இதுபற்றி ஏவி.எம். தமது வாழ்க்கை வரலாற்றில், "ஓர் இரவு படம் நாங்கள் எதிர்பார்த்தபடியோ அல்லது எங்களது முந்திய படங்களான நாம் இருவர், வாழ்க்கை ஆகிய வெற்றிப்படங்களோடு ஒப்பிடுகிற மாதிரியோ ஓடவில்லை. நாடகம் வெற்றிகரமாக அமைந்த அளவுக்கு, படம் வெற்றிகரமாக வரவில்லை.

அண்ணா எழுதிக் கொடுத்ததை நாங்கள் திருத்தி அமைத்ததாலோ, இதுதான் சினிமாவுக்கு ஒத்துவரும் என்று எங்கள் டைரக்டர் நினைத்ததாலோ, எந்தக் காரணத்தினாலோ, எதிர்பார்த்த அளவுக்கு அந்தப்படம் வெற்றி தரவில்லை. ஆயினும் நல்ல படமாகவே அமைந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, 1949 ஜுன் மாதத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது. அப்போது முதல்_அமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஏவி.மெய்யப்ப செட்டியாரை அழைத்துப் பேசினார்.


"பாரதியார் பாடல்களின் உரிமையை நீங்கள் வாங்கி வைத்திருப்பதாக அறிந்தேன். பாரதியார் போன்ற தேசிய மகாகவியின் பாடல்கள் நாட்டின் பொதுச் சொத்தாக இருக்கவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் எவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் சொல்லுங்கள். அந்தப் பணத்தை அரசாங்கத்திலிருந்து கொடுத்து விடுகிறோம்" என்று கூறினார், முதல்_அமைச்சர்.

ஏவி.எம். கொஞ்சம்கூட தயங்காமல், "பாரதியார் பாடல்களின் உரிமையை, இந்த கணமே அரசாங்கத்துக்கு கொடுத்து விடுகிறேன். அதற்காக ஒரு ரூபாய் கூட வேண்டாம். எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் இதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்று பதில் அளித்தார்.

இதன்படியே, பாரதியார் பாடல் உரிமையை அரசாங்கத்துக்கு மாற்றி முறைப்படி பத்திரம் எழுதிக்கொடுத்தார். இதற்காக தலைவர்களும், பிரமுகர்களும் ஏவி.எம்.முக்கு பாராட்டு தெரிவித்தனர்

மறக்க முடியுமா 6

ஏவி.எம். தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம், ஏவி.எம்.ஸ்டூடியோவின் முதல் கலர்ப்படம் என்ற பெருமைக்கு உரியது "அன்பே வா." எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி ஜோடியாக நடித்தார். நடிகர் அசோகன், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர். ஏவி.எம். சரவணனுக்கும் நண்பர்.

"ஏவி.எம். பெரிய படக்கம்பெனி. அதில் நீங்கள் நடிக்க வேண்டும்" என்று எம்.ஜி.ஆரிடம் அசோகன் அடிக்கடி கூறுவார். அதேபோல் சரவணனிடம், "எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய நடிகர்! அவரை வைத்து நீங்கள் படம் பண்ண வேண்டாமா? என்று கேட்பார்.

அசோகன் முயற்சியால் "அன்பே வா" படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். மொத்தம் 72 நாள் "கால்ஷீட்" கொடுத்தார். "அன்பே வா" படத்திற்கான கதையை ஏ.சி.திருலோகசந்தர் எழுதினார். கதை, முழுக்க முழுக்க எம்.ஜி. ஆர். பாணியில் இருந்து மாறுபட்டது.

எஸ்டேட் ஒன்றின் சொந்தக்காரரான எம்.ஜி.ஆர், தான் யார் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் எஸ்டேட் பங்களாவில் தங்குகிறார். அங்கு சரோஜாதேவியை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே ஏற்படும் காதலையும், ஊடலையும் வைத்து, கதை சுவையாகப் பின்னப்பட்டிருந்தது. அரசியல் பிரசாரம் அறவே இல்லை.

இதற்கு ஆரூர் தாஸ் வசனம் எழுதினார். இசை எம்.எஸ்.விசுவ நாதன். பாடல்கள் வாலி. டைரக்ஷன் திருலோகசந்தர். சிம்லா, ஊட்டி முதலிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

1966 பொங்கல் தினத்தன்று வெளியான "அன்பே வா" மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது.

நடிப்பு, இசை, படப்பிடிப்பு எல்லாமே தரமாக அமைந்திருந்தன.

"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்", "புதிய வானம் புதிய பூமி", "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தி யைத்தான்", "அன்பே வா", "லவ் பேர்ட்ஸ்" முதலிய பாடல்கள் ஹிட்டாயின.

எம்.ஜி.ஆர். அதுவரை நடித்த மிகப்பெரிய வெற்றிப்படங்களில் "அன்பே வா"வும் ஒன்று. இந்தப் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகை ரூ.3 லட்சம். சரோஜா தேவிக்கு ரூ.90 ஆயிரம்.


"அன்பே வா" படத்தில் சிறந்த காட்சி எது? என்று ரசிகர்களுக்குப் போட்டியும் நடந்தது. "அன்பே வா" படத்துக்குப்பின் "மேஜர் சந்திரகாந்த்", "அதே கண்கள்", "ராமு" முதலிய படங்களை ஏவி.எம். தயாரித்தது.

மறக்க முடியுமா 5

ஜவுளித் தொழிலில் ஈடுபட லண்டனில் படித்த டி.ஆர்.சுந்தரம் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவை அமைத்து சாதனை. ஜெமினி, ஏவி.எம். ஆகிய ஸ்டூடியோக்களைப்போல, தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய ஸ்டூடியோ "மாடர்ன் தியேட்டர்ஸ்." இங்கு 100_க்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கப்பட்டன.

சென்னைக்கு வெளியே சேலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஸ்டூடியோ, மிகப்பிரபலமான நடிகர்_நடிகைகளை நடிக்க வைத்து, வெற்றிப்படங்களைத் தயாரித்தது.

இந்த ஸ்டூடியோவின் அதிபரான டி.ஆர்.சுந்தரம், சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டில் 1907 ஜுலை 16_ந்தேதி பிறந்தவர். இவருடைய தந்தை வி.வி.சி. ராமலிங்க முதலியார், மில்களில் இருந்து நூலை வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வந்தார். அவருடைய ஐந்தாவது மகன் தான் டி.ஆர்.சுந்தரம். தாயார் பெயர் கணபதி அம்மாள்.

ஆரம்பக் கல்வியை சேலத்தில் கற்ற சுந்தரம், சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, "பி.ஏ" மற்றும் "பி.எஸ்.சி" பட்டங்கள் பெற்றார். அதன் பிறகு சுந்தரம் லண்டனுக்குச் சென்றார். ஜவுளித் தொழிலில் உயர் கல்வி பயின்றார். நூல்களுக்கு வண்ணம் சேர்க்கும் தொழில் நுட்பத்தை கற்றறிந்தார்.

லண்டனில் டி.ஆர்.சுந்தரத்துக்கும், கிளாடிஸ் என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். சுந்தரத்துக்கு பெரிய இடங்களில் இருந்து எல்லாம் பெண் கொடுக்க பலர் தயாராக இருந்தனர். ஆனால் அவரோ, குடும்பத்தினரின் எதிர்பார்ப்புக்கு மாறாக, வெள்ளைக்காரப் பெண்ணை மணந்து கொண்டு சேலம் திரும்பினார்

எனினும், சுந்தரத்தின் மீது அவருடைய உறவினர்கள் எவரும் கோபம் கொள்ளவில்லை. சுந்தரத்தின் சகோதரர் முருகேச முதலியாரும், மற்ற உறவினர்களும் சுந்தரத்துக்கும் அவருடைய மனைவிக்கும் மாலை அணிவித்து வரவேற்றனர்.

ஜவுளித் தொழிலில் உயர் படிப்பு படித்திருந்த சுந்தரத்துக்கு, அந்த தொழிலின் மீது ஆர்வம் ஏற்படவில்லை. லண்டனில் இருந்து அவர் சேலம் திரும்பியபோது (1933_ல்) சேலத்தில் "ஏஞ்சல் பிலிம்ஸ்" என்ற கம்பெனி சினிமாப் படங்கள் எடுத்து வந்தது. சினிமாத் தொழிலில் ஆர்வம் கொண்ட டி.ஆர்.சுந்தரம், ஏஞ்சல் பிலிம் அதிபர்களான வேலாயுதம் பிள்ளை, சுப்பராய முதலியார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து சினிமா படம் தயாரிக்கலானார்.

1933 முதல் 35 வரை, இரண்டு படங்களைத் தயாரித்தார். இரண்டு படங்களும் சுமாராகத் தான் ஓடின. அக்காலத்தில், படம் தயாரிப்பதற்கு கல்கத்தாவுக்குப் போக வேண்டிய நிலை இருந்தது. `எதெற்கெடுத்தாலும் கல்கத்தாவுக்கு போகவேண்டி இருக்கிறதே, அதற்கு பதிலாக சேலத்திலேயே ஸ்டூடியோ அமைத்தால் என்ன?' என்ற கேள்வி டி.ஆர்.சுந்தரத்தின் மனதில் எழுந்தது.

இந்த சிந்தனை செயல் வடிவம் பெற்றது. சேலம் _ ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தை சுந்தரம் வாங்கினார். "ஸ்டூடியோவுக்குள் நுழைந்தால், அங்கேயே முழுப்படத்தையும் தயாரிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் இருக்கவேண்டும்" என்று நினைத்தார்.

படப்பிடிப்பு தளம், "லேப்", பாடல் பதிவு செய்வதற்கான ரிக்கார்டிங் அறை, படத்தை போட்டுப்பார்க்க ஒரு தியேட்டர் _ இத்தனை வசதிகளுடனும், 1935_ல் "மாடர்ன் தியேட்டர்ஸ்" ஸ்டூடியோ உதயமாகியது.

இதன்பின், படத்தயாரிப்பில் தீவிரமாக இறங்கினார், சுந்தரம். முதல் தயாரிப்பாக "சதி அகல்யா" என்ற படத்தை தயாரித்தார். பிற்காலத்தில் "கவர்ச்சிக் கன்னி"யாகத் திகழ்ந்த இலங்கைக் குயில் தவமணிதேவிதான் இந்தப்படத்தின் கதாநாயகி.

1937_ல் வெளிவந்த இந்தப்படம், நல்ல வெற்றி பெற்றது. தொடர்ந்து, "பத்மஜோதி" என்ற படத்தையும் "புரந்தரதாஸ்" என்ற கன்னடப் படத்தையும் தயாரித்தார். 1938_ல், "பாலன்" என்ற மலையாளப் படத்தைத் தயாரித்தார். மலையாள மொழியின் முதல் பேசும் படம் இதுதான். இப்படம் வெற்றிகரமாக ஓடியது.

பின்னர் சுந்தரம் தயாரித்த படம் "நாம தேவர்." இது, தமிழில் வெளியான 100_வது படம் என்ற பெருமையைப் பெற்றது. 1938_ம் ஆண்டில் "மாயா மாயவன்" என்ற படத்தை சுந்தரம் தயாரித்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் சண்டைப்படம் இது. இதில், டி.கே.சம்பங்கி என்ற பிரபல நாடக நடிகர் கதாநாயகனாக நடித்தார். நொட்டானி என்பவர் டைரக்ட் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, எம்.எம். தண்டபாணி தேசிகரும் அவர் மனைவி தேவசேனாவும் நடித்த "தாயுமானவர்" படத்தைத் தயாரித்தார். அதை டி.ஆர்.சுந்தரமே டைரக்ட் செய்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த அடுத்த படம் "சந்தனத்தேவன்". ஆங்கிலக் கதையான "ராபின்ஹுட்"டைத் தழுவி, இப்படம் தயாரிக்கப்பட்டது. படத்தின் கதாநாயகன் ஜி.எம். பஷீர். படம் வெற்றி பெற்றது.

தன்னுடைய படங்கள், தொழில் நுட்பத்தில் சிறந்தவையாக அமைய வேண்டும் என்று சுந்தரம் விரும்பினார். ஜெர்மனியில் இருந்து வாக்கர், பேய்ஸ் என்ற இரண்டு கேமராமேன்களை வரவழைத்தார். இவர்கள் தந்திரக்காட்சிகள் எடுப்பதில் வல்லவர்கள். இவர்களிடம் பயிற்சி பெற்ற டபிள்யு.ஆர்.சுப்பாராவ், ஜே.ஜி.விஜயம் ஆகியோர், பிற்காலத்தில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களாகத் திகழ்ந்தனர்.

படத்தில் நடிகர்_நடிகைகளின் பெயர்களையும், கலைஞர்களின் பெயர்களையும் காண்பிக்கும் "டைட்டில்" காட்சியில் படத்துக்குப்படம் புதுமையைப் புகுத்தினார். "டைட்டில்" காட்சிக்கு எவ்வளவு செலவானாலும் கவலைப்படமாட்டார்.

டி.ஆர்.சுந்தரம் தமது ஸ்டூடியோவில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல் நடத்தினார். நடிகைகள் உள்ள பகுதிக்கு, நடிகர்கள் போகக்கூடாது. கதை_வசனம் முழுமையாகத் தயாரான பிறகுதான், நடிகர்_நடிகைகள் யார் என்பது முடிவாகும். நன்றாக ஒத்திகை பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும்.

நகைச்சுவை நடிகர்கள் காளி என்.ரத்தினம், டி.எஸ்.துரைராஜ், வி.எம்.ஏழுமலை, ஏ.கருணாநிதி ஆகியோர், இங்கு மாத சம்பளத்துக்கு வேலை பார்த்தனர். படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் தொடங்கி, குறிப்பிட்ட தேதியில் முடியவேண்டும் என்பதில் சுந்தரம் கண்டிப்பாக இருந்தார்.

தறி கேட்டு போகும் தமிழ் சினிமா ?

மறக்க முடியுமா 4



"வல்லவன் ஒருவன்" படத்திற்குப் பிறகு "எதிரிகள் ஜாக்கிரதை" என்றொரு படத்தை ராமசுந்தரம் தயாரித்தார். இதில், ரவிச்சந்திரன், எல்.விஜயலட்சுமி, மனோகர் ஆகியோர் நடித்தனர். 1966_ல் வெளிவந்த இப்படம் ஏறக்குறைய ஸ்டண்ட் படம் போலவே இருந்தது.

மாறுதலுக்காக ஒரு சமூகப் படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கம்பெனி டைரக்டர்கள் கூறியதால், "காதலித் தால் போதுமா" என்ற படம் தயாராயிற்று. ஜெய்சங்கர், வாணிஸ்ரீ ஆகியோர் நடித்தனர். இது ஓரளவு வெற்றிப் படமே.

பின்னர், சிறையில் இருந்து தப்பி வரும் 4 கைதிகளை மையமாக வைத்து, வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் ஒரு கதையைத் தயாரித்தார். இக்கதையை "நான்கு கில்லாடிகள்" என்ற பெயரில் ராமசுந்தரம் படமாகத் தயாரித்தார். இதில் ஜெய்சங்கர், மனோகர், ஆனந்தன், ஓ.ஏ.கே.தேவர், தேங்காய் சீனிவாசன், சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் நடித்தனர். காமெடி கலந்த இப்படம், நன்றாக ஓடியது.

தன் தந்தையைப் போலவே, ஆங்கில நாவல்களைப் படிக்கும் பழக்கம் ராமசுந்தரத்துக்கு இருந்தது. நிறைய படித்தார். பட உலகத்தின் நெளிவு _ சுளிவுகளை ஓரளவு தெரிந்து கொண்டார். ஆயினும் 1970_ல் அவர் எடுத்த "கருந்தேள் கண்ணாயிரம்" என்ற படம், தோல்வி அடைந்தது.

இதனால் சோர்வடைந்த ராமசுந்தரம், படம் எடுப்பதை சில நாட்கள் ஒத்திவைத்தார். படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன? வெற்றிப் படங்களுக்கு `பார்முலா' என்ன என்று தீவிரமாக ஆலோசித்தார். தந்தையிடம் பணிபுரிந்த பலரிடமும் கலந்து பேசினார்.

இதன்பின், தீர ஆலோசித்த பிறகு 1972_ல் "தேடி வந்த லட்சுமி" என்ற படத்தை எடுத்தார். இதில் ஜெய்சங்கர், லட்சுமி ஆகியோர் நடித்தனர். படம் சுமாராக ஓடியது. பின்னர் எடுத்த பிராயசித்தம் (1974), வல்லவன் வருகிறான்(1979), காளி கோவில் கபாலி (1979), துணிவே தோழன் (1980), அன்று முதல் இன்று வரை (1981), வெற்றி நமதே (1982) ஆகிய படங்கள் சாதாரண படங்களாக அமைந்தன.

தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்ததால், ராமசுந்தரம் உற்சாகம் இழந்தார். ஆலோசனைகள் கூறுவதற்கு தகுந்த நபர்கள் இல்லை. சுமாரான படங்களையே தயாரித்ததால், படங்களை மிகவும் குறைந்த விலைக்கு விநியோகஸ்தர்கள் கேட்டனர். இதனால் கம்பெனியின் வருவாய் மிகவும் குறைந்து போயிற்று.

மேற்கொண்டு படம் தயாரித்தால் நஷ்டம் தான் என்ற நிலை ஏற்பட்டதால், படம் தயாரிப்பதை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. இதனால் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவை மூடிவிட ராமசுந்தரம் வருத்தத்துடன் முடிவு எடுத்தார்.

"தரமான படங்களைத் தொடர்ச்சியாக தயாரித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய நிறுவனம், தயாரிப்பை நிறுத்தி விட்டதால், சினிமா உலகமே வருந்தியது. இதற்காக வெளி நபர்கள் யார் மீதும் குறை சொல்ல முடியாது. முழுக்க முழுக்க இது ஸ்டூடியோவின் நிர்வாகத்தில் இருந்த சிலரின் அசிரத்தையால் தான் நடந்தது என்று கலையுலக வல்லுனர்கள் பேசிக்கொண்டார்கள்" என்று, டி.ஆர்.சுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

1937 முதல் 1982 வரை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த மொத்த படங்கள் 136. அதில் தமிழ் 102; தெலுங்கு 13; கன்னடம் 4; மலையாளம் 8; இந்தி 1; ஆங்கிலம் 1; சிங்களம் 7. சிறந்த பிராந்திய மொழிப்படமாக, குமுதம் (1961) படத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்தது. அதற்கான பரிசை அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் இருந்து டி.ஆர்.சுந்தரம் பெற்றார்.

பிறகு, "வல்லவனுக்கு வல்லவன்" படத்துக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. அதை, அன்றைய முதல்_ அமைச்சர் எம்.ஜி.ஆரிடம் இருந்து ராமசுந்தரம் பெற்றார். "கலைமாமணி" விருதும் அவருக்கு கிடைத்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான முதல் மலையாள வண்ணப்படமான "கண்டம் பெச்ச கோட்டு" என்ற படமும், சிறந்த பிராந்திய மொழிப்படத்துக்கான பரிசைப் பெற்றது.

சென்னைக்கு வெளியே தொடங்கப்பட்ட சினிமா ஸ்டூடியோக்களில் நீண்ட காலம் இயங்கியது, அதிக படம் தயாரித்தது என்ற பெருமை மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை டி.ஆர்.சுந்தரம் கடைப்பிடித்ததால் இது சாத்தியம் ஆயிற்று.

ஊழியர்களுக்கு குறித்த தேதியில் சம்பளம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார், சுந்தரம். "கடன் வாங்கிப் படம் எடுக்காதவர்" என்ற புகழும் அவருக்கு உண்டு. டி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகத்தை கவனித்து வந்த ராமசுந்தரம் 23_2_1993_ல் மரணம் அடைந்தார்.

அவர் மறைவுக்குப் பிறகு, அவர் மனைவி கலைவாணி ராமசுந்தரம், கம்பெனியில் கணவருக்கு இருந்த நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று ஒழுங்குபடுத்தினார். கம்பெனியின் வருவாயை பெருக்கும் வகையில், மாடர்ன் தியேட்டர்ஸ் ஒத்திகை மண்டபம் இருந்த இடத்தில் நவீன வசதிகளுடன் "டி.ஆர்.எஸ். திருமண மண்டபம்" கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் திறப்பு விழா 1_12_1995 அன்று நடந்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடத்தில் இப்போது "சுந்தர் அப்பார்மெண்ட்" என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ நுழைவு வாயில் மட்டும் இன்னமும் ஞாபகச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் எழுத்தாளரின் கவிதை

சொர்க்க வாசல் - அனுபமா உதிவ்

ஆடுகின்ற பொம்மையினால்
ஆட்டம்போடும் குழந்தை!
ஆடாத தொட்டினிலே
அழுதிடுமே குழந்தை!

எறும்பில்லாப் புற்றினில்
பாம்புகள் புகுந்துவிடும்
பூசையில்லாக் கோவிலில்
வௌவால்கள் குடியிருக்கும்!

இடம்பெயர்ந்து போனால்தான்
கடும்பாறை படிக்கட்டாம்
அப்படியே இருந்தாலே
நடத்தாலும் பிணந்தானே!

நறுங்கிப்போன சிறுவண்டும்
நறுந்தேனைத் தேடுதே!
நல்லுறவைக் காணாது
நெற்பறவை வாடுதே!

காற்றுகூட புகுந்து
மூங்கில் இசையாகுமே!
கான மயில் இரைதேடி
நீர்த் திசைபோகுமே!

கருவாடு கடல்தேடி
மீண்டும் திரும்புமா?
இறந்து போன நிகழ்காலம்
மீண்டும் அரும்புமா?

சொர்க்க வாசல் கதவு
ஒருமுறைதான் திறக்கும்

தலிபான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் ?

பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் ஒரு டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது பாகிஸ்தானில் இருந்து நாசவேலையில் ஈடுபட்டிருக்கும் தலிபான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள்ளும் புகுந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்களை அழிக்க இந்தியா எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் உண்மையுடன் நடந்து வருகிறது. மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஸ்கர் இ-தொய்பா தலைவர் ஜாகீர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 7 பேர் மீது ராவல் பிண்டி தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு ரகசியமாக திட்டமிட்ட லக்வி உள்பட 7 பேரையும் தெளிவான ஆதாரத்துடன் கைது செய் துள்ளோம். இருந்தும் இந் தியா மேலும் நடவடிக்கை எடுக்கும்படி எங்களை வலி யுறுத்துவது ஆச்சரியமாக உள்ளது.

இந்த விஷயத்தில் இந்தி யாவுடன் வேறு நாடுகளும் உத்தரவிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.


இவ்வாறு அவர் கூறினார்.

சத்யமேவ ஜயதே - இன்னமும் நம்பும் நீதிபதி ?

"சத்யமேவ ஜயதே என்ற வாக்கியம் பொறிக்கப்படாத நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, இந்திய அரசின் சின்னம் ஒழுங்காக எல்லா இடங்களிலும் பொறிக்கப்பட வேண்டும் என்று நான் எப்படி தீர்ப்பளிக்க முடியும்?' என்று கேட்டுள்ளார் ஐகோர்ட் தலைமை நீதிபதி. "சத்யமேவ ஜயதே வாக்கியம் பொறிக்கப்படாத அரசு சின்னம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. எனவே அரசு கட்டடங்கள், ஆவணங்கள், வாகனங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்திலும் அரசு சின் னம் அந்த வாக்கியத்தோடு முறையாகப் பொறிக்கப்பட்டிருக்க வேண் டும்' என்று சமீபத்தில் ஒரு பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.


அதன் படி, நீதிபதிகளின் நாற்காலியில் உள்ள அரசு சின்னத்தில் அந்த வாக்கியம் பொறிக்கப்பட்டது. கோல்கட்டா ஐகோர்ட் தற்காலிக தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச் சார்யா முன் ஒரு பொதுநல வழக்கு வந்தது. அதில்,"இந்திய அரசு சின்னமான அசோக சக்கரத்துடன் "சத்யமேவ ஜயதே' என்ற வாக்கியத்துடன் எல்லா இடங்களிலும் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு உறுதி செய்யப்பட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வக்கீல், நீதிபதியின் நாற்காலியில் கூட "சத்யமேவ ஜயதே' என்ற வாக்கியம் பொறிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். அதோடு நீதிபதிகளின் பியூன்கள் சட்டையில் பொருத்தப்பட்டுள்ள வில்லையில் அந்த வாக்கியம் தாறுமாறாகக் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


உடனே நீதிபதி, "சத்யமேவ ஜயதே பொறிக்கப்படாத நாற்காலியில் இருந்து கொண்டு, அரசு சின் னம் முறையாகப் பொறிக்கப் பட்டுள்ளதா என்று உறுதிசெய்யப் பட வேண்டும் என நான் எப்படி உத்தரவிட முடியும்? நான் இந்த நாற்காலியில் உட்கார மாட்டேன்" என்று மறுத்து, சென்று விட்டார். இடைவேளைக்குப் பிறகு அவர் சாதாரண நாற்காலியைப் போட வைத்து அதில்தான் அமர்ந்தார்.

சினிமா உலகத்தை மிரட்டும் மினி பட்ஜெட் படங்கள்

புதுமுகங்கள் நடிக்க, கிராமத்து பின்னணியில், `பொற்கொடி 10-ம் வகுப்பு' என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. அன்புக்காக ஏங்கும் உண்மையான உள்ளங்களின் உணர்வுகளை கதைக்களமாக கொண்ட படம் இது.

பிரவீன்-பிருந்தா அறிமுக ஜோடியுடன் பாலாசிங், ராஜஸ்ரீ, ஜெயசூரியகாந்த், புதுமுகம் அங்கமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீ முருகன் ஒளிப்பதிவு செய்ய, ஓவியன் இசையமைக்க, முத்து விஜயன், யுகபாரதி ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

நிï டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பில் எல்.இ.பிரபு தயாரிக்க, திரைக்கதை-வசனம்-டைரக்ஷன்: பழ.சுரேஷ். படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், ஆந்திர எல்லையான கனகம்மா சத்திரம், காவேரிராசபுரம், ஸ்ரீ ஹரிபுரம், சின்ன ஜம்பாட ஆகிய இடங்களில் நடைபெறு.

பாவாடை-தாவணியில் அவிழ்க்காமல் வரும் சுனைனா

எல்லாமே என் காதலர்தான்...என்று வாழ்ந்த ஒரு பெண்ணின் கதை, `யாதுமாகி' என்ற பெயரில் படமாகி இருக்கிறது. அமராவதி, ஒரு கல்லூரியின் கதை, காலாட்படை உள்பட பல படங்களை தயாரித்த சோழா கிரியேஷன்ஸ் சோழா பொன்னுரங்கம் வழங்க, சக்தி சங்கவி, மோகன சங்கவி ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

புதுமுகம் சச்சின் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர், படம் முழுக்க பாவாடை-தாவணியில் வருகிறார். சுனைனாவின் தந்தையாக பிரபல பட அதிபர் தமிழ்மணி நடித்துள்ளார். இவர்களுடன் ரியாஸ்கான், ரமேஷ்கண்ணா, எஸ்.எஸ்.குமரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் வருகிறார்கள்.

பாலகுமார் டைரக்டு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசை யமைத்து இருக்கிறார்.

கே.பாலசந்தர் வழங்கும் கவிதாலயா தயாரிக்கும் 59-வது

கே.பாலசந்தர் வழங்கும் கவிதாலயா தயாரிக்கும் 59-வது படம் முறியடி. ஜீவன் நடிக்க கிருஷ்ணலீலை திரைப்படத்தை தயாரித்து வரும் இந்த நிறுவனம். தொடர்ந்து வினய் நடிக்கும் நூற்றுக்கு நூறு படத்தை எடுக்கிறது. இதற்கிடையில் குறுகிய கால தயாரிப்பாக முறியடி திரைப்படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது.


சத்யராஜ், கணேஷ் வெங்கட்ராம், ரம்யாநம்பீசன், ஜெய்பிரகாஷ், ராஜ்கபூர், ராஜா மற்றும் பலர் நடிக்கின்றனர். எடிட்டிங் -சுரேஷ்அர்ஸ், வசனம்-ஷக்தி கிருஷ்ணா, இசை- டி.இமான், ஒளிப்பதிவு -பாலமுருகன், திரைக்கதை இயக்கம்- செல்வா, தயாரிப்பு-புஷ்பா கந்தசாமி. வேகமாக ஓடும் இன்றைய வாழ்க்கையில் அடுத்தவர்களுக்கு உதவி செய்வது என்பது முடியாத காரியமாகி விடுகிறது. ஆனால் தேவன் என்ற சாதரான மனிதன் செய்த உதவியால் என்ன நடக்கிறது என்பதே கதையின் கரு.

தேவன் கதராபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். சமூக விரோதிகள் தீட்டும் சதி திட்டத்தை முறியடிக்க போராடும் இளைஞனாக கணேஷ்வெங்கட்ராம். ஒரு பெண்ணின் தையரித்தை வெளிபடுத்தும் கதாபாத்திரத்தில் ரம்யாநம்பீசன். ரசிகர்கள் என்றைக்கும் வித்தியாசமான திரைபடத்திற்கு பெரும் ஆதரவை தருகிறார்கள். அந்த வரிசையில் இந்த படத்தின் திரைக்கதை மக்களின் ரசனைகேற்ப அமைந்துள்ளது என்றார் இயக்குனர்.

இளங்கோவன் வீட்டில் குண்டு - மதுரை என்ஜினீயர் கைது ?

முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.ஸ். இளங்கோவனின் வீடு அடையாறு இந்திரா நகரில் உள்ளது. இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது இளங்கோவன் வீட்டில் இல்லை. அவரது உதவியாளர் மோசஸ் மட்டும் வீட்டில் இருந்தார். வெடிச்சத்தம் கேட்டு கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். கதவு அருகில் கண்ணாடி துகள்கள் சிதறிக்கிடந்தன. பிளாஸ்டிக் சேர் தீயில் கருகி கிடந்தது. பெட்ரோல் வாசனை வீசியது.

இதுகுறித்து அவர் உடனடியாக அடையாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

உதவி கமிஷனர் கார்த்தி கேயன், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக டைரக்டர் சீமான் ஆதரவாளர்களான மித்ரன், மணி, அருள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மித்ரன் டைரக்டர் சீமானிடம் உதவி இயக்குனராக உள்ளார். கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களுடன் மதுரையை சேர்ந்த என்ஜினீயர் விஜயகுமார் (வயது 30) என்பவரும் காரில் வந்துள்ளார். இவர் டைரக்டர் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தில் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீஸ் தேடுவதை அறிந்ததும் விஜயகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிப்பதற்காக சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்துள்ளனர்.

மறக்க முடியுமா 3

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமான "ஆயிரத்தில் ஒருவன்" மாபெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்தது. சிவாஜிகணேசனை வைத்து, பல படங்களை எடுத்தவர், பி.ஆர்.பந்துலு. அவரது "வீரபாண்டிய கட்டபொம்மன்" மகத்தான வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது.

பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த "கர்ணன்", "கப்பலோட்டிய தமிழன்" ஆகிய படங்கள் தரமானவையாக இருந்த போதிலும், போதிய வசூல் இல்லை. கடன் சுமையினால் பந்துலு தவித்தார்.

கடனில் இருந்து மீள, எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கத் தீர்மானித்தார். எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினார். அவர் படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டு, கால்ஷீட் கொடுத்தார். "ஆயிரத்தில் ஒருவன்" என்ற பெயரில், படத்தை பிரமாண்டமாக கலரில் தயாரிக்க பந்துலு ஏற்பாடு செய்தார்.

கதாநாயகியாக ஜெயலலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். மற்றும் எம்.என்.நம்பியார், மனோகர், ராம்தாஸ், நாகேஷ், எல்.விஜயலட்சுமி, மாதவி ஆகியோரும் நடித்தனர்.

நாடோடி மன்னன் கதை எவ்வாறு திருப்பங்களோடும், விறுவிறுப்பான சம்பவங்களோடும் உருவாக்கப்பட்டதோ, அதுபோல் "ஆயிரத்தில் ஒருவன்" கதையும் நவரசங்களுடன் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டது.

ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து மணிமாறன் என்ற இளைஞன் நடத்தும் போராட்டமே கதையின் மையக்கரு. கடல், கப்பல், அடிமைகள் என்று, மேல்நாட்டுப் படங்களைப் போன்ற பிரமாண்டமான பின்னணியில் கதை உருவாகியது. ஆர்.கே.சண்முகம் வசனம் எழுதினார்.

கண்ணதாசனும், வாலியும் பாடல்களை எழுத, விஸ்வநாதன் _ ராமமூர்த்தி இசை அமைத்தனர். பந்துலு டைரக்ட் செய்தார். படத்தின் பெரும் பகுதி கோவாவிலும், அதன் அருகே கடல் பகுதியிலும் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் கடல் சண்டை, ஏராளமான பொருட்செலவில் ஆங்கிலப்படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டது.

9_7_1965_ல் "ஆயிரத்தில் ஒருவன்" வெளிவந்தது. முதல் காட்சியிலேயே அது "மெகா ஹிட்" படம் என்பது தெரிந்து விட்டது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர். அவர்கள் ஏராளமான படங்களில் இணைந்து நடிக்க, "ஆயிரத்தில் ஒருவன்" வழிவகுத்தது.

கருத்தாழம் மிக்க இனிய பாடல்கள், படத்தின் வெற்றிக்குத் துணை புரிந்தன. கண்ணதாசன் எழுதிய அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்", "நாணமோ", "ஓடும் மேகங்களே" ஆகிய பாடல்களும், வாலி இயற்றிய "பருவம் எனது பாடல்", "உன்னை நான் சந்தித்தேன்", "ஆடாமல் ஆடுகிறேன்", "ஏன் என்ற கேள்வி" ஆகிய பாடல்களும் திக்கெட்டும் எதிரொலித்தன.

பி.ஆர்.பந்துலு, வசூல் மழையில் நனைந்தார். கடன் பிரச்சினையில் இருந்து மீண்டார். 1965_ல் எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் ஆகியவை தவிர, பணம் படைத்தவன், கலங்கரை விளக்கம், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களிலும் எம்.ஜி.ஆர். நடித்தார்.

"கலங்கரை விளக்கம்" ஜி.என்.வேலுமணி தயாரித்த படம். வசனத்தை சொர்ணம் எழுத, கே.சங்கர் டைரக்ட் செய்தார். "காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்" என்ற புகழ் பெற்ற வாலியின் பாடல் இடம் பெற்ற படம் இது.

"கன்னித்தாய்" _ தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார். இதற்கு வசனம் எழுதியவர் ஆர்.கே.சண்முகம். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, எம.ëஏ.திருமுகம் டைரக்ட் செய்தார். பத்மா பிலிம்ஸ் தயாரித்த படம் "தாழம்பூ". இதில் எம்.ஜி.ஆருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்தார். எஸ்.ராமதாஸ் டைரக்ட் செய்தார்.

மலையாள எழுத்தாளர் கொட்டாரக்கரா எழுதிய கதை. "சஸ்பென்ஸ்" நிறைந்த படம். "ஆசை முகம்", மோகன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.எல்.மோகன்ராம் தயாரித்த படம். எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

தொடக்கத்தில், துறைïர் மூர்த்தி வசனம் எழுதினார். எம்.ஜி.ஆருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அவர் விலகிக் கொண்டார். எனவே, ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். எஸ்.எம்.சுப்பையா இசை அமைத்தார். பி.புல்லையா டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அத்துடன் எம்.ஜி.ஆர். போல முகத்தை மாற்றிக்கொண்டு வில்லன் குழப்பங்கள் செய்வான். எனவே, எம்.ஜி.ஆர். மூன்று வேடங்களில் தோன்றினார்.

அர்ச்சகரின் அக்கௌண்டில் ரூபாய் எண்பது லக்ஷம் ?


காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக பணி புரிந்து வந்தவர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில் காஞ்சீபுரம் கோர்ட்டில் தேவநாதன் சரண் அடைந்தார். அவரை 2 முறை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் விசாரணையில் அர்ச்சகர் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பெண்கள் யார்-யார் என்பது தெரிய வந்துள்ளது.

அர்ச்சகர் தேவநாதன் 25 பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. இதில் குண்டு பெண் ஒருவர் கருவறையில் வைத்து தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்ற சி.டி.யும் ஒன்று அந்த பெண் யார் என்பது தற்போது அடையாளம் தெரிந்துள்ளது. கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் அப்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பெரிய இடத்துப் பெண்கள் (தொழில் அதிபர்களின் மனைவிகள்) 3 பேரும் அர்ச்சகரின் வலையில் விழுந்துள்ளனர். 2 பள்ளி மாணவிகளின் வாழ்க்கையையும் தேவநாதன் நாசப்படுத்தியுள்ளார். விப சார அழகிகள் 3 பேரும் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இவர்கள் அனைவரிட மும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விசாரணை மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது.

அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளார். இதற்காக கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை பணத்தையும் திருடியுள்ளார்.

இந்த பணத்தை வைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டல்களிலும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த பெண்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு தப்பிச்சென்று விட்டனர்.

இவர்களது பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே சிவகாஞ்சி போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நேற்று இரவு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமயில் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணயை தொடங்கியுள்ளனர்.

காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து பெண்களை ஆபாச படம் எடுத்த அர்ச்சகர் தேவ நாதன் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை முதலில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது அவரிடம் இருந்து மேலும் முழுமையான விவரங்களை பெறுவதற்காக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த போலீசார் கோர்ட்டு உத்தரவுபடி 3 நாள் காவலில் எடுத்தனர்.

நேற்று இரவோடு இரவாக செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை வேலூர் ஜெயிலில் இருந்து காஞ்சீபுரம் அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் தலைமையிலான சிவகாஞ்சி போலீசார் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் தேவநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், மெமரி கார்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

இதில் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் தேவநாதன் பெயரில் ரூ. 80 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து தினந்தோறும் தீபாராதனை தட்டுகளில் விழும் காசை நம்பி குடித்தனம் நடத்தி வந்த குருக்கள் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வந்தது எப்படி? என்று கண்டு பிடிக்கும் வேலையில் போலீசார் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மெமரி கார்டில் மேலும் 5 பெண்களின் ஆபாச படங்கள் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் யார்? எவ்வளவு நாட்களுக்கு முன்பு அந்த படம் எடுக்கப்பட்டது என்பன போன்ற கோணங்களில் தேவநாதனிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.

அப்போது அவர் ஒவ்வொருத்தரும் தங்கள் செல்போனில் அவா, அவாவுக்கு பிடித்தவாளை படம் எடுத்து வைத்திருப்பார்கள். அது நடிகையாக கூட இருக்கும். அதே போலதான் எனக்கு பிடித்த பொம்மனாட்டிகளை படம் பிடித்து வைத்திருந்தேன். இதெல்லாம் குற்றமென்னு சொன்னால் எப்படி? அவாளை யாருன்னு காட்டி கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார்.

அவரிடம் உரிய முறையில் விசாரித்து உண்மையை வெளிகொண்டு வரும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு அதனை ரகசியமாக காமிராவில் படம் பிடித்தார். இவரது ஆபாச படம் செல்போனில் பரவியது. தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் தேடினர். இதையடுத்து அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்த போது அவர் திடுக்கிடும் வாக்கு மூலம் அளித்தார். அதில் தான் 8 பெண்களை மட்டும் ஆபாச படம் எடுத்ததாக கூறினார். அவர்களது பெயர்களை மாற்றி கூறியும், உண்மையான தகவல்களை கூறாமலும் போலீசாரை ஏமாற்றினார். இதையடுத்து தேவநாதனை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க போலீசார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

காஞ்சீபுரத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரிடம் தேவநாதன் நைசாக பேச்சு கொடுத்து நல்லவர் போல பழகி உள்ளார். அவரிடம் கருவறைக்குள் கண்ணை மூடி வேத மந்திரங்கள் சொன்னால் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று ஆசை காட்டி உள்ளார்.

மாணவியிடம் சில்மிஷங்கள் செய்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளார்.

தேவநாதன் தனது மனைவியையும் ஆபாச படம் பிடித்து வைத்துள்ளார். என்ற தகவலும் போலீசுக்கு கிடைத்துள்ளது. தேவநாதனின் செயலுக்கு உடந்தையாக அந்த பகுதியை சேர்ந்த பூக்காரி ஒருத்தி இருந்துள்ளார்.

அவர் தேவநாதனை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார். இந்த வழக்கில் அவரை முக்கிய சாட்சியாக சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவள் கூறிய தகவல்படி 20க்கும் மேற்பட்ட பெண்களை தேவநாதன் ஆபாசமாக படம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

மறக்க முடியுமா 2






"பெற்றால்தான் பிள்ளையா" படத்தொடர்பான தகராறில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். அவரை சுட்டு விட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்ட எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டார்.

1966_ம் ஆண்டில் அன்பே வா, நான் ஆணையிட்டால், முகராசி, நாடோடி, சந்திரோதயம், தாலி பாக்கியம், தனிப்பிறவி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய 9 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

"அன்பே வா" ஏவி.எம். தயாரித்து, மகத்தான வெற்றி கண்ட படம். இதில் அவருக்கு ஜோடி சரோஜாதேவி. முகராசி, தனிப்பிறவி ஆகிய இரண்டு படங்களும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டு படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.

ஆகஸ்ட் 18_ந்தேதியன்று "முகராசி"யும், செப்டம்பர் 16_ந்தேதி "தனிப்பிறவி"யும் வெளியாயின. அதாவது, ஒரு மாத இடைவெளியில், இரண்டு எம்.ஜி.ஆர். படங்களை சின்னப்ப தேவர் வெளியிட்டு, சாதனை படைத்தார். "முகராசி"க்கு ஆர்.கே.சண்முகம், "தனிப் பிறவி"க்கு ஆரூர்தாசும் வசனம் எழுதினர்.

முகராசியில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார். "நாடோடி", பி.ஆர்.பந்துலு தயாரித்த படம். இதில் எம்.ஜி. ஆருக்கு ஜோடி சரோஜாதேவி.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய "நான் ஆணையிட்டால்..." பாடலையே தலைப்பாக வைத்து சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் படம் எடுத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. வசனத்தை வித்துவான் வே.லட்சுமணன் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். படத்தை சாணக்யா டைரக்ட் செய்தார்.

எம்.ஜி.ஆர். மாறுபட்ட வேடத்தில் நடித்த படம் "பறக்கும் பாவை". இதில் சர்க்கஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடித்தார். ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி. ஆரின் ஜோடி சரோஜாதேவி. வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுத, ராமண்ணா டைரக்ட் செய்தார்.

ஸ்ரீமுத்துக்குமரன் பிக்சர்ஸ் சார்பில் வாசு தயாரித்த "பெற்றால்தான் பிள்ளையா" 6_12_1966_ல் ரிலீஸ் ஆயிற்று. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்த படம். கதை_ வசனத்தை ஆரூர்தாஸ் எழுத, இசை அமைத்தது எம். எஸ்.விஸ்வநாதன். டைரக்ஷன்: கிருஷ்ணன் பஞ்சு.

"பெற்றால்தான் பிள்ளையா" படத்தில், எம்.ஜி.ஆர். ஓர் அனாதை; குடிசையில் வசிப்பவர். அசோகன் வில்லன். அவர் சவுகார் ஜானகியை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி, குழந்தை பிறந்ததும் கைவிட்டு விடுவார். கேட்பாரற்று கிடந்த குழந்தையை எம்.ஜி.ஆர். எடுத்து வளர்ப்பார்.

எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எதிர் வீட்டில், எம்.ஆர்.ராதா வசிப்பார். அவர் ஒரு வித்தைக்காரர். அவருடைய தங்கை சரோஜாதேவி. எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் காதல் ஏற்படுகிறது. கே.ஏ.தங்கவேலு, பொம்மை வியாபாரி. தன் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி, இவரிடம் சவுகார் ஜானகி கேட்டுக்கொள்வார். தங்கவேலுவும், போலீஸ்காரர் டி.எஸ்.பாலையாவும் சிரமப்பட்டுத் தேடி குழந்தையைக் கண்டு பிடித்து விடுவார்கள். ஆனால், குழந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட எம்.ஜி.ஆர்., அதைக் கொடுக்க மறுத்துவிடுவார்.

இதற்கிடையே அசோகன் ஒரு விபத்தில் கால் இழந்து, மனம் திருந்தி, சவுகார் ஜானகியிடம் போய்ச்சேருவார். குழந்தை யாருக்குச் சொந்தம் என்ற விஷயம், கோர்ட்டுக்கு போகும். "குழந்தை, பெற்றோருக்குத்தான் சொந்தம்" என்று கோர்ட்டு தீர்ப்பு கூறும்.

குழந்தையை, பெற்றோரிடம் எம்.ஜி. ஆர். கொடுக்கும்போது துயரம் மிகுதியால் கண்ணீர் வடிப்பார். குழந்தையைப் பெற்றுக்கொண்டு சவுகார் ஜானகி புறப்படும்போது, குழந்தை "அப்பா!" என்றபடி, எம்.ஜி.ஆரை நோக்கி தாவும். _ இதுதான் "பெற்றால்தான் பிள்ளையா" படத்தின் கதை. இந்தப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

12_1_1967 அன்று தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான "தாய்க்கு தலைமகன்" ரிலீஸ் ஆனது. இதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். வசனம் ஆரூர்தாஸ். இசை: கே.வி.மகா தேவன். டைரக்ஷன்: எம்.ஏ. திருமுகம்.

அன்று மாலை, "எம்.ஜி. ஆரை எம்.ஆர்.ராதா சுட்டு விட்டார்" என்ற செய்தி, எரிமலை வெடித்தது போல் வெளியாகியது. தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீ போல் இச்செய்தி பரவியது. மக்கள் உறைந்து போனார்கள்; சினிமா தியேட்டர்களும், கடைகளும் மூடப்பட்டன. பஸ்களும், ரெயில்களும் ஓடவில்லை. தமிழ்நாடே ஸ்தம்பித்தது.

தமிழக போலீஸ் டாக்குமெண்டுரி - ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்



தமிழக போலீஸ் டாக்குமெண்டுரி படத்தில் இடம் பெறும் பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தமிழக போலீசின் 150 ஆண்டையொட்டி இந்த டாக்குமெண்டுரி படம் தயாராகிறது. போலீசார் ஆரம்ப காலத்தில் இருந்து இதுவரை பயன்படுத்திய சீருடைகள் சட்டம்-ஒழுங்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் போலீஸ் துறையில் உள்ள தற்போதைய தொழில் நுட்பவசதிகள் போன்ற அனைத்து அம்சங்களும் இந்த டாக்குமெண்ட்ரி படத்தில் இடம் பெறுகின்றன.

ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது பெறும் முன் இதற்கு பின்னணி இசையமைக்கும்படி போலீசார் கேட்டுக்கொண் டனர். ஆனால் இப்போது அவர் பிசியாகி விட்டதால் அந்த பணியை செய்ய முடியவில்லை. ஆனால் நிறைய பேர் சேர்ந்து போலீசை பாராட்டி பாடும் ஒரு பாட்டுக்கு இசை கம்போசிங் செய்து தர ஒப்புக்கொண்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியதும், இந்த பாட்டுக்கான இசையை உருவாக்குகிறார்.

டாக்குமெண்ட்ரி படத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிடுகிறார்.

4 1/2 கோடியில் புது வீடு புதிய பி.எம்.டபிள்யூ வெளிநாட்டு கார்?

லட்சுமிராய் பி.எம்.டபிள்யூ வெளிநாட்டு கார் வாங்கியுள்ளார். இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். அவர் நடித்த முந்தைய படங்கள் பெரிய ஹிட்டாகவில்லை.

ஆனாலும் பிரபலங்களுடன் இணைத்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளியாகின. கிரிக்கெட் வீரர் டோனியுடன் காதல் எனவும் கூறப்பட்டது. பிறகு மும்பை தொழில் அதிபர் ஒருவரை விரும்புவதாகவும் தகவல் வெளியானது.

காதல் பரிசாகத்தான் இந்த காரை அவர் வாங்கியுள்ளார் என்கின்றனர். அத்துடன் மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் 4 1/2 கோடியில் புது வீடு ஒன்றும் வாங்கியுள்ளார். அங்கிருந்து இந்திப்பட வாய்ப்புகள் தேடுகிறார்.

பஹமாஸ் தீவில் ஷில்பா ஷெட்டி ?

தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஷில்பா‌ ஷெட்டி ஹனிமூன் பயணமாக பஹாமாஸ் தீவுக்கு சென்றுள்ளார். திருமணம் முடிந்த கையோடு பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பார்ட்டி கொடுத்த ஷில்பா - ராஜ்குந்த்ரா தம்பதியர், திருப்பதி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள பஹாமாஸ் தீவிற்கு ஹனிமூன் புறப்பட்டு சென்றனர். முன்னதாக ஷில்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். பஹமாஸ் தீவில் உள்ள அட்லாண்டிஸ் ரிசார்ட்டில் ஷில்பா - ராஜ்குந்த்ரா தம்பதியர் 2 வாரங்கள் வரை தங்கியிருக்க முடிவு !

பணம் கொட்டும் பாலிவூட் - கருப்பு பண முதலைகளின் ஊடுருவல் ?

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் சினிமாவில் நடிக்க் வாங்கும் சம்பளத்தை விட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். நடிகர்களைப் பொறுத்த வரை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அதிக சம்பளம் வாங்குபவர் நடிகர் ரித்திக் ரோஷன். இவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நிமிடத்துக்கு ரூ.4.25 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். நிகழ்ச்சி முடியும் வரை இருக்க வேண்டுமானால் ரூ.2 கோடி சம்பளம். அவருக்கு அடுத்தபடியாக சல்மான் கான் அதிக சம்பளம் பெறுகிறார். இவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நிமிடத்துக்கு ரூ.4 லட்சம் வாங்குகிறார். அதேநேரம் முழு நிகழ்ச்சியிலும் இருக்க வேண்டும் என்றால் ரூ.1 கோடி சம்பளமாம். அவரைப் போலவே நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் நடிகை கத்ரினா கைப். இவர் நிமிடத்துக்கு ரூ.2 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். கரீனா கபூரை ‌பொறுத்தவரை நிமிடத்துக்கு ரூ. 1லட்சம் சம்பளம் பெறுகிறார். ஷாரூக் கான் கொஞ்சம் பெருந்தன்மையுடன் மக்களுக்கு பயன்படக்கூடிய விழிப்புணர்வு உள்ளிட்ட சில நிகழ்ச்‌சிகளில் பங்கேற்க ரூ.10 ஆயிரம் வாங்குகிறார். வர்த்தக நிறுவன நிகழ்ச்சியென்றால் லட்சங்களில் சம்பளம் கேட்டுப் பெற்று வருகிறார்.

புது கணவருடன் ஷில்பா ஷெட்டி சாமி தரிசனம் - வெங்கடசலபதி அருள் கிட்டுமா ?

பாலிவுட் நடிகை ஷில்பா ‌ஷெட்டி, தனது புது கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். நடிகை ஷில்பா ஷெட்டிக்கும், லண்டன் தொழிலதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் கடந்த 22ம்தேதி மும்பையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விருந்து வைத்து உபசரித்தார் ஷில்பா. இதனைத்தொடர்ந்து ‌நேற்று தனது புது கணவருடன் ஷில்பா ஷெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிட்டார். இதற்காக குடும்பத்தினருடன் இருவரும் கோவிலுக்கு வந்திருந்தனர். ஏழுமலையானுக்கு நடந்த ஒரு மணி நேர அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷில்பா - ராஜ்குந்த்ரா தம்பதியர், சாமி தரிசனத்துக்கு பின்னர் மும்பை புறப்பட்டு சென்றனர்.

நயனதாரா பிரபு தேவா மும்பையில் குடித்தனம் ?

பிரபுதேவாவுடனான காதல் சர்ச்சையால் நயன்தாரா சென்னை வருவதை தவிர்க்கிறார். ஏற்கனவே பிரபுதேவா மனைவி ரம்லத் நேரில் பார்த்தால் அடிப்பேன் என்று எச்சரித்ததால் ஐதராபாத்திலேயே தங்கி உள்ளார். தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன.

ஆனால் நடிக்க மறுக்கிறார். தெலுங்கு படங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுக்கிறார். இதற்கிடையில் நயன்தாராவை நிரந்தரமாக இந்தியில் நடிக்க வைக்க பிரபுதேவா திட்டமிட்டுள்ளார். மும்பையில் குடி வைக்கவும் முடிவு செய்துள்ளார். அங்கு வீடு தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

சல்மான்கானை வைத்து “மோஸ்ட் வான்டட்” படத்தை பிரபுதேவா இயக்க உள்ளார். அதில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்கிறாராம். அந்த படம் மூலம் இந்திப் பட உலகில் நயன்தாராவை பிரபலப்படுத்த முடியும் என்று நம்புகிறார்.

இதற்கிடையில் அடுத்த மாதம் இறுதியில் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக தகவல் பரவி உள்ளது. மனைவி ரம்லத்தை சமரசப்படுத்தி வருகிறார். ஆனால் இதுவரை அவரிடம் சம்மதம் கிடைக்கவில்லை. ரம்லத் எதிர்த்தாலும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ளனர்.

தமிழகத்தில் ஊரும் வேர்கள் ?

"வேர்கள் அழியவில்லை; அழிந்தது மரங்கள் தான். எனவே, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் வெகு விரைவில் வேறு வடிவில் வெளி வரும்' என, புலிகள் இயக்க ஆதரவாளர்கள், தமிழகத்தில் புது கோஷம் எழுப்பி வருகின்றனர்.


இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் ஓய்ந்து, குண்டுச் சத்தம் நின்று போயுள்ளது. போர் ஓய்ந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், இன்னும் முகாம்களில் அடைக்கப் பட்டுள்ள தமிழர்கள், சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகள் முற்றிலும் அகற்றப்பட்டு, புது குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்ட பின், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் எழுந்த அழுத்தம் காரணமாக, முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள், படிப்படியாக அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்து வருகிறது.


இந்நிலையில், உலகின் பல பகுதிகளிலும் உள்ள இலங்கை தமிழர்களாலும், அவர்களின் ஆதரவாளர்களாலும் புலித் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள், மாவீரர்கள் தினம் ஆகியவை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளை தமிழகத்தில் பல இடங்களிலும் பட்டவர்த்தனமாகவும், ரகசியமாகவும் இலங்கை தமிழ் ஆதரவாளர்கள், புலிகள் இயக்க ஆதரவாளர்கள் அனுசரித்தனர். முதல்வர் கருணாநிதியின் "மவுனவலி' அறிக்கையை தொடர்ந்து கிடைத்த விமர்சனங்களின் விளைவாக, குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன், "மாவீரர்கள் தினத்தை' அனுசரிக்க, தமிழக காவல் துறை பச்சைக் கொடி காட்டியது. காவல்துறையின் அனுமதியோடு கூடிய புலி ஆதரவாளர் கூட்டங்களில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. ராஜிவ் கொலைக்கு பின் புலிகள் இயக்கத்தை பெரும்பான்மை தமிழக மக்கள் புறக்கணித்து விட்ட நிலையில், பிரபாகரன் இறப்பு செய்திக்கு பிறகு அந்த அணுகுமுறையில் மாற்றம் வந்திருப்பதாக கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரபாகரன் மரணத்தை இதுவரையில் ஏற்க தயங்கிய தமிழ் இன ஆதரவாளர்கள் பலரும் தற்போது அவரது மரணத்தை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர். அத்துடன் பிரபாகரனின் இழப்பு, இலங்கை தமிழ் போராட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு என்றும் தமிழ் இயக்கங்கள் ஏற்று கொள்கின்றன. குறிப்பாக இந்த கூட்டங்களில், "இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்கான வேர்கள் இன்னும் அழியவில்லை; அது மண்ணோடு மண்ணாக கலந்துள்ளது; அழிக்கப் பட்டது வெறும் மரங்கள் மட்டும் தான்; தமிழ் ஈழ விடுதலை போராட்டம் வேறு வடிவில் வெளி வரும்' என்ற கருத்து இலங்கை தமிழ் அனுதாபிகள் மத்தியில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. மேலும் "இனப் போராட்டம் மறுபடியும் தொடர வேண்டும். இதற்காக நாம் அனைவரும் தயாராக வேண்டும்; மற்றவர்களையும் தயார்படுத்த வேண்டும்' என, புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பல இடங்களிலும் ஆவேசமாக பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது, உளவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்துல் கலாம் பல்டி - சினிமாவில் நடிக்கவில்லை ?

இந்தியா-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பில் ஐயம் கலாம் என்றொரு படம் தயாராகி வருகிறது. இது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்ன கனவு காணுங்கள் என்ற அறிவுரையை பின்னணியாக கொண்டு தயாரிப்பப்பட்டு வருகிறது.இந்தி நடிகர் குல்சன் குமராவர் நடிக்கும் இந்த படத்தை மாதவ்பண்டா இயக்கி வருகிறார். இந்த படத்தில் அப்துல்கலாம் நடிக்கிறார் என்று நடிகர் குல்சன் குரோவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஐயம் கலாம் படத்தின் படப்பிடிப்புகள் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டுள்ளன. அப்துல்கலாம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் என்றார்.

நடிகர் குல்சன் குரோவரின் பேட்டிக்கு அப்துல்கலாம் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில், சினிமா படம் எதிலும் அப்துல்கலாம் நடிக்கவில்லை. சிலர் தங்களது தனிப்பட்ட விளம்பரத்துக்காக இப்படி தகவல் வெளியிட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி நடிகர் குல்சன் குரோவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், அப்துல்கலாமுக்கு நாங்கள் அவமரியாதை செய்ய வில்லை. நாட்டின் ஒற்றுமை சின்னமாக அவர் திகழ்கிறார். அவர் இல்லாமல் இந்த படமே இல்லை என்றார்.

பிரிட்டன் இளவரசி டயானாவின் காதலராக இருந்த ஹஸ்னத் கான் மீண்டு திருமணம் ?

பிரிட்டன் இளவரசி டயானாவின் காதலராக இருந்த பாக்., இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஹஸ்னத் கான், கிரேக்க பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஹஸ்னத் கான்(51). தற்போது லண்டனில் வசித்து வரும் இவர், இரண்டு ஆண்டுகள், பிரிட்டன் இளவரசி டயானாவின் காதலராக இருந்தவர்.

ஹஸ்னத் கான் கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹடியா ஷெர் அலி (29) என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதன்பின், 18 மாதங்கள் கழித்து அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில், தற்போது அவர், கிரேக்க நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டரா பனாகுலஸ் என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.சுவீடன் நாட்டில் பிறந்த அலெக்சாண்டரா தன் 13 வயதில் பெற்றோருடன் சொந்த நாடான கிரீசிற்கு வந்தார். அதன் பின், 18 வயதில் மருத்துவம் படிப்பதற்காக, லண்டன் வந்தார்.ஹஸ்னத் கான் மற்றும் அலெக்சாண்டரா பனாகுலஸ் இருவரும் ஒரே மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.


இந்த திருமணத்திற்கு அலெக்சாண்டரா பனாகுலசின் தாயும் ஒப்புதல் வழங்கி உள்ளார்.இதுகுறித்து அலெக்சாண்டராவின் தாய் அகாலியா கூறுகையில்,"ஹஸ்னத் கானை நான் பலமுறை சந்தித்து பேசி உள்ளேன். அவரது வயது வித்தியாசம் குறித்து கவலை இல்லை. பிள்ளைகள் அவர்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்கின்றனர். எல்லா அம்மாவையும் போன்று, என் மகளின் சந்தோஷத்தையே பார்க்க விரும்புகிறேன்.அவள் நல்ல பெண்; ஹஸ்னத் அவளுக்கு நல்லவராக இருப்பார். எனக்கு டயானாவை மிகவும் பிடிக்கும். அவர் மிக அழகாக இருப்பார்.என் மகள் மேக்-அப் போடும் விருப்பம் இல்லாவிட்டாலும், மிக அழகாகவே இருப்பாள். அதற்காக இருவரையும் ஒப்பிட விரும்பவில்லை.இவ்வாறு அகாலியா கூறினார்.

சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் சார் தமிழாசிரியர்கள் குழுத் தலைவர் தமிழரசி

சீனா, மலாய் மொழியைப் போல் சம அந்தஸ்தில் பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுத் தரப்படுகிறது என்று விழுப்புரத்தில் நடந்த கற்றல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் சார் தமிழாசிரியர்கள் குழுத் தலைவர் தமிழரசி பேசினார். விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியில் நடந்த கற்றல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் சார் தமிழாசிரியர்கள் குழுத் தலைவர் தமிழரசி பேசியதாவது: இங்கு, 10ம் வகுப்பு வரை உயர் நிலைப்பள்ளி என்று கூறுவது போல், சிங்கப்பூரில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையில் உயர்நிலைப்பள்ளி என்கின்றனர். தமிழ் மொழி இங்கு பயிற்று மொழியாகவும், அதிகார மொழியாகவும் உள்ளது. ஆனால், மேலை நாடுகளில் இரண்டாவது மொழியாக தமிழ் கருதப்படுகிறது. சீனா, மலாய் மொழியைப் போல் சம அந்தஸ்தில் பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுத் தரப்படுகிறது. தமிழ் மொழி அறிவை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நாங்கள் வந்த நோக்கம். இங்கு கற்பிக்கப்படும் முறை, அறிந்து கொள்ளும் முறைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.


நாங்கள் இங்கு கற்பித்தல் முறைகளை அனுபவபூர்வமாக அறிந்து கொண்டு, இது போன்று சிங்கப்பூரில் மாணவர்களுக்கு தமிழை கற்றுக் கொடுக்க விரும்புகிறோம். இங்குள்ள பண்பாட்டு, கலசார முறைகளை இன்றும், நாளையும் தெரிந்து கொள்வோம். மேலை நாடுகளில் தமிழ் இளங்கலை பட்டப் படிப்பு இல்லை. இதனால், அங்கிருந்து தமிழகத்திற்கு வந்து தமிழ் இளங்கலை பட்டப் படிப்பு கற்க வேண்டியுள்ளது. தமிழ்க் கல்வி மேன்மேலும் வளர, விரிவுரையாளர்கள் அதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும். இவ்வாறு தமிழரசி பேசினார்.

பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஏழுமலையான் பாடல்கள்

உலகின் புகழ் பெற்ற கோவில்களுள் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் ஒன்று. ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டி உள்ளது.

இக்கோவில் பற்றி புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள், பாடகர்- பாடகிகள் பலர் பாடல்கள் பாடி உள்ளனர். பாடகி லதா மங்கேஷ்கர் சமீபத்தில் ஏழுமலையான் பற்றி 5 பாடல்கள் பாடி இருந்தார். இன்னும் அவர் 2 பாடல்கள் பாட வேண்டி உள்ளது. அதன் பிறகு அதை ஒரு ஆல்பமாக வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஏழுமலையான் பாடல்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு தெரிவித்தார்.

அவர் கூறும்போது, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தமிழர் என்றாலும் அவர் மிகுந்த நாட்டுப்பற்று உடையவர்.அவரது இசையில் உருவான வந்தே மாதரம் பாடல் தேசிய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கும் பாடலாக உருவெடுத்துள்ளது.

ஆஸ்கார் விருதுகளை வென்ற ஏ.ஆர். ரகுமானிடம் ஏழுமலையான் பக்தி பாடல்களுக்கு இசையமைத்து தரும்படி கேட்க உள்ளோம். விரைவில் அவர் இதற்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.