Pages

Thursday, December 31, 2009

ஸ்டான்லியில் நடந்த சினிமா படப்பிடிப்பு : சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பரிதவிப்பு

ஏழை மக்களின் நோய் தீர்க்கும் ஸ்டான்லி மருத்துவமனையில், அடுத்தடுத்து நடந்த படப் பிடிப்புகளால், அவசர சிகிச்சை பிரிவுக்குக் கூட செல்ல முடியாமல், நோயாளிகள் திண்டாடினர்.


வடசென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் நோய் தீர்ப்பதில் "ஆபத் பாந்தவனாக' அரசு ஸ்டான்லி மருத்துவமனை செயல் பட்டு வருகிறது. இங்குள்ள புறநோயாளிகள் பிரிவில் மட்டும், தினமும் 5,000 பேர் வரை சிகிச்சை பெற்று செல்கின்றனர்.எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு, திடீரென "நான் மகான் அல்ல' என்ற சினிமா படத்தின், படப்பிடிப்பு நடத்தப் பட்டது.அதுவும், அவசர சிகிச்சை பிரிவில் இந்த படப்பிடிப்பு நடந்தது. இரவு 9 மணி முதல், அதிகாலை வரை படப்பிடிப்பு நீடித்தது.


விபத் துக்களில் சிக்கியும், உடல் நலம் பாதிக்கப்பட்டும், அவசர சிகிச் சைக்காக வந்த நோயாளிகளை படப்பிடிப்பு குழுவினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.அவசர சிகிச்சை அளிக்க வேண் டிய மருத்துவர்கள், உதவியாளர்களும் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.இரவு நேரம் தான் இப்படி என்றால், நேற்று மதியமும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சவக்கிடங்கு பகுதியில் எடுக்கப்பட்டது. இதனால் நோயாளிகள், மக்கள் சென்று வர சிரமப்பட்டனர்.அரசு ஸ்டான்லி ஊழியர் குடியிருப்பு, வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு, தட்சிணாமூர்த்தி கோவில் செல்வோர், சவக்கிடங்கை ஒட்டிய சிறு பாதை வழியாக சென்று வருவது வழக்கம்.படப்பிடிப்பு காரணமாக, அவ் வழியே செல்லும் மக்கள், நேற்று இரண்டு கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


சினிமா படப்பிடிப்பால் சிகிச்சை பெறும் நோயாளிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் பெரிதும் திண்டாடினர்.போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த சாலைகள், ஆபத்து கால சிகிச்சை அளிக்கும் ஸ்டான்லி போன்ற முக்கிய மருத்துவமனைகள் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்குவதை தவிர்க்க வேண்டும். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அன்னை தெரசா தபால் தலை


நோபல் பரிசு பெற்றவரான அன்னை தெரசா மற்றும் ஆஸ்கர் பரிசு பெற்ற நடிகை கேத்தரீன் ஹெபர்ன் ஆகியோரை கவுரவிக்கும் வகையில், 2010ம் ஆண்டு நினைவு தபால்தலை வெளியிட உள்ளதாக, அமெரிக்க தபால் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து அமெரிக்க தபால் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: அமெரிக்க தபால் துறை, பிரபலமானவர்கள், இடங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் நினைவு தபால்தலை வெளியிடுவது வழக்கம். இந்த நினைவு தபால்தலைகள் குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனை செய்யப்படும். இதன்படி, நோபல் பரிசு பெற்ற கன்னியாஸ்திரியான அன்னை தெரசா, ஆஸ்கர் பரிசு பெற்ற நடிகையான கேத்தரீன் ஹெபர்ன், சிங்கிங் கவ்பாய் ஜீன் ஆட்ரி,வில்லியம் எஸ்.ஹார்ட், டாம் மிக்ஸ் மற்றும் ராய் ரோகர்ஸ் ஆகியோர் நினைவாக 2010ம் ஆண்டு, தபால் தலை வெளியிடப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள ஏழைகள் மற்றும் நோயாளிகளுக்காக, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த, அன்னை தெரசாவின் நினைவாக வெளியிடப்பட உள்ள தபால்தலை, 2010 ஆகஸ்ட் 26ம் தேதி, அவரது பிறந்த நாள் முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மறக்க முடியுமா 43


சிவாஜி கணேசன், 7-வது வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிகரானார். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே, சிவாஜிக்கு நடிப்பதிலும், பாடுவதிலும் ஆர்வம் இருந்தது.

ஒருமுறை, ``வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றார். அக்காலத்தில், சின்ன வேடங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால், நாடகத்துக்கு வரும் சிறுவர்களில் சிலரை அழைத்துப் போய், மேடையில் ஏற்றி விடுவார்கள்.

``கட்டபொம்மன்" நாடகத்தில், வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடிக்க சிலர் தேவைப்பட்டதால், சிவாஜியை நாடகக்காரர்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள். வெள்ளைக்கார சிப்பாய்கள் அணிவகுத்து வரும் காட்சியில், அந்த சிப்பாய்களில் ஒருவராக சிவாஜியும் நடந்து வந்தார்.

நாடகம் முடிந்து வீட்டுக்குச் சென்றதும், சிவாஜிக்கு அவர் அப்பாவிடம் உதை கிடைத்தது! ஏனென்றால் தேசியவாதியான சின்னையா மன்றாயருக்கு வெள்ளைக்காரர்கள் என்றாலே பிடிக்காது. சிவாஜி, வெள்ளைக்கார சிப்பாய் வேடம் போட்டதால், அவருக்கு அளவு கடந்த கோபம்! ``டேய், கூத்தாடிப் பயலே! உனக்கு என்ன தைரியம் இருந்தால், என் எதிரியின் படையில் சேர்ந்து கூத்தாடுவாய்!" என்று கூறியபடி அடித்தார்.

இதனால் சிவாஜிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. படுக்கையில் போய் விழுந்தார். ``நாமும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும்" என்ற எண்ணம், மனதில் ஆழமாகப் பதிந்தது.

இந்த நேரத்தில், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் ``மதுரை ஸ்ரீபாலகான சபா" என்ற நாடகக்கம்பெனி திருச்சியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தது. (யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த பெரும்பாலான படங்களில் அவருடன் நடித்தவர். பிற்காலத்தில் சிவாஜி நடித்த ``தூக்கு தூக்கி"யில், வாத்தியாராக நடித்தவர்.)

இந்த நாடகக் குழுவில் சேர்ந்து விடவேண்டும் என்று சிவாஜி விரும்பினார். நாடகக் குழுவினர், திருச்சியில் நாடகங்கள் நடத்தி முடித்துவிட்டு, வெளியூருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். நாடகக் கம்பெனிக்கு சிவாஜி சென்றார். ``எனக்கு பாடத்தெரியும். ஆடத்தெரியும். நான் அப்பா_ அம்மா இல்லாத அனாதை. நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

அப்போது சிவாஜி நன்றாகப் பாடும் அளவுக்கு பயிற்சி பெற்றிருந்தார். அவரை ஒரு பாட்டு பாடச் சொன்னார்கள். ``பழனிவேல் இது தஞ்சம்" என்ற பாடலை சிவாஜி பாடினார். நாடகக் கம்பெனிக்காரர்களுக்குப் பிடித்துவிட்டது. உடனே கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள். அப்போது, அந்தக் கம்பெனியில் காக்கா ராதாகிருஷ்ணனும் நடிகராக இருந்தார். அவர், சிவாஜியின் பக்கத்து வீட்டுக்காரர்.

சிவாஜியைப் பார்த்த அவருக்கு ஒரே ஆச்சரியம். ``இங்கே எப்படியடா வந்தாய், கணேசா!" என்று கேட்டார். ``நான் வீட்டுக்கு தெரியாமல் இந்த கம்பெனியில் வந்து சேர்ந்துவிட்டேன். வெளியே யாரிடமும் சொல்லிவிடாதே" என்று சிவாஜி கேட்டுக்கொண்டார்.

நாடகக் கம்பெனி, திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று முகாமிட்டது. அந்த நாடகக் கம்பெனியில், புது நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாத்தியாராக சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் இருந்தார். இவர்தான், சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.

``சின்ன பொன்னுசாமிதான் என் நாடக குரு" என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார். சிவாஜி நடித்த முதல் நாடகம் ``ராமாயணம்" அதில் அவர் போட்ட வேடம் சீதை. ``யாரென இந்தப் புருஷனை அறிகிலேன்" என்ற பாட்டைப்பாடி, அதற்கு ஏற்ற மாதிரி ஆட்டம் ஆடி நடித்தார்.

முதல் நாளே சிறப்பாக நடித்தார், சிவாஜி. வேஷத்தை கலைத்து உள்ளே சென்றபோது, வாத்தியார் பொன்னுசாமி அவர் முதுகில் தட்டிக்கொடுத்து, ``மிகவும் நன்றாக நடித்தாய்" என்று பாராட்டினார்.

நாட்கள் ஆக ஆக, புதுப்புது வேடங்களை ஏற்று நடித்தார், சிவாஜி. சீதை வேஷம் போட்ட அவர், பிறகு பரதன் வேடம் போட்டார். சூர்ப்பனகை அழகியாக மாறி ராமனை மயக்கும் கட்டத்தில், அந்த அழகு சூர்ப்பனகையாக நடித்தார். ராவணனின் மகன் இந்திரஜித் வேடமும் அவருக்கு கிடைத்தது.

இப்படி, சிறுவனாக நாடகங்களில் நடித்தபோதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்றார். பல்வேறு நாடக வசனங்கள் அவருக்கு மனப்பாடம். எனவே, திடீரென்று எந்த வேடத்தையும் கொடுத்து நடிக்கச் சொன்னாலும், அவர் ஏற்று நடித்தார்.

அந்தக் காலத்தில், நாடகத்தில் நடிக்கும் சிறுவர்கள் வெளியே எங்கேயும் போக முடியாது. கம்பெனியின் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும். ``சிறை" வைக்கப்பட்டது மாதிரிதான்.

``ஊருக்கு வா" என்று பெற்றோர் கடிதம் எழுதினால், அதை பையன்களிடம் கொடுக்கமாட்டார்கள். கடிதங்களைப்பிரித்து படித்துப்பார்த்துவிட்டு, கொடுக்கக்கூடியதாக இருந்தால் மட்டும் கொடுப்பார்கள். ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியோ அனுமதி பெற்று ஊருக்கு போய்விட்டு வந்தார். ``என்ன ராதாகிருஷ்ணா! என் வீட்டுக்குப் போனாயா? எல்லோரும் சவுக்கியமா?" என்று சிவாஜி விசாரித்தார்.

``எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உனக்கு ஒரு துயரச்செய்தி கணேசா!" என்று கூறினார், ராதாகிருஷ்ணன். ``என்ன?" என்று பதற்றத்துடன் சிவாஜி கேட்க, ``உன் அண்ணன் திருஞான சம்பந்தமூர்த்தி இறந்துவிட்டார்" என்று கூறினார், காக்கா ராதாகிருஷ்ணன்.

சிவாஜி பதறினார். உள்ளே சென்று தனியாக அழுதார். ஊருக்குப் போய்வர கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார். அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்களே தவிர, அனுமதி தரவில்லை.

சில காலத்துக்குப் பிறகு, சிவாஜியின் இன்னொரு அண்ணன் கனகசபாநாதனும் இறந்துபோனார். அப்போதும் சிவாஜி தன் வீட்டுக்குப் போக முடியவில்லை. முக்கிய வேடங்களில் அவர் நடித்து வந்ததால், ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்க நாடகக் கம்பெனி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

செக்ஸ் பாதிரியார் ?

ர்ஜென்டினா நாட்டில் உள்ள சாந்தாவே என்ற இடத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பிஷப்பாக இருந்தவர் எட்கார்டோ ஸ்டோர்னி (73).

இவர் 1992-ம் ஆண்டு பாதிரியாருக்கு படித்து வந்த ஒரு மாணவருடன் ஓரின சேர்க்கை “செக்ஸ்” சில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.

சம்பவம் 1992-ம் ஆண்டு நடந்ததாலும். அங்கு நடந்த செக்ஸ் சம்பவங்கள் 2000-ம் ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் புத்தகம் எழுதி வெளியிட்டார். அதன் பிறகே இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.

இதையடுத்து பிஷப் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதனால் அவர் 2002-ம் ஆண்டு பிஷப் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது. நீதிபதி அவருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். அவரது வயதை கருதி வீட்டுக் காவலில் இருந்தபடியே தண்டனை அனுபவிக்கலாம் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் நீதிபதி கூறினார்.

அர்ஜென்டினாவில் “செக்ஸ்” குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அடையும் 4-வது பாதிரியார் இவர் ஆவார்.

Wednesday, December 30, 2009

கவிஞர் அறிவுமதி பாடல்கள் எழுதுவதில்லையே ?

" கவிஞர் அறிவுமதி பாடல்கள் எழுதுவதில்லையே ?

- தமிழ் நிலவன் "

" அவர் தி. கா .வில் சேர்ந்து விட்டார் .இழப்பு தமிழ் சினிமா உலகிற்கு ? அவரின் வரிகளை பாடலில் பாருங்கள் "

ஐஸ்வர்யா ராய் நல்ல நடிகையா ?

ஐஸ்வர்யா ராய் நல்ல நடிகையா ? ஹிந்தி படங்களில் பிடித்த பாடல் ?
- பாலா ரெயின் , மலேசியா .

" நல்ல நடிகை .. மொழி பாகுபாடு அவர் பார்ப்பதில்லை .. உங்களுக்காக ஒரு பாடல் ! "

கலைஞரின் ஆதங்கம் - நேர்மையானது

செம்மொழி மாநாட்டிற்கு பிறகு எழுத்தாளர் பணியை தொடரவிருப்பதாக புத்தக கண்காட்சி துவக்க விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார்.


சென்னை ஷெனாய் நகரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், 33வது புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை, தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்து, தனது பெயரால் பொற்கிழி விருதுகளையும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் விருதுகளையும் வழங்கி, சிறப்புரையாற்றினார்.விழாவிற்கு, நல்லி குப்புசாமி செட்டி தலைமை வகித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்துரை வழங்கினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் வரவேற்றார். சங்கச் செயலர் ராம.லட்சுமணன் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் அமைச்சர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.



விழாவில், முதல்வர் கருணாநிதி "புத்தகம் எழுதுவது, படிப்பது, தயாரிப்பது என பல்வேறு வகையில் புத்தகத்துடன் தொடர்புடையவர்கள் இணைந்து இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில், நான் முதலமைச்சராக பங்கேற்பதில் மகிழ்ச்சியடையவில்லை.அறுபது, எழுபது ஆண்டுகளாக எழுதுகிறவன் என்ற முறையில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் முதல்வர் பதவியில் இருக்கும் போது, செய்த பணியைப் பாராட்டும் போது, எனக்கு அந்த ஒரு கணம் மட்டுமே மகிழ்ச்சி இருக்கும். ஆனால், எனது எழுத்தை, எனது புத்தகத்தைப் பாராட்டினால், அது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியைத் தரும். அதனால், எனது ஆட்சியை புகழ்வதை விட எனது எழுத்து புகழப்படும் போது, நான் பெரிதும் மகிழ்கிறேன்.


இவ்விழாவில், பங்கேற்க இந்த பதவி பயன்படுவது எனக்கு மகிழ்வை அளிக்கிறது. என்னை நீங்கள் இந்த விழாவிற்கு அழைக்காவிட்டாலும் நான் வந்திருப்பேன்.மற்ற எழுத்தாளர்களோடு முன் வரிசையில் அமர்ந்து விழா நடப்பதையும், விருது பெறும் எழுத்தாளர்களையும் கண்டு மகிழ்ந்திருப்பேன். நான் எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டே இருப்பேன். அதனால் தான், நான் ஒரு விழாவில், செம்மொழி மாநாட்டிற்கு பிறகு, நான் உங்களில் ஒருவனாகி வேறு ஒரு பாதையில் பயணிப்பேன் என்று சொன்னேன்.அந்த வகையில் நான் ஜெயகாந்தன், அறவாணன், வைரமுத்து, சேதுசொக்கலிங்கம் ஆகியோருடன் அமர்ந்து எனது எழுத்துப் பணியை தொடர்வேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.


என்னைப்பற்றி எழுத இடமில்லையா?


விழாவில் முதல்வர் கருணாநிதி ஒரு நூலைப் பற்றி பேசியதாவது:விருது பெற நூல்களை தேர்ந்தெடுக்கும்போது, மிகுந்த கவனம் வேண்டும். என்னிடம் எந்த நூல்களை கொடுத்தாலும், அதை ஓரிரு நாளில் படித்து விடுவேன். என்னை, குன்றக்குடி அடிகளார் சந்தித்த போது, என்னிடம் "சென்னை வரலாறு' என்ற ஒரு நூலை அளித்தார். அறுநூறு பக்கம் கொண்ட அந்த நூலில், போர்த்துகீசியர் வரலாறு முதல் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நூலிற்கு, கடந்த ஆண்டுகளில் நடந்த இதே விழாவில், விருது வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நூலை, நான் படித்து பார்த்த போது, ஒரு இடத்தில் கூட தி.மு.க., ஆட்சியைப் பற்றியோ, அண்ணாவைப் பற்றியோ என்னைப் பற்றியோ இல்லை.


கடந்த 96ம் ஆண்டு, அதுவரை மதராஸ் என்று அழைக்கப்பட்டு வந்த தலைநகரை, சென்னை என்று மாற்றியது கூட இடம் பெறவில்லை. ஆனால், கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டதை பெருமைபட எழுதியிருக்கின்றனர்.தமிழகத்தை, ஒரு மாதம் மட்டுமே ஆண்ட ஜானகியைப் பற்றிக் கூட அதில் எழுதியுள்ளனர். ஆனால், என்னைப் பற்றி எழுதவில்லை. இதற்கு இடம் இல்லை என்ற காரணம் சொல்ல முடியாது.என்னைப் பற்றி எழுத முடியாத அளவிற்கு நான் என்ன தவறு செய்து விட்டேன். எனவே, இனி விருதுக்கு நூல்களை தேர்ந்தெடுக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்"இவ்வாறு முதல்வர் பேசினார்.

நம் தமிழ் இசை அமைப்பாளர்கள் எந்த அளவுக்கு குறைந்தவர்கள் ?

" நம் தமிழ் இசை அமைப்பாளர்கள் எந்த அளவுக்கு குறைந்தவர்கள் ? நன்றாகதானே இசை அமைக்கிறார்கள் "
- உமா ரவி ,சென்னை .

கிழே உள்ள இசையை கேளுங்கள் .இதன் அடிப்படையில் பல பாடல்கள் வந்து விட்டன ?

பிடித்த கமலின் பாடல்

"உங்களுக்கு பிடித்த கமலின் பாடல் எது "

சிவன், மலேசியா .

"ஒரு வினாடி கூட யோசிக்காமல் சொல்ல வேண்டுமானால் கிழே பார்த்து கொள்ளுங்கள் ! "

நார்வே நாட்டு மன்னர் ஹரால்டை அவமதித்த ஒபாமா

உலக அமைதிக்காக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா நார்வே நாட்டில் உள்ள ஆஸ்லோ நகரில் நேற்று நடந்தது. விழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட 13 பேர் கலந்து கொண்டு விருதை பெற்றனர். நோபல் பரிசு விழா முடிந்ததும் அப்பரிசு பெற்றவரை கவுர விக்கும் வகையில் நார்வே நாட்டு மன்னர் ஹரால்டு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

இந்த விருந்தில் நோபல் பரிசு பெற்ற 12 பேர் கலந்து கொண்டனர். ஆனால், அதில் கலந்து கொள்ளாமல் அதிபர் ஒபாமா புறக்கணித்தார்.

மேலும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழந்தைகளின் கலைநிகழ்ச்சி, இசைக்கச்சேரி உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.

இது நார்வே நாட்டு மன்னர் ஹரால்டை அவமதிப்பதாக உள்ளது என அந்நாட்டு பத்திரிகைகள் விமர்சனம் செய்துள்ளன.

மறக்க முடியாத பாடல்கள்

சின்னத்திரை சீரியல்களில் பிஸியாக இருந்து வந்த நடிகை தேவயானி, இப்போது எல்லா சீரியல்களையும் முடித்து கொடுத்து விட்டு அடுத்த களத்திற்கு செல்ல தயாராகி விட்டார். சின்னத்திரையில் இருந்து ‌மீண்டும் வெள்ளித்திரைக்கு வாருங்கள் என்று பலரும் தேவயானிக்கு அழைப்பு விடுக்கிறார்களாம். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதால் தற்போது அம்மணி தினமும் 5 கதைகளை கேட்டு வருகிறாராம். கதையோடு, தனது கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்வாராம். விரைவில் தேவயானியை பெரிய திரையில் பார்க்கலாம்!

ஒபமாவின் பீதி ?

டெட்ராய்ட் நகருக்கு வந்த அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்க விமானங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கும் அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் அமெரிக்கர்களுக்கும் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஒபாமா அரசு விடுத்துள்ள அறிவிப்பு :
கடந்த ஆண்டு (2008) மும்பையில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதே பாணியில் இந்தியாவில் மேலும் பல நகரங்களில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தனி தெலுங்கானா மாநிலம் கேட்டு ஆந்திராவில் கலவரமும் அதைத்தொடர்ந்து வன்முறையும் நடந்து வருகிறது. இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் அங்கு புகுந்து தாக்குதல் நடத்தலாம்.

பொதுவாக அவர்கள் அமெரிக்கர்கள் அல்லது மேலை நாட்டினர் (ஐரோப்பியர்கள்) மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்கொலை படை தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன.
மும்பை பாணியில் தாக்குதல் நடத்ததிட்டமிட்டுள்ளனர். எனவே, இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக ஓரின சேர்க்கையாளர்கள் முறைப்படி திருமணம் செய்துள்ளனர்


லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் முதன் முதலாக ஓரின சேர்க்கையாளர்கள் முறைப்படி திருமணம் செய்துள்ளனர். தெற்கு அர்ஜென்டினாவின் உஷ§யா நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரியா டி பெல்லோ (வயது 40). இவரது நண்பர் அலெக்ஸ் பிரியர் (39).

இவர்களிடையே ஓரின சேர்க்கை உறவு இருந்தது. எய்ட்ஸ் நோயாளிகளான இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இதற்கு போனஸ் ஏர் நகர மாஜிஸ்திரேட்டு அனுமதி வழங்கினார்.

இதை தொடர்ந்து இவர் கள் இருவரும் உலக எய்ட்ஸ் தினமான டிசம்பர் 1-ந்தேதி திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தனர். ஆனால் இவர்களின் திருமணத்துக்கு மேல் கோர்ட்டு நீதிபதி அனுமதி மறுத்தார். எனவே திருமணம் நடைபெறவில்லை.

இதனால் ஓரின சேர்க்கை ஜோடி உஷ§யா மாகாண கவர்னரை சந்தித்து முறையிட்டனர். அவர் இவர்களது திருமணத்துக்கு அனுமதி வழங்கினார். இதை தொடர்ந்து இவர்கள் இரு வரும் அங்குள்ளா பதிவு அலுவலகத்தில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இதன் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் முதல் ஓரின சேர்க்கை தம்பதி என்ற பெருமையை இந்த ஜோடி பெற்றுள்ளனர். திருமணத்தின் மூலம் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது அனைத்து ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன் ஜோடிகளுக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தனர்.

Tuesday, December 29, 2009

என் வளர்ச்சிக்கு காரணம் கமல் -கரண்

வில்லனாக அறிமுகமாகி கதாநாயகன் ஆனவர் கரண் "கமலின் “நம்மவர்” படத்தில் கிடைத்த அறிமுகம் ஆணிவேராக அமைந்தது. அவர் அஸ்திவாரத்தில் வீடு கட்டுகிறேன். என் வளர்ச்சிக்கு அவரே காரணம். என் முன்னேற்றத்தில் அக்கறையாக இருக்கிறார். என்னை எப்போதும் அவர் கண்காணிப்பதாக உணர்கிறேன். அந்த எச்சரிக்கை உணர்வு என்னை சரியான வழியில் நடத்துகிறது.

நான் கதாநாயகனாக நடித்து ஐந்து படங்கள் வந்துள்ளன. “கொக்கி” வழக்கமான சினிமாத் தனங்களை உடைத்து நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. “கருப்பசாமி குத்தகைதாரர்” மாறுபட்ட வேடம். “தீ நகர்”, “காத்தவராயன்”, “மலையன்” படங்களில் வெவ்வேறான கேரக்டர்களை வெளிப்படுத்தினேன்.

தற்போது “கனகவேல் காக்க”, “கந்தா”, “தம்பி வெட்டோத்தி சுந்தரம்” என 3 படங்கள் கைவசம் உள்ளன. என் படங்களுக்கு 10, 12 மாதம் ஆகிறது. இனி அது நிகழாது. ஆண்டுக்கு 3 அல்லது நான்கு படங்களில் நடிப்பேன். தெலுங்கில் வாய்ப்புகள் வருகின்றன. என்றாலும் தமிழில் கவனம் செலுத்துவதே விருப்பம். இரட்டை வேடத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது.

என்னுடன் நடித்த கதாநாயகிகள் எல்லோருமே எனக்கு பொருத்தமான ஜோடிதான்." என்றார் .

பத்மபிரியாவுக்கும் லட்சுமிராய்க்கும் போட்டி - சண்டை



திறமையான நடிகை யார்? என்பதில் பத்மபிரியாவுக்கும் லட்சுமிராய்க்கும் போட்டி ஏற்பட்டு “இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்” படப்பிடிப்பில் மோதிக்கொண்டனர்.

இந்த படத்தை சிம்புத் தேவன் இயக்குகிறார். இவர் வடிவேலை கதாநாயகனாக்கி “இம்மை அரசன் 23-ம் புலிகேசி” ஹிட் படத்தை எடுத்தவர். கதாநாயகனாக லாரன்ஸ் நடிக்கிறார். இது பழைய “ஹவ்பாய்” சாயலிலான கதை. அனைத்து நடிகர், நடிகைகளும் “ஹவ்பாய்” படங்களில் வரும் காஸ்ட்யும்களை அணிந்து நடித்துள்ளனர்.

பத்மபிரியா, லட்சுமிராய் இருவரும் இப்படத்தில் நடித்தபோது நான்தான் கதாநாயகி என்று இருவரும் மாறி மாறி சொல்லிக் கொண்டனர். இதுவே அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. எனக்குத் தான் படத்தில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று இயக்குனரையும் காய்ச்சி எடுத்தனர். இருவரையும் சமரசப்படுத்த முடியாமல் அவர் திணறினார்.
“மிருகம்”, “பொக்கிஷம்”, “தவமாய் தவமிருந்து” படங்கள் மூலம் என் திறமையான நடிப்பை நாடே அறியும் லட்சுமிராயால் அது போன்று நடிக்க முடிந்ததா? என்று படப்பிடிப்பில் சிலருடன் பத்மபிரியா பேசி உள்ளார். அது லட்சுமிராய் காதுக்கு போக நான்தான் அவரை விட திறமையான நடிகை என ஆவேசப்பட்டுள்ளார். இவர்களை ஒரு வழியாக சமாளித்து படப்பிடிப்பை முடித்தாராம் சிம்புதேவன். இதில் சந்தியாவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் “இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதிலும் அவர்கள் பனிப்போரை காண முடிந்தது. பொதுவாக இது போன்ற பொது விழாக்களுக்கு லட்சுமிராய் கவர்ச்சி உடையில் வருவது உண்டு. அவருக்கு போட்டியாக பத்மபிரியா முதல் தடவையாக நமிதா ரேஞ்சுக்கு படுகவர்ச்சியான உடை அணிந்து வந்தார்.

கன்னட நடிகர் விஷ்ணு வரதன் மரணம்

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் விஷ்ணுவர்தன் (59) இன்று அதிகாலை திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். மைசூருக்கு குடும்பத்தோடு ஓய்வெடுக்க நடிகர் விஷ்ணுவர்தன் சென்றார். அங்கு கிங்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார். இன்று அதிகாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

விஷ்ணுவர்தனின் மனைவி பிரபல நடிகை பாரதி. குழந்தைகள் இல்லை. நடிகர் ராஜ்குமாருக்கு பிறகு ஏராளமான ரசிகர்களின் அபிமானத்தை பெற்றவர். விஷ்ணுவர்தனின் உடல் மைசூரிலிருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்டு ரசிகர்களின் அஞ்சலிக்காக பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் உடலுக்கு கன்னட திரையுலகின் நடிகர், நடிகைகள், ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பெங்களூர் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது.

இவரது மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்க இருந்த சட்டப்பேரவை மற்றும் சபாநாயகர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை சுகாசினி, பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1950ம் ஆண்டு பிறந்த விஷ்ணுவர்தன் கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். விஷ்ணுவர்தன் கதாநாயகனாக அறிமுகமான முதல் கன்னட படம் நாகராவ். சிறந்த நடிகருக்காக 7 முறை மாநில அரசு விருதை வென்றவர்.

விஷ்ணுவர்தனின் இயற்பெயர் சம்பத்குமார். 197 படங்களில் நடித்துள்ளார். மழலைப் பட்டாளம், அலைகள் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். விடுதலை, ஸ்ரீராகவேந்திரர் ஆகிய படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ஆப்தரக்ஷகா(சந்திரமுகி - 2) என்ற படத்தில் விஷ்ணுவர்த்தன் சமீபத்தில் நடித்து முடித்தார். இது அவரது 200வது படம். இப்படம் இன்னும் ரீலீசாகவில்லை.

ஓடி ஒளியும் சாமியார் - பின்னணியில் போலீஸ் உயர் அதிகாரி ?

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசித்து வந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார். இவர் மீது தேனாம்பேட்டையை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கொடுத்தார். மாம்பலம் உதவி போலீஸ் கமிஷனர் கண்ணபிரான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். ஹேமலதாவிடம் விசாரணை நடத்திய போலீசார் மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டனர்.

இதேபோல் விசாரணைக்கு ஆஜராக சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரை கனிவாகவும், கட்டளையிட்டும் அழைத்து பார்த்தனர். ஆனால் அவர் போலீசாரை கண்டு கொள்ளவில்லை. சாமியார் வழக்கை நிதானமாக விசாரிப்பார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய கருத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாமியார் போலீசாருக்கு நிதானமாகவே ஒத்துழைப்பு கொடுக்கலாம் என்று தலைமறைவாகிவிட்டார்.

நாட்கள் நீண்டு கொண்டே போனதால் சாமியாரை பிடித்து வந்தாவது விசாரிக்கும் முடிவுக்கு போலீசார் வந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சாமியாரின் செல்போன் மூலம் அவர் பெங்களூரில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.

அவரை பிடிக்க தனிப்படை பெங்களூர் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. 2 நாட்கள் தேடிய பின்னர் சாமியார் பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று சுற்றிவளைக்க திட்டமிட்டனர். ஆனால் அதற்குள்ளாக சாமியாருக்கு போலீஸ் வரும் தகவல் தெரிந்துவிட்டது.

உடனடியாக அவர் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு அவசர அவசரமாக பெங்களூர் விமானநிலையம் சென்றார். அங்கிருந்து விமானத்தில் ஏறி டெல்லிக்கு தப்பி சென்றார். போலீசார் எவ்வளவோ முயன்றும் சாமியாரை மடக்கிபிடிக்க முடியவில்லை.

அவர் வி.ஐ.பி.க்கள் செல்லும் முக்கிய வழியாக விமானத்தில் ஏறியதால் அவரை போலீசாரால் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. முன்ஜாமீன் பெற வேண்டும் அல்லது கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தப்பி ஓடிவருகிறார்.

சென்னை, திருப்பதி, சீரடி, மும்பை, பெங்களூர், டெல்லி என்று திடீர் திடீரென விமானத்தில் ஏறி தப்பி ஓடும் சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல் போலீசார் குழம்பிப் போயுள்ளனர். அங்கிருந்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி "சாமியார் மத்திய அரசின் ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற பதவியில் உள்ளார். இது சக்திவாய்ந்த பதவி. அதை வைத்து போலீசாரை பயமுறுத்தி வருகிறார். வழக்கு விசாரணையின்போது ஹேமலதா சாமியார் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.

குறிப்பாக தியாகராயநகர் வீட்டில் 30 முறையும், கோட்டூர்புரம் வீட்டில் 20 முறையும் என மொத்தம் 50 முறை சாமியார் எனது வாழ்வை சீரழித்தார் என்று திகில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது உண்மையா என்று விசாரிக்க வேண்டுமானால் சாமியார் நிச்சயம் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.

பின்னர் என்னிடம் விசாரிக்காமல் போலீசார் நடவடிக்கை எடுத்துவிட்டனர் என்று சாமியார் புலம்பும் நிலை வந்துவிடக்கூடாது. அதேநேரம் இந்த வழக்கு தியாகராயநகர், கோட்டூர் புரம், அபிராமபுரம் உள்ளிட்ட 3 போலீஸ் நிலையம் சம்பந்தப்பட்டதாக உள்ளது.

ஏற்கனவே தாமதமாக விசாரணை நடந்து வருகிறது. நடவடிக்கையும் தாமதமாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

இதற்கிடையே தியாகராய நகரில் புத்தாண்டு பண்டிகை, வியாபாரம் சூடிபிடிக்க தொடங்கி உள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு பாதுகாப்பு பணிக்கே போலீசார் இல்லாமல் அல்லாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே சாமியார் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர் " என்றார் .

12 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள டி.ஐ.ஜி.

போலீஸ்காரர் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த முன்னாள் டி.ஐ.ஜி. கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார். போலீஸ் டி.ஜி.பி.யின் பாலியல் தொந்தரவு தாங்காமல் சண்டிகர் பள்ளி மாணவி ருச்சிகா தற்கொலை செய்தது தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தானில் போலீஸ் முன்னாள் டி.ஐ.ஜி. ஒருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் பலாத்கார புகார் 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்ப ட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குற்றச்சாட்டுக்குள்ளான போலீஸ் அதிகாரியின் பெயர் மதுக்கர் டாண்டன். கடந்த 1997ல் ராஜஸ்தான் மாநிலம் தவுசா நகரில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றினார். அப்போது, அவரது வீட்டில் ஆர்டர்லியாக வேலை பார்த்த போலீஸ்காரரின் மனைவி மாலினியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மதுக்கர் டாண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதும் டாண்டன் தலைமறைவாகிவிட்டார். 2002ல் அவரை ராஜஸ்தான் அரசு பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது.

ருச்சிகா விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மதுக்கர் டாண்டன் விவகாரமும் மீண்டும் பேசப்படுகிறது. இது குறித்து மாலினியின் கணவர் கூறுகையில், ÔÔநான் போலீசில் வேலை பார்த்ததால் டி.ஐ.ஜி. மீதான புகாரை வாபஸ் வாங்கிவிடு என்று உயர் அதிகாரிகள் மிரட்டினர். பணம் கொடுப்பதாக சொன்னார்கள். வாங்க மறுத்ததால் என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்கள். கொடுமை தாங்க முடியாமல் கடந்த 2001ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட போதும் அவரை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே 2002ம் ஆண்டில் டான்டனின் எல்லா சொத்துக்களையும் முடக்கி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை. 2005ல் நொய் டாவில் உள்ள சொத்தை டாண்டன் விற்று விட்டார். பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்க வேண்டும், டாண்டனை கைது செய்து தண்டிக்க வேண்டும்ÕÕ என்றார்.

இது தொடர்பாக தவுசா தொகுதி எம்.பி. கிரோரி லால் மீனாவின் உதவியை மாலினியும், அவரது கணவரும் நாடினர். இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை நேற்று சந்திக்க எம்.பி.யுடன், மாலினியும், அவரது கணவரும் சென்றனர். ஆனால், அவர்களை சந்திக்க முதல்வர் மறுத்துவிட்டார். இதனால், எம்.பி. கிரோரி லால் மீனாவும், மாலினி, அவரது கணவர் ஆகியோர் கெலாட் வீடு அருகே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கர் டாண்டனை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

எல்லாமே இசைதான் - ஸ்ருதி நெகிழ்ச்சி


"எனக்கு எல்லாமே இசைதான். அதற்கு அடுத்ததுதான் மற்ற விஷயங்கள் அன்புக்கான உணவுதான் இசை. அது இல்லாமல் நானில்லை. என் மனம் எப்போதும் அமைதியாக இருக்க, இசைதான் முக்கிய காரணம். சமீபத்தில் சென்னையில் எனது இசை நிகழ்ச்சியை நடத்தினேன். நீண்ட இடைவெளிக்கு பின், இங்கு நடந்த எனது இசை நிகழ்ச்சி இது. இதில் மராட்டிய இசை குழுவுடன் சேர்ந்து பணியாற்றினேன்.

எனது பழைய இசைக் குழுவுடன் ஏன் பணியாற்றவில்லை எனக் கேட்கிறார்கள். இசை அமைப்பாளர், பல வகை திறமை கொண்ட குழுக்களுடன் பணியாற்ற வேண்டும். பலவித கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும். அதுதான் எனது விருப்பம். நாடு முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த பயணமாகும்போது நிறைய குழுக்களை பார்த்தேன். பல திறமையான இசைக்குழுக்கள் உள்ளன. அவர்களுடன் பணியாற்றவே விரும்புகிறேன். தேவ் டி இந்தி படத்துக்கு இசையமைத்த அமித் திவாரியின் இசை எனக்கு மிகவும் கவர்ந்தது. அவருடனும் பணியாற்ற வேண்டும். இசைதான் எனக்கு எல்லாமே. மற்ற விஷயங்கள் அடுத்ததுதான்"இவ்வாறு ஸ்ருதி கூறினார்.

மலேசியாவில் சித்ரவதை தாங்காமல் தப்பினோம்


அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு வேலூர், கடலூர் மாவட்டத்தில் இருந்து மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற வாலிபர்கள் 29 பேர் கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். சம்பளமே வழங்கா மல் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.வேலூர் மாவட்டம் புல்லூர் கிராமத்தை சேர்ந்த வடிவேல், ஒடுகத்தூரை சேர்ந்த பழனி, சதீஷ் ஆகிய 3 பேர், மலேசியாவில் கொத்தடிமைகளாக இருந்து தமிழகத்துக்கு தப்பி வந்துள்ளனர். இதுபற்றி வடிவேல் கூறியது:வேலூர் மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்த கருணாகரன் என்பவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்புவதாகவும், அங்கு மாதம் ரூ.50,000 வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறினார். இதை நம்பி நானும், ரஞ்சித்குமார், சுரேஷ் உட்பட 15 பேருடன் கடந்த 2007ல் மலேசியாவுக்கு சென்றோம்.

எங்களை பாசிகுல்லா என்ற இடத்துக்கு, கம்பெனி உரிமையாளர் ஜில் மணியம் என்பவர் அழைத்து சென்றார். அங்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் உட்பட 14 பேரும் அழைத்து வரப்பட்டனர். அங்குள்ள ராட்சத கப்பலில் புகை சூழ்ந்த 150 அடி உயர ஆயில் டேங்க் மீது ஏறி சுத்தம் செய்ய கூறினர். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 3 மாதம் மட்டும் குறைவாக சம்பளம் கொடுத்தனர். பின்னர் சம்பளம் தருவதையே நிறுத்தி விட்டனர். சம்பளம் கேட்டால், ‘கொத்தடிமைகளாகத்தான் உங்களை இங்கு கொண்டு வந்திருக்கிறோம். தருவதை சாப்பிட்டுவிட்டு, ஒழுங்காக வேலையைப் பாருங்கள்’’ என்று கூறி நள்ளிரவில் வந்து அடித்து உதைத்தனர். இதனால் பழனி, சதீஷ் ஆகியோருடன் அங்கிருந்து தப்பி இந்திய தூதரகத்துக்கு சென்றோம்.

அங்கு ‘எங்களது பாஸ்போர்ட் திருடு போய்விட்டது. எங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள்’ என்று கண்ணீர் மல்க கூறினோம். இதையடுத்து, எங்களுக்கு இந்திய தூதரகம் அவுட்பாஸ் வழங்கியது. அதன்மூலம் இந்தியா வந்தோம். மற்றவர்களின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு வடிவேல் கூறினார்.
இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மலேசியாவுக்கு 14 பேரை அனுப்பிய ஏஜென்ட் கருணாகரனை, புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை காவலில் எடுத்து, தீவிரமாக விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

லாரன்ஸ் கட்டிய ராகவேந்திரா கோயில் 1ம்தேதி திறப்பு


நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள ராகவேந்திரா கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வருகிற ஜனவரி 1ம்தேதி திறப்பட உள்ளது. சென்னை திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயிலில் ‌‌1ம்தேதி முதல் "பொதுமக்கள் பூஜை செய்யலாம் "என்றார் .

சென்னையில் 33வது புத்தக கண்காட்சி இன்று துவக்கம்

சென்னையில் 33வது புத்தக கண்காட்சி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இன்று (டிச. 30ம் தேதி) மாலை துவங்குகிறது.

புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். சென்னையில் ஆண்டு தோறும் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை 10 நாட்களுக்கு புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு பதிப்பகத்தாரின் புத்தகங்கள் இடம் பெறும். புத்தக கண்காட்சியில் வாங்கப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. இந்தாண்டு கண்காட்சி டிச. 30 முதல் ஜன. 10ம் தேதி வரை நடக்கிறது. வாரநாட்களில் பிற்பகல் 2.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11.00 மணி முதல் இரவு 8.30 மணிவரையிலும் கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச அனுமதி உண்டு. கண்காட்சியை ஒட்டி, நாள்தோறும் பட்டி மன்றம், உரை அரங்கம், கவிதை திருவிழா நடக்கின்றன. அத்துடன் மாணவ, மாணவியருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. புத்தக கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் செய்துள்ளனர்.

துவக்க விழாவில் முதல்வர் பெயரால் ஆறு எழுத்தாளர்களுக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது. அத்துடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஐந்து பேருக்கு விருதுககள் வழங்கப்படுகின்றன. விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜவுளி வர்த்தகர் நல்லிகுப்புசாமி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சேதுசொக்கலிங்கம், சங்க செயலர் ராம.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஆந்திராவில் அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு : பணியாற்ற மந்திரிகள் மறுப்பு

தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஆந்திர மாநில அமைச்சர்கள், தங்கள் பணிகளை செய்ய மறுப்பதால், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை போராட்டக் குழு, இன்று முதல் காலவரையற்ற "பந்த்'திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், தெலுங்கானா பகுதிகளில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐதராபாத் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் ஒருவார காலத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தது. இதற்கு ஆந்திராவின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியது. இதனால், தெலுங்கானா பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்தது."தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள் 13 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.அமைச்சரவை கூட்டங்கள், ஆவணங்கள் சரிபார்த்தல், திட்டங்களை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திடுவது போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடாமல், இவர்கள் புறக்கணித்து வருகின்றனர். இதனால், கடந்த சில வாரங்களாக மாநில அரசு நிர்வாகம் செயல்படாமல் ஸ்தம்பித்துள்ளது. அத்தியாவசியப் பணிகள் கூட நடக்காத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவரும், மாநில உணவு வழங்கல் துறை அமைச்சருமான கிருஷ்ணா ராவ் கூறுகையில், "தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையை தெளிவாக அறிவிக்க வேண்டும். அதுவரை அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்க போவது இல்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளோம். எங்களின் பிரச்னைகளை கட்சி மேலிடத்திடம் தெரிவித்து விட்டோம். விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என, நம்புகிறோம்'என்றார்.


இன்று "பந்த்' : அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தெலுங்கானா கூட்டு நடவடிக்கை போராட்டக் குழு, இன்று முதல் காலவரையற்ற "பந்த்'திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், தெலுங்கானா பகுதிகளில் மீண்டும் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமைதியான வழியில் போராட்டம் நடத்தப் போவதாக போராட்டக் குழு கூறியிருந்தாலும், வன்முறை வெடிக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது. ஐதராபாத் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் ஒரு வார காலத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30 கம்பெனி துணை ராணுவப் படையுடன், தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. ஐதரபாத், உஸ்மானியா பல்கலை மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணிக்கும்படி பொதுமக்களுக்கு, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஜனாதிபதி ஆட்சி? தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களும், தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்களுமான நாகம் ஜனார்த்தன ரெட்டி, நரசிம்மலு, தேவேந்தர் கவுடு உள்ளிட்டோர் நேற்று ஐதராபாத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.


அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆந்திராவில் அரசு இயந்திரம் செயல்படுகிறதா, இல்லையா என்பதை முதல்வர் ரோசய்யா தெளிவுபடுத்த வேண்டும். புதிதாக கவர்னர் பதவியை ஏற்றுள்ள நரசிம்மன், மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் காரணமாக, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி விரைவில் அமல்படுத்தப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற ஈரான் நாட்டு பெண்கள் கைது

சென்னை சிட்டி சென்டரில், கள்ளநோட்டை மாற்ற முயன்ற, ஈரான் நாட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 23 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டரில், "லைப் ஸ்டைல்' கடை உள்ளது. இக்கடைக்கு நேற்று முன்தினம் மாலை இரு வெளிநாட்டு பெண்கள் துணி வாங்க வந்தனர். கடையில், 4,000 ரூபாய்க்கு துணிமணிகளை வாங்கிய அப்பெண்கள், அதற்காக, 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர். அந்த நோட்டுகளை கடைக்காரர்கள் ஆய்வு செய்தபோது, அவை கள்ளநோட்டுகளாக இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, "லைப் ஸ்டைல்' மேலாளர் பிலால், மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். மயிலாப்பூர் போலீசார், இரு பெண்களையும், போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் ஈரானைச் சேர்ந்த, ஹசன் அப்தாகியின் மனைவி அஷ்ரப் மொர்தாசாவி(62), அலிரிசாநாகதியின் மனைவி சலோமி அப்தாகி(29) எனத் தெரிந்தது. அஷ்ரப் மொர்தாசாவி, 2008ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதியிட்ட, ஈரான் பாஸ்போர்ட்டும், சலோமி அப்தாகி, கடந்த ஜூன் 25ம் தேதியிட்ட ஈரான் நாட்டு பாஸ்போர்ட்டும் வைத்திருந்தனர். அஷ்ரப் மொர்தாசாவியிடமிருந்து, 23 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள்.


சென்னை மனப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மிஷன் பாபுஜி ஆசிரமத்தில், தியானப் பயிற்சி மேற்கொள்ள வந்திருப்பதாக ஈரான் பெண்கள் தெரிவித்தனர். இதற்காக, கடந்த 3ம் தேதி சென்னை வந்த அவர்கள், ஆசிரமத்திலேயே தங்கியுள்ளனர். இதையடுத்து, ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு கள்ள நோட்டுகள் எதுவும் இல்லை. கைப்பற்றப்பட்ட நோட்டுகளை ஈரான் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும், "நூர் மணி எக்சேஞ்சர்' மூலமாகப் பெற்றதாக ஈரான் பெண்கள் தெரிவித்தனர். விசாரணையின் முடிவில், கள்ளநோட்டுகளை வைத்திருந்த மற்றும் மாற்ற முயன்றதாக அஷ்ரப் மொர்தாசாவி கைது செய்யப்பட்டார். அவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளை ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி, நாசிக்கில் உள்ள இந்திய செக்யூரிட்டி பிரஸ் ஆகியவற்றிற்கு போலீசார் அனுப்பவுள்ளனர்.


தொடரும் கள்ள நோட்டு வழக்குகள்: சென்னையில் தி.நகர், ஐஸ்ஹவுஸ் உட்பட கடந்த மூன்று மாதங்களில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற வழக்கில், 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான, வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கள்ள நோட்டு கும்பலின் முக்கிய குற்றவாளியான மனருல் ஷேக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஜார்க்கண்டில் கைது செய்தனர். அவருக்கு சர்வதேச தொடர்பு இருக்கும் என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரானைச் சேர்ந்த பெண் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ( PHOTO COURTESY : DINAMALAR DAILY )

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: பால்தேவ் நாயுடுவை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது சிங்கப்பூர்

தமிழீழ விடுதலைப் பு1லிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பால்தேவ் நாயுடு ராகவனை (47) அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது சிங்கப்பூர். பால்தேவ் நாயுடு ராகவன் அல்லது பால்ராஜ் நாயுடு ராகவன் என்று அழைக்கப்படும் சிங்கப்பூரர் அமெரிக்காவில் பயங்கரவாதம் தொடர்பான வழக்கை எதிர்நோக்குகிறார். அவர் டிசம்பர் 18ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பட்டதாக சிங்கப்பூர் போலிஸ் தமிழ் முரசிடம் உறுதிப்படுத்தியது. சதித்திட்டம் தீட்டியது, வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்குப் பொருட்களை வழங்கியது, பயங்கர ஆயுதத்தைக் கைவசம் வைத்திருந்தது உட்பட ஆறு குற்றச்சாட்டுகளை அவர் மீது அமெரிக்க அரசு சுமத்தியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் இக்குற்றங்களை அவர் புரிந்ததாகக் கூறப்படுகிறது. புலிகளுடனான தொடர்பை மறுக்கும் பால்தேவ் இன்று அமெரிக்காவில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார். அவர் தற்போது பால்டிமோரில் உள்ள விசாரணை தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 22ம் தேதி சிங்கப்பூர் வீட்டில் கைது செய்யப்பட்ட அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவில் தீவிரவாதம் தொடர்பான வழக்கை எதிர்நோக்குவதற்கு பால்தேவ்வுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நவம்பர் 3ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் திரு நாயுடு. நாயுடுவுடன் இணைந்து சதிச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆயுதத் தரகர் ஹனீஃபா ஒஸ்மானுக்கு (57) 2008ல் பால்டிமோர் நீதிமன்றம் 37 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது. சிங்கப்பூர் நாயுடுவை அமெரிக்காவிடம் ஒப்படைத்ததை இலங்கை அரசாங்கம் பாராட்டி உள்ளதாக இலங்கைப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்தியாவுக்கு அனுமதி மறுப்பு

இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான
திரு சிவாஜிலிங்கம் சனிக்கிழமையன்று லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்திறங்கினார்.
இந்திய மத்திய அரசின் ஆணையை அடுத்து அவருக்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக, சென்னை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக சிவாஜிலிங்கம் பிபிசி செய்தியிடம் தெரிவித்துள்ளார்.
“எந்தக் காரணங்களும் தெரிவிக்கப் படவில்லை. தேர்தலில் போட்டியிடுவது காரணமாக இருக்கலாம் என நான் சந்தேகப்படுறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒரே தமிழர் இவர்.
இந்தத் தகவலை விமான நிலைய குடியேற்றப் பிரிவு வட்டாரங்களும் உறுதி செய்துள்ளதாக பிபிசி செய்தி கூறியது.
சென்னையிலிருந்து துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்ட சிவாஜிலிங்கம், அங்கிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரில் இடம்பெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்காகவும், தனது மருத்துவ சிகிச்சைக்காகவும் அவர் இந்தியா சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொலைபேசி மூலமாக மாநாட்டில் பேசியதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு அதிகாரபூர்வ கடிதம் அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சரத் கொஹன்ககே என்பவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா, இலங்கை இரு நாட்டுக் குடியுரிமைகளையும் வைத்துள்ள சரத் பொன்சேகா, அமெரிக்காவுக்கே விசுவாசம் உடையவராக இருப்பார்.
அவருக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதி உள்ளதா என்பது கேள்விக்குறி என அந்த எதிர்க்கட்சி உறுப்பினர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சரத் பொன்சேகா கிளிநோச்சி உட்பட தமிழர் பகுதிகளில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

தலிபான் தளபதி சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் தலிபான் தளபதி ஒருவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். 11 பயங்கரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பாகிஸ்தான் பகுதியில் தலிபான்கள் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக சுவாட் பள்ளத்தாக்கில் அவர்களது ஆதிக்கம் அதிகமுள்ளது. எனவே, இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.


சார்பாக் என்ற இடத்தில் நடந்த சண்டையில் தலிபான் தளபதிகளில் ஒருவரான சித்திக் என்பவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அவனுடைய கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப் பற்றப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் நடந்த பல் வேறு நாசவேலைகளில் சித்திக் சம்பந்தப் பட் டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழங்குடிகள் அதிகம் உள்ள கைபர் பகுதியில் ஷெர் அலி என்ற தலிபான் அமைப்பின் முக்கிய பிரமுகர் உட்பட ஒன்பது பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உடலை சேவைக்கு அர்ப்பணிப்போம் - மகாத்மா காந்தி

இதயப்பூர்வமாக செய்யும் பிரார்த்தனைகள் அற்புதங்களைச் செய்ய வல்லமை பெற்றதாக இருக்கிறது. அந்த பிரார்த்தனையை கடவுள் மிக விரைவாக ஏற்றுக் கொள்கிறார். ஆகவே, இதயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தூய எண்ணங்களை வரவேற்கவும், தீய சிந்தனை, போதனைகளை எதிர்க்கும் துணிவுடையதாகவும் இருக்கும் இதயமே பரிசுத்த இதயம் ஆகும். நீங்களும் உங்கள் இதயத்தை துணிவுடையதாக வைத்துக் கொள்ளுங்கள்.
வயிற்றுக்கு உணவு இல்லாதிருப்பவர்கள், பசியை எண்ணி வருந்த தேவையில்லை. கடவுளை வேண்டி பிரார்த்தனை செய்தாலே போதும். அவர்களுக்கான தேவைகள் கிடைப்பதற்கு அவர் அருள் செய்து விடுவார். ஏனெனில், பசியால் வாடுபவர்களுக்கு கடவுளே உணவாக இருக்கிறார்.
கடவுள் ஒவ்வொருவருக்கும் பாரபட்சம் இல்லாமல், ஒரே மாதிரியான உடலைத்தான் கொடுத்திருக்கிறார். அந்த உடலை கடவுளுக்கு சேவை செய்வதற்குத்தான் பயன்படுத்தவேண்டுமே தவிர, சுகங்களை அனுபவிக்கும் வழியில் ஈடுபடுத்தக்கூடாது. உடல் சுகம் என்பது மரணத்திற்கு ஒப்பானது ஆகும். உங்களது உடலை கடவுள் சேவைக்கு அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.
வெளிப்பொருட்கள் மீது நாட்டம் வைக்காமல், புலன்களை அடக்கி வையுங்கள். அதனை அடக்குவதற்கு விரதம் இருங்கள். இத்தகைய விரதம் ஆன்ம வளர்ச்சியை அதிகரிக்கும் சாதனமாகவும், உடல், மனம், ஆத்மா ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும்.

Monday, December 28, 2009

அசல் ரூபாயில் உள்ள காந்தி படம் தான் போலி நோட்டு தயாரிப்பில் இடைஞ்சல்

போலி ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் சரியாக அச்சிடப்படுவதில்லை. இதை வைத்து போலி ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டறிகிறோம் என, தடயவியல் அதிகாரி தெரிவித்துள்ளார்.கோல்கட்டாவில் உள்ள மத்திய தடயவியல் துறை இயக்குனர் சி.என். பட்டாச்சாரியா கூறியதாவது:ஐந்து, பத்து, நூறு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் காந்தியடிகள் படம் அச்சிடப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் அண்டை நாட்டு விஷமிகள் செயலால் போலி ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்படுகிறது.


குறிப்பாக ஆயிரம், ஐநூறு, நூறு ரூபாய் நோட்டுகள் போலியாக அச்சிடப்படுகின்றன. இப்படி போலியாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் சரியாக அச்சடிக்கப் படுவதில்லை. அந்த படத்தில் காணப்படும் குறைபாடுகளை வைத்து போலி ரூபாய் நோட்டை கண்டறிகிறோம்.மேற்கு வங்கம் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் தற்போது போலி ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. போலி ரூபாய் அச்சடிப்பவர்கள் அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி அசல் ரூபாய் நோட்டுகளை போன்று அச்சடிக்கின்றனர்.ஆனாலும், நிஜ நோட்டுகளில் உள்ள காந்தி படத்தின் இயல்பை இவர்களால் கொண்டு வர முடியவில்லை. இது, தடயவியல் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.


நாங்கள் மேற்கொண்ட பல போலி நோட்டுகளில் காந்தியின் உருவம் மாறியிருப்பதே, அடையாளம் காண முக்கிய காரணியாக அமைந்தது.இவ்வாறு பட்டாச்சாரியா கூறினார்.மற்றொரு தடயவியல் துறை அதிகாரி சந்தீப் பத்ரா குறிப்பிடுகையில், "436 போலி ரூபாய் நோட்டுகளை பரிசோதித்ததில் ஒரு போலி ரூபாய் நோட்டுக்கூட அசல் ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்துடன் ஒத்து போகவில்லை"என்றார்.

நடிகை ஏஞ்சலினா ஜோலி,கணவர் பிராட் பிட்-ரூ.47 லட்சம் நன்கொடை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி மற்றும் அவரது கணவர் பிராட் பிட் ஆகியோர் அனாதை குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்துக்கு ரூ.47 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளனர்.
அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது எஸ்ஓஎஸ் அநாதை குழந்தைகள் தொண்டு நிறுவனம். உலகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு இது உதவி செய்து வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இந்த நிறுவனத்துக்கு ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி மற்றும் அவரது கணவர் பிராட் பிட் ஆகியோர் ரூ.47 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளனர்.
"அனாதை மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு எஸ்ஓஎஸ் நிறுவனம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அவர்களது சிறந்த சேவையில் பங்கு கொள்வதற்காக இந்த நிதியுதவியை வழங்குகிறோம்" என ஜோலி தெரிவித்தார்.
"இந்த விடுமுறை சீசனை நாம் எல்லோரும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோம். இந்த நேரத்தில் உறவுகளை இழந்து தவிக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகிறது"என பிராட் தெரிவித்தார்.

இலியானா - த்ரிஷா -பேஷன் ஷோ


சமீபத்தில் சென்னையில் நடந்த பேஷன் ஷோவில் பல நடிகைகள் கலந்துகொண்டு, மேடையில் புது டிசைன் ஆடைகளை அறிமுகப்படுத்தினர்.
இது பற்றி இலியானா "மாடலாக இருந்தபோது பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டேன். அப்படி கலந்து கொண்டதால்தான் பட வாய்ப்பும் கிடைத்து. 2004&ம் ஆண்டுக்கு பின் பேஷன் ஷோக்களில் பங்கேற்க முடியவில்லை. காரணம், சினிமாவுக்கு வந்துவிட்டேன். சமீபத்தில் நடந்த ஷோவில் சன் கிளாஸை அறிமுகம் செய்ய மேடையில் நடந்து வந்தேன். இது சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்தது" என்றார். த்ரிஷா "சமீபத்தில் நடந்த பேஷன் நிகழ்ச்சியில் நடந்து வர எனது நண்பர் டிசைனர் சிட்னிதான் காரணம். சினிமாவுக்கு வந்த பின்பும் சில பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அது எல்லாமே சிட்னிக்காக"என்றார்.

வன்னியில் கன்னி வெடி - தாமதம்

அடர்ந்த காட்டுக்குள் கண்டறியப்பட முடியாத நிலையில், புலிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருப்பதால், அவைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதில், காலதாமதம் ஏற்படும், என ராணுவ முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.இலங்கையில், புலிகளுடனான சண்டை கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது.


சண்டையின் காரணமாக, குடிபெயர்ந்த தமிழர்கள் தனியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களைக் குடியமர்த்துவதாக அரசு அறிவித்த போதும் இன்னும் ஒரு லட்சம் பேர் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பமுடியவில்லை. வரும் ஜனவரி மாத இறுதியில் இவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ஆனால், புலிகள் தங்கள் கட்டு பாட்டில் இருந்த பகுதிகளில் ஏராளமான கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர்.


அடர்ந்த காட்டுக்குள் இந்த கண்ணி வெடிகள் புதைக் கப்பட்டுள்ளதால், இவற்றை அகற்றுவதில் காலதாமதம் ஆகும், என கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி மேஜர் கே.ராஜு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ராஜு இது குறித்து, கூறியதாவது:


புலிகள் கடந்த காலங்களில் 15 லட்சம் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளதாக கூறுகின்றனர். சாதாரணமாக கண்ணிவெடிகள் நிலத்தடியில் 10 செ.மீ.,ஆழத்தில் புதைக்கப்படும். ஆனால், புலிகள் 13 செ.மீ.,ஆழத்தில் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர். எங்கள் குழு இந்த ஆண்டில் கடந்த மாதம் வரை ஆயிரம் கண்ணி வெடிகளை அகற்றியுள்ளது.


ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் கண்ணி வெடியை அகற்றுவதற்கு 150 ரூபாய் செலவாகிறது. ஆறு குழுக்கள் தற்போது கண்ணிவெடிகளை அகற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன.கைகள் மூலம் கண்ணிவெடிகளை அகற்றினால், ஒரு நாளைக்கு 15 முதல் 20 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள கண்ணி வெடிகளை தான் அகற்ற முடியும்.


குரோசியா,ஸ்லோவேகியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதி நவீன கருவிகளை கொண்டு ஒரு நாளைக்கு 5,000 முதல் 7,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற முடியும்.வன்னி பகுதியில் மக்கள் மீண்டும் குடியேற்றப் பட்டாலும், அவர்கள் கண்ணிவெடிகள் இல்லாத பாதுகாப்பான வழியாக செல்லும் படி அறிவுறுத்த வேண்டிய நிலை உள்ளது. தமிழ் மக்கள் அவர்களதுபகுதியில் குடியேறினால், ஒரு சில இடங்களில் அகற்றப்படாத கண்ணி வெடிகளை கண்டால், அதை எப்படி கையாள வேண்டும், என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது.


ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. கடந்த ஏழாண்டுகளாக, கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளேன். 2002ம் ஆண்டு முதல் இரண்டு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், 4,500 கண்ணிவெடிகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு ராஜு கூறினார்.இதனிடையே, "ஜெய்ப்பூர் கால்' என்று அழைக்கப்படும் ஊனமுற்றோருக்கு உதவும் செயற்கைக் கால்கள் 600 இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன.


இம்மாதிரி செயற்கைக் கால்கள் இந்திய அரசு உதவியுடன் தயாரித்துத் தர யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. செயற்கைக்கால் ஒன்றின் விலை 2,000 ரூபாய் என்ற சலுகையில் தர, பகவான் மகாவீர் விகலாங் சகாயதா சமிதி என்ற ஜெய்ப்பூரைச் சார்ந்த அமைப்பு தருகிறது.


ஒருமாத காலமாக, இங்கே டாக்டர்கள் குழு தங்கி, பாதிக்கப்பட்டவர்கள் கால்களை அளந்து, அதற்கேற்ப செயற்கைக் கால் தயாரித்து தருகின்றனர். இந்த ரகக் கால்களை பொருத்திக் கொள்பவர்கள், எளிதாக நடக்க மட்டும் அல்ல, சைக்கிளும் ஓட்டலாம்.

கழிவறையில் நைஜீரிய வாலிபர்

ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து அமெரிக்கா நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்ட மற்றொரு விமானத்தில், பயணித்த நைஜீரிய வாலிபர் கழிவறையில் நீண்ட நேரம் இருந்ததால் சந்தேகமடைந்த பயணிகள் விமான ஊழியர்களிடம் புகார் செய்தனர். வலுகட்டாயமாக கழிவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த நைஜீரிய வாலிபர் பயணிகளையும், விமான ஊழியர்களையும் சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார்.


இதையடுத்து, விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்கியதும் அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில், அவர் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக கழிவறையில் ஒரு மணி நேரம் தங்கியிருந்தது தெரிய வந்தது. எனவே, இந்த நபர் பயங்கரவாத நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவரல்ல, என எப்.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யோகி படம் வெளியிட தடை

‘பருத்திவீரன்’ படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜன், யோகி பட தயாரிப்பாளர் அமீர் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். தனது வழக்கில், அமீர் ரூ.1 கோடி பாக்கி தர வேண்டும் என்றும், பணத்தை தராமல் யோகி திரைப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரித்து, படத்தை திரையிடலாம். ரூ. 50 லட்சத்துக்கு வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து யோகி படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ராஜசூர்யா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பாக வக்கீல்கள் மனோகர், சகாதேவன் ஆஜராகி, ‘‘நீதிமன்ற உத்தரவின்படி ரூ. 50 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதத்தை இயக்குநர் அமீர் தாக்கல் செய்யவில்லை’’ என்றனர். இதைக் கேட்ட நீதிபதி, இன்னும் 4 வாரத்தில் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும். தவறினால் அவரது அசையா சொத்துக்களை முடக்குவது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்தார்.

எம் ஜி ஆர் கார்டனில் திருட்டு -கொடுமைடா சாமி


எம்.ஜி.ஆர்., கார்டனில் வசிக்கும் அவரது உறவினர் வீட்டில் திருமண "கிப்ட்' பொருட்கள் திருடுபோனது.நந்தம்பாக்கம் ராமாபுரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியம்மாளின் தம்பி மருமகன் மதுமோகன் (54) அவரது மனைவி கீதா(50), குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.மதுமோகனின் மகன் ஆனந்துக்கு கடந்த 20ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்த வெள்ளி, தங்க நாணயம் உள்ளிட்ட "கிப்ட்' பொருட்கள் ஒரு பீரோவிலும், மருமகளின் நூறு சவரன் நகைகள் மற்றும் பட்டுப்புடவைகள் மற்றொரு பீரோவிலும் வைத்திருந்தனர்.


திருமணம் முடிந்ததும், அவசர அவசரமாக வீட்டை பூட்டிவிட்டு கடந்த 21ம் தேதி முதல் 23 ம்தேதி வரை கடலூருக்கு சென்றனர். கடந்த 24ம் தேதி சென்னை திரும்பினர். பின் கடந்த 25ம் தேதி மீண்டும் குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்றனர். நேற்றுமுன்தினம் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டுக் கதவு பூட்டிய நிலையிலேயே இருந்தது.ஆனால், படுக்கையறையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னலை அகற்றிவிட்டு, ஒரு பீரோவிலிருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிப்ட் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

ஹாரி பாட்டருக்கு முதலிடம்


உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதாபாத்திரம், திரைப்படங்கள், யூ டியூப் ஆகிய அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி 10 ஆண்டின் உலகின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜெ.கே. ரவுலிங். இவர் ஹாரி பாட்டர் என்ற கேரக்டரை மையமாக வைத்து எழுதிய நாவல்தான் ஹாரி பாட்டர். முதல் பாகம் 1997ல் வெளியானது. 7 பாகங்களாக வெளிவந்துள்ள இது உலக அளவில் புகழ் பெற்றது. இதுவரை 40 கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. 67 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இது, வர்த்தக அளவில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. கடைசியாக வெளியான 4 பாகங்கள் உலகிலேயே வேகமாக விற்பனையான புத்தகம் என்ற சிறப்பைப் பெற்றன. பின்னர் இந்த கேரக்டரை மையமாக வைத்து ஹாலிவுட் திரைப்படம் வெளியானது. அதற்கும் அமோக ஆதரவு கிடைத்தது.
அமெரிக்காவின் பொழுதுபோக்கு வார இதழ் ஒன்று, கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான டாப் 100 பொழுதுபோக்கு அம்சங்களை பட்டியலிட்டுள்ளது. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆல்பம், நூல்கள், கதாபாத்திரங்கள், ஆடைகள், பாடல்கள், சோசியல் நெட்வொர்க் இணையதளங்கள் மற்றும் யூ டியூப் ஆகியவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அனைத்து அம்சங்களையும் பின்னுக்குத் தள்ளி ஹாரிபாட்டர் கதாபாத்திரம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
ÔÔகடந்த 10 ஆண்டுகளில் பார்த்த, படித்த பொழுதுபோக்கு அம்சங்களிலேயே ஹாரி பாட்டர் கதாபாத்திரம் எங்களது நினைவை விட்டு இன்னமும் அகலவில்லை. குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் வரை அனைவரது உள்ளத்தையும் அது கவர்ந்துள்ளதுÕÕ என டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், சொப்ரனோஸ் என்ற தொலைக்காட்சி தொடர் இரண்டாம் இடத்தையும், யூ டியூப் இணையதளம் மற்றும் தி லார்டு ஆப் த ரிங்ஸ் என்ற திரைப்படம் முறையே மூன்று மற்றும் 4ம் இடங்களைப் பிடித்தன. கடந்த 2000 ஆண்டில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற பாடகி ஜெனிபர் லோபஸ் அணிந்திருந்த ஆடை 29வது இடத்தைப் பிடித்தது.

கமலின் புதிய படத்தில் மாதவன் ஸ்ருதி ஹாசன்



கமல், ஸ்ருதி, கவுதமி புதுப்படம் மூலம் இணைகின்றனர். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் நிறுவனமே இதை தயாரிக்கிறது. கமல் வித்தியாசமான காமெடி கேரக்டரில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இதில் டைரக்டர் கே.பாலசந்தர், மாதவன் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே குரு பாலசந்தரை நடிக்க வைக்க பேசி வருவதாக கமல் கூறி இருந்தார். அது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

பாலசந்தர் ஆரம்பத்தில் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். ஆனால் தற்போது தாமிரா இயக்கும் ரெட்டைச்சுழி மற்றும் சொந்த பேனரில் தயாரிக்கும் முறியடி படங்களில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் தொடர்ச்சியாக கமல்படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மாதவன் கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தை கவுதமி இயக்குவார் என்று பேச்சு அடிபடுகிறது. அவரிடம் கேட்டபோது “இதையெல்லாம் நினைத்து பார்க்கவே முடியவில்லை. சினிமா எடுப்பதற்கான என் திறமையை நீரூபிக்க நீண்ட தூரம் போக வேண்டியது உள்ளது. பாலசந்தர்சாரை நான் டைரக்டு செய்கிறேன் என்பதெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியாதது” என்றார்.

இப்படத்துக்கு கமல் மகள் ஸ்ருதி இசையமைக்கிறார். இவர் “உன்னைப்போல் ஒருவன்” படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதை கண்டாலும் பயம் ?

அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் ! மூன்று எழுத்து நடிகையை போலீஸ் தொடர்வதாக செய்தி வந்ததிலிருந்து அம்மணி ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கிறாராம்.போனில் கூட யாருடனும் அதிகம் பேசுவது இல்லையாம்.

`நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' பாடலை `தமிழ்த்தாய் வாழ்த்துப்' பாடலாக ஆக்கிய பெருமை தி.மு.க. அரசுக்கு உண்டு; கருணாநிதி அறிக்கை


முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1919-ம் ஆண்டு ஜுன் மாதம் 22-ம் நாளன்று, திருச்சி டவுன்ஹாலில் பிராமணர் அல்லாதார் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில், திருச்சி வழக்கறிஞர் டி.சி.தங்கவேலு, ராவ்பகதூர் ஓ.கந்தசாமி செட்டியார், டி.ஏ.ஜி.ரத்தினம், டி.வி.சுப்பிரமணியம், திவான்பகதூர் பி.ராமராயநிங்கார், ராமநாதபுரம் மன்னர், கொல்லங்கோடு மன்னர், தொட்டப்பநாயக்கனூர் ஜமீன்தார், டி.ஆர்.மருதமுத்து மூப்பனார் போன்ற பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் முன்னணியினர் கலந்து கொண்டனர்.

அந்த மாநாட்டில், பிராமணர் அல்லாதாருக்குத் தனி வாக்குரிமைத் தொகுதி, வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம், கலப்புத் திருமணம் ஆகியவை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியமான தீர்மானம் பின்வருமாறு:-

"சென்னைப் பல்கலைக்கழகமும், அரசுப் பணித் தேர்வாளர்களும்; பாரசீக மொழி, அரேபிய மொழி, வடமொழி ஆகிய மொழிகளுக்குச்சமமாக; செறிவும், செழிப்பும் நிறைந்த மிகப்பழமை வாய்ந்த இலக்கியங்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியை, செம்மொழியாக அங்கீகாரம் செய்யவேண்டும்.

இவ்வாறு பிராமணரல்லாதார் இயக்கத்தைச் சேர்ந்த நமது நீதிக்கட்சியின் முன்னோர், 1919-ம் ஆண்டிலும்; தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் அமைந்திருந்த கரந்தைத் தமிழ்ச் சங்கம் கடைசியாக 1923-ம் ஆண்டிலும்; தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்படவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியதற்குப் பிறகு;

விடுதலைப் போராட்ட வீரரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பாகிஸ்தான் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தவரும், உருது, அரேபியம், இந்தி, பாரசீகம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த பன்மொழி அறிஞரும், கவிஞரும், பண்டிதநேருவின் மத்திய அமைச்சரவையில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவரும், இலவசத் தொடக்கக் கல்வியை அறிமுகப்படுத்தியவரும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைத்தவருமான மவுலானா அபுல்கலாம் ஆசாத்; 15.3.1951 அன்று - சாகித்ய அகாடமியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் தொடக்க உரையாற்றியபோது, தமிழ்மொழி செழுமையும், தொன்மையும்மிக்க இலக்கியத்தைக் கொண்டது; அம்மொழியிலுள்ள கவிதைகள் வெளிநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்குரிய தகுதி படைத்தவை; தமிழ் உண்மையிலேயே ஒரு செம்மொழி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்; தமிழ் செம்மொழியென அங்கீகாரம் செய்வதற்குரிய தகுதிப்பாடுகள் அனைத்தும் பண்டைக் காலத்தைச் சார்ந்தவை என்று தமிழ் செம்மொழியே என்பதைச் சுட்டிக் காட்டினார்.

1955-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26, 27, 28 ஆகிய தேதிகளில் சிதம்பரம் - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்; 15.3.1951 அன்று மத்திய கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத், சாகித்ய அகாடமியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் ஆற்றிய மேலே குறிப்பிட்ட தொடக்க உரையைச் சுட்டிக்காட்டி, "அவ்வாறு தமிழ்மொழியைச் செம்மொழியென அங்கீகாரம் அளித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அப்படித் தேவையான அங்கீகாரத்தை இந்தக் கீழ்த்திசை மாநாடு வழங்கவில்லையெனில், வேறு யார் தான் வழங்கமுடியும்? என்று வினாக் கணை தொடுத்தார்.

செம்மொழி வரலாற்றில் அடுத்த கட்டம் 1966-ம் ஆண்டு உருவானது. அதனை உருவாக்கியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். பாவாணர் நுண்ணிய ஆய்வு ஆராய்ச்சிக்குப் பிறகு, தமிழ்மொழி செம்மொழியே என மொழி அறிஞர்கள் அனைவரும் ஏற்றுப் போற்றும் வகையில், உரிய சான்றுகளுடன் "உலகின் முதன்மையான செம்மொழி என்ற அரிய நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.

"தமிழ்மொழி-செம்மொழி தகுதிபாட்டுச் சான்று ஆதாரங்கள்:-

தொல் இலமூரியா காலத்தோடு தொடர்புடையது, சந்த ஒலிச் சால்பு, உலகளாவிய உணர்வுப் பெருமிதம், ஆரிய மொழிகளுக்கிடையே, தலைநிமிரும் தமிழின் தரம், சொல்லமைப்பின் தொன்மையும் ஒலிச் சுருக்கமும், தமிழ்மொழியில் உள்ள "அம்மா'' "அப்பா'' என்கிற சொற்கள் பிற பழைமையான மொழிகளில் ஒத்த வடிவங்களில் உள்ளன, எழுவாய் வேற்றுமைக்கு தனி விகுதியின்மை, அடைமொழிகள் பிரிக்கத்தக்கவை - ஆழமுடைமை, தமிழ் சொற்களுக்கு பாலினம் இல்லை, தமிழில் ஒழுங்கு முறையற்ற சொற்கள் இல்லை, தமிழ்மொழி தோன்றிய காலத்தை கண்டறிய இயலும், தமிழில் காணப்படும் சொற்கள் இயற்கையான காரண காரிய தொடர்புடையவை, ஒருமை, இருமை, பன்மை என்று வடமொழியில் இருக்க, தமிழில் ஒருமை, பன்மை என்று இரண்டைப் பொருத்தமாகக் கொண்டு இருத்தல், தமிழின் தனித்தன்மையும் - இயற்கைத் தன்மையும், உயர்ந்த இலக்கியத் தரமிகுந்த நூற்கோவைகள்.

பாவாணர் எடுத்துரைத்த அசைக்கமுடியாத ஆதாரங்கள் தமிழ் ஆர்வலர்களையும், அறிஞர்களையும் மட்டுமல்லாமல், பிறமொழி அறிஞர்களையும் குறிப்பாக, வடமொழி மற்றும் ஆங்கிலப் புலமை மிக்கோரையும் பெரிதும் ஈர்த்து ஏற்றுக் கொள்ளச்செய்தன.

பாவாணரின் தமிழ்மொழி மேதைமையையும், ஆழ்ந்த தமிழ்ப்பற்றினையும், தமிழ் செம்மொழியே என அனைவரும் ஏற்றுக்கொள்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சிகளையும் பாராட்டிப் போற்றிடும் வகையில்; கழக அரசு 1974-ல், "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்'' ஒன்றினை நிறுவி, அதன் முதல் இயக்குநராக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை நியமித்தது. பிறமொழித் தாக்கத்திலிருந்து தமிழைப் பாதுகாக்கத் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் வழியைப் பின்பற்றி; "உலகத்தமிழ்க் கழகம்'' கண்ட பெருமைக்குரியவர் பாவாணர். பாவாணர் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட; மதம் - குலம் இவற்றைக் கடந்து தமிழராக அவர் வாழ்ந்ததால், தம் பிள்ளைகளின் பெயர்களை; நச்சினார்க்கினிய நம்பி, சிலுவையை வென்ற செல்வராயன், அருங்கலைவல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்ற வாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் - என இனிய தனித்தமிழில் வழங்கினார். இருபத்திமூன்று மொழிகளைக் கற்றுத் தேர்ந்து, பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தவர் பாவாணர்.

அத்தகைய பாவாணரின் நினைவைப் போற்றிடும் வகையில் கழக அரசு, 1996-ம் ஆண்டு அவரது படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, அவரது மரபுரிமையர்க்கு ரூ.20 லட்சம் பரிவுத்தொகையை வழங்கியதோடு; அவரது நினைவு சிறப்பு அஞ்சல்தலையை, மத்திய அரசின் மூலம் 18.2.2006 அன்று வெளியிட்டுப் பெருமைகொண்டது. அதுமட்டுமல்லாமல், மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில், பாவாணருக்கு ரூ.39 லட்சத்து 60 ஆயிரம் செலவில் மணிமண்டபமும், அதில் பாவாணரது முழுஉருவச் சிலையும் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு, நான் 30.10.2007 அன்று திறந்து வைத்துச் சிறப்பு செய்தேன்.

அதன்பிறகு, நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டது. தமிழைச் செம்மொழியாக அறிவித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முன்வைத்து, தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலோ, தமிழ் அமைப்புகள் மத்தியிலோ, பெரும் கருத்துருவாக்கம் எதுவும் ஏற்படவில்லை.

அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது, மதுரையில் 1981-ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றியும், அந்த முயற்சிகளுக்கு நேர்ந்த முடிவு பற்றியும், வளர்தமிழ்ச்செல்வர் மணவை முஸ்தபா தனது "செம்மொழி - உள்ளும் புறமும்'' என்ற நூலில் எழுதியுள்ளார்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், இரண்டாம் நாள் காலை, நீதியரசர் மகராஜன் தலைமையில் நடைபெற்ற பொதுநிலைக் கருத்தரங்கில், மணவை முஸ்தபா பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது உரையில், "செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் இருந்தும், அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றி'' விரிவாகப் பேசினார். அவரது உரையைக் கேட்ட எம்.ஜி.ஆர்., மணவை முஸ்தபாவிடம் செம்மொழி தொடர்பாக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, 1982-ம் ஆண்டில், மணவை முஸ்தபா செம்மொழி கோரிக்கை மனுவை, தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பினார். அந்த மனு மீது அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

1984-ல் தனக்கு `கலைமாமணி விருது' அளித்ததற்கு நன்றி கூறும் முறையில், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், மணவை முஸ்தபா செம்மொழி பற்றியும் நினைவூட்டினார். அது அரசுத் துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட; அன்றைய அரசுச் செயலாளர், அக்கோரிக்கை மனு மீது எழுதிய குறிப்பில், "மணவை முஸ்தபா கூறுவது போல், தமிழைச் செம்மொழியாக்கினால், தமிழைச் செத்த மொழிகளின் பட்டியலில் சேர்த்ததாகிவிடும் என்பதால், இக்கோப்பு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது'' என்ற முறையில் குறிப்பு எழுதி, கோப்பையே முடித்து வைத்துவிட்டதாக மணவை முஸ்தபா கையறுநிலை கசியக் கசிய கண்ணீர் மல்கிட தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

செம்மொழி கோரிக்கைக்கு இந்த `கதி' ஏற்பட்டதற்கு பிறகும், இந்த களத்தில், யாரும் கவனம் செலுத்தவில்லை. மாநாடுகளிலோ, கருத்தரங்குகளிலோ, செம்மொழி கோரிக்கை முன்வைக்கப்படவில்லை.

1995-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, தமிழ்ச் செம்மொழிக் கோரிக்கை, அப்போதைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் முன்னிலையில் வைக்கப்பட்டதாகவும்; ஆனால் பிரதமர் அக்கோரிக்கை தொடர்பாக எவ்வித கருத்தையும் வெளிப்படுத்தாமல், தன்னுடைய உரையை நிறைவு செய்தார் என்றும் புலவர் த.சுந்தரராசன் (பொதுச் செயலாளர், தலைநகர்த் தமிழ்ச்சங்கம், சென்னை) கட்டுரை ஒன்றில் மிகுந்த கவலையுணர்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்'' என்று தொடங்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய பாடலை, 1970-ம் ஆண்டில் `தமிழ்த்தாய் வாழ்த்துப்' பாடலாக ஆக்கிய பெருமை, கழக அரசுக்கு என்றென்றும் உண்டு. அதைப் போலவே, தமிழர்களின் நலன் காக்க, நாளும் பாடுபடும் கழக அரசு, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதை எந்த நிலையிலும் நிறுத்தாது என்பதற்கு உதாரணம்தான், நான்காம் முறையாக கழக அரசு பதவியேற்றபோது, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியது; அந்தத்துறை, அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் தலைமையில், 13.5.1996 முதல் செயல்படத் தொடங்கியது.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட அந்தத் துறையின் தலையாய முதல் பணியாக, தமிழைச் செம்மொழி என அறிவிக்கக் கோருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று நான் வழங்கிய அறிவுரைகளையொட்டி; 20.6.1996 அன்று தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப.க.பொன்னுசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் - முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் சி.பாலசுப்பிரமணியம்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச.முத்துக்குமரன், ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜி.ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில்; தமிழ்மொழியைச் செம்மொழியென அறிவிக்கப்படுவது தொடர்பாக, ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சி.ஜான்சாமுவேலால் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, ஒரு சிலமாற்றங்களுடன் ஏற்கப்பட்டு, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டதோடு; தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக்களின் பரிந்துரைகளையும் பெறலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதற்குரிய அடிப்படைத் தகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கிறது என்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கொண்டுள்ள அறிக்கை என்பதாலும்; தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதற்கு அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும், அரசளவிலும், கழக அரசால் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி என்பதாலும்; தமிழ் ஆர்வலர்களும், கழக உடன்பிறப்புகளும் அதனைப் படித்தறிந்து நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையை, தமிழாக்கம் செய்து, அதன் முக்கியப் பகுதிகளை அடுத்த கடிதத்தில் வழங்குகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்

சென்னை தவிர நான்கு நகரங்களில் கலை நிகழ்ச்சிகள்


"சென்னையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது போல திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 4 நகரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அந்தந்த ஊர்களுக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஈரோட்டில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்கு நம்ம ஈரோடு என்று பெயர் சூட்டி உள்ளனர். இது ஜனவரி 2, 3, 4 தேதிகளில் 3 நாட்கள் ஈரோட்டில் நடைபெற உள்ளது.

திருப்பூர் கலை நிகழ்ச்சிக்கு திருப்பூர் கூடல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஜனவரி 29, 30, 31-ந்தேதிகளில் நடக்கிறது.

திண்டுக்கல்லில் 26-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விருதுநகரிலும் கலை நிகழ்ச்சி நடப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகளுக்கான செலவை அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்களே ஏற்று கொள்வார்கள். கலைஞர்களை ஒப்பந்தம் செய்வதை நாங்கள் செய்து கொடுக்கிறோம்.

நாங்கள் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருவதால் கிராமிய கலைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு கிராமிய கலைகள் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இதற்கான மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது " இவ்வாறு கவிஞர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார் .

மீண்டும் சங்கமம் கலைகளை வளர்க்கும் தமிழக அரசு

தமிழர்களின் பாரம்பரிய இசை மற்றும் நாட்டியம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத தொடக்கத்தில் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.

கிராமிய கலைகளை நகர மக்களும் அறிந்து கண்டு மகிழும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் ஜனவரி 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஒரு வாரம் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இது குறித்து சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி எம்.பி. " தமிழ் மையம், தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி- பண்பாட்டுத்துறை ஆகியவை இணைந்து சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளன. இந்த நிகழ்ச்சி 3 ஆண்டுகளை கடந்து 4-வது ஆண்டில் காலடி பதிக்கிறது.

2010-ம் ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகிற 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய திறந்தவெளி கலை- பண்பாட்டு திருவிழா என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

சென்னை சங்கமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்பட 2 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக சென்னையில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும், கல்லூரிகளுக்கும் இடையில் நாட்டுப்புற நடனப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பதிவு செய்துள்ளன. இந்த போட்டிகள் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெறும்.

இறுதிச்சுற்று போட்டி சென்னை சங்கமம் நிறைவு விழா நாளன்று பெசன்ட் நகரில் உள்ள எலியாட்ஸ் கடற்கரையில் நடைபெறும். இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட மேற்கத்திய இசை குழுக்கள் கலந்து கொள்கின்றன. அவர்கள் உலக அமைதி என்ற பொருளில் இசைப்பார்கள்.

இசைக் குழுக்களுக்கு இடையே போட்டிகளும் நடைபெற உள்ளன.

சென்னை சங்கமம் தொடக்க விழா ஜனவரி 10-ந்தேதி மாலை 6.30 மணிக்கு தீவுத்திடலில் உள்ள சுற்றுலா வர்த்தக பொருட்காட்சி அரங்கில் நடைபெற உள்ளது. 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து நிகழ்த்தும் பிறப்பொக்கும்....என்ற இசை நாட்டிய நாடக நிகழ்ச்சி அன்று அரங்கேற்றப்படுகிறது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் தலைப்பான பிறப்பொக்கும் என்ற வாசகமே சென்னை சங்கமம் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

ஜனவரி 11 முதல் 15-ந்தேதி வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, பல்லாவரம் கண்டோன்மென்ட் பள்ளி வளாகம், கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் அரங்கு, பெரம்பூர் திரு.வி.க. நகர் மாநகராட்சி பள்ளி வளாகம், மெரீனா லேடி வெலிஸ்டன் கல்லூரி அரங்கு, தீவுத்திடல் அரங்கு, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா.

அண்ணாநகர் டவர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் தந்தை பெரியார் அரங்கு, அசோக்நகர் பூங்கா, ராயபுரம் அண்ணா பூங்கா, நுங்கம்பாக்கம் சுதந்திர தின விழா பூங்கா, செனாய் நகர் திரு.வி.க. பூங்கா, பாலவாக்கம் பல்கலை நகர் ஆகிய இடங்களில் சென்னை சங்கமம் நடக்கிறது.

இவை தவிர ஒரு சில இடங்களில் தேவைக்கு ஏற்ப கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

கடந்த ஆண்டு தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் நடந்த விடிய விடிய, கொண்டாட்டம் நிகழ்ச்சி போல இந்த ஆண்டு அண்ணா நகர் பகுதியிலும் நடைபெறும்.

சென்னையில் பல கல்லூரி கலைக்குழுக்களும் சென்னை சங்கமத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். வரும் ஆண்டுகளில் பள்ளிகள், கல்லூரிகள் அவரவர் பகுதிகளில் சென்னை சங்கமம் கலை -பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்த ஊக்கு விக்கப்படுவார்கள்.

இந்த கலை நிகழ்ச்சிகளில் 62 விதமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பலவித நடனங்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா கலை குழுக்களும் பங்கேற்கின்றன.

இது தவிர குறும்படங்களும் ஒளிபரப்பு செய்யப்படும். இதற்காக 40-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் வந்துள்ளன. அவற்றில் இருந்து சிறப்பாக காட்டப்படும்.

மேலும் பூங்காக்களில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

தற்போது 17 பூங்காக்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வடசென்னையில் சில குறிப்பிட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

சென்னை சங்கமம் கலை விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், மல்கம்பர், வாள் வீச்சு, உறியடி, வழுக்குமரம் போன்றவையும் இடம்பெறுகின்றன. கடந்த ஆண்டு போல உணவுத் திருவிழாவும் நடைபெறும்.

இதில் திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் கடலை மிட்டாய், பால்கோவா, திண்டுக்கல் வேணு பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், காரைக்குடி இட்லி போன்ற உணவுகளும் வழங்கப்படும்.

சங்கமத்தின் நிறைவுவிழா பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஜனவரி 16-ந்தேதி மாலை பிரமாண்ட வாணவேடிக்கையுடன் நிறைவு பெறும்.

இது தவிர தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சென்னை பிலிம் சென்டரில் நடக்கிறது. கடந்த ஆண்டு 100 கவிஞர்கள் பாடிய கவிதைகள் கவிதை குற்றாலம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டு உள்ளது.

இதை நான் வெளியிடுகிறேன். ராஜாத்தி அம்மாள் பெற்றுக்கொள்வார். விழாவில் கி.வீரமணி, வைரமுத்து பங்கேற்கிறார்கள்.

தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகளில் ஜெயகாந்தன் நூல் ஆய்வு, 100 கவிதைகளும் 25 கவிஞர்களும் என்ற கவிதை விழா உள்பட பல்வேறு இலக்கிய ஆய்வுகள் நடக்கிறது.

கடந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்த ரூ. 3 கோடி செலவானது. இந்த ஆண்டும் அதே அளவு செலவாகும் என்று எதிர்பார்க்கிறோம். கலைஞர்களுக்கு மட்டும் ரூ. 1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது.

தமிழக அரசு இதற்கு ஓரளவு உதவி செய்தது. இந்த ஆண்டும் முதல்-அமைச்சர் கலைஞரை சந்தித்து உதவி கேட்போம்.

நிகழ்ச்சிகளை நாங்களே எப்போதும் ஏற்று முழுமையாக செலவு செய்து நடத்த முடியாது. இதற்கு ஸ்பான்சர்கள் தேவை. இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு ஸ்பான்சர்கள் கிடைக்கவில்லை.

என்றாலும் ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறோம். இது போன்ற கலை நிகழ்ச்சிகளை அரசும் அந்தந்த பகுதி மக்களும் ஏற்று நடத்த வேண்டும்.

இதன் மூலம் தமிழக கிராமிய கலைஞர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் "என்றார் .

பேட்டியின் போது தமிழ் மைய நிறுவனர் ஜெகத்கஸ்பர் ராஜ், லதா பாண்டியராஜன், பிரசன்னா ராமசாமி, கவிஞர் இளைய பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

சாம்யாரை தேடுவது உண்மையிலேயே எதற்காக ?

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்நகரை சேர்ந்தவர் சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார். மத்திய அரசின் ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார். இவர் மீது தேனாம்பேட்டை கிரியப்பா தெருவை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கூறினார்.

மாம்பலம் உதவி போலீஸ் கமிஷனர் கண்ணபிரான் மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறார். ஹேமலதாவிடம் விசாரித்து மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் சாமியாரிடம் விசாரித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்தார்.

ஆனால் சாமியார் கடந்த 4நாட்களாக போலீசுக்கு தண்ணி காட்டி வருகிறார். முதலில் தலைமறைவாக வில்லை என்றவர் திருப்பதிக்கு சென்றார். அங்கிருந்து டெல்லி சென்றார். அங்கிருந்து மும்பை போனார். செல்போனை சுவிட்ஜ் ஆப்செய்யாமல் இருப்பதால் போன் மூலமாக தொடர்பு கொள்ள முடிந்தது. சாமியாருக்கு விசாரணைக்கு ஆஜராக 24மணிநேர கெடு விதித்தனர். இன்று காலையுடன் கெடு முடிந்தது. விசாரணைக்கு ஆஜராகாமல் கண்ணா மூச்சி ஆட்டம் கபிட்டினால் கைது செய்வோம். தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்போம் என்று எச்சரித்தனர்.

இதனால் அதிர்ந்துபோன சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார் நான் மும்பையில் இருந்து ரெயில் மூலமாக சென்னை வந்து கொண்டிருக்கிறேன். மாலைக்குள் ரெயில் சென்னை வந்துவிடும் உடனடியாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விடுகிறேன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய தவறு ஏதும் செய்யவில்லை. கைது செய்ய வேண்டாம் என்று அழுதார்.

சாமியார் தொடர்ந்து கொடுத்து வரும் தொல்லைகளால் நொந்து போயிருக்கும் போலீசார் அவரை கைது செய்து தக்க பாடம்புகட்ட இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே சாமியார் மனைவி லலிதா " குருஜி தவறு ஏதும் செய்யவில்லை என்றாலும் பெண்களுக்கு சட்டத்தில் சாதகமான இடம் உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் கூறுவது உண்மையா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம். ஹேமலதாவுக்கு பின்னணியில் நிலஅபகரிப்பு கும்பல் ஒன்று உள்ளது. அவர்களின் பணம் தான் அவரை கோர்ட்டு, போலீஸ் நிலையம் என்று பேச வைக்கிறது. ஒரு பெண் சாதாணமாக கற்பழிப்பு புகார் கொடுக்க முடியாது. ஒருவேளை குருஜி மேல் ஹேமலதாவுக்கு விருப்பம் (காதல்) ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.

குருஜி நல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவரை கைது செய்ய வைத்தே தீருவேன் என்று ஹேமலதா கூறி வருவதில் இருந்தே அவரது உள்நோக்கம் என்ன என்று புரிகிறது. அவரது பின்னணியில் உள்ள நிலஅபகரிப்பு கும்பலின் சதி தான் இந்த அவதூறு வழக்கு. சில சட்ட காரணங்களால் குருஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறோம் " என்றார்.

இரண்டு படும் ஆந்திரா - கண்டு கொள்ளாத மத்திய அரசு ?

ஆந்திராவில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது நக்சலைட்டுகளை அடியோடு ஒழித்தார். அவரது அதிரடி நடவடிக்கை காரணமாக நக்சலைட்டுகள் ஜார்கண்ட், மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு தப்பி ஓடினர்.

ரோசய்யா முதல்வராக பதவி ஏற்ற பிறகு நக்சலைட்டுகள் மீண்டும் தெலுங்கானா பகுதிக்குள் நுழைந்தனர். அவர்கள் தான் மாணவர்கள் என்ற போர்வையில் தெலுங்கானா போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் மாவோயிஸ்ட் நக்சலைட் தலைவர் சந்திரன்னா தெலுங்கானா மக்களுக்கு துண்டு நோட்டீஸ் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ஐதராபாத் தெலுங்கானா மக்களுக்கு சொந்தமானது. தற்போது இந்நகரில் ஆந்திராகாரர்கள் 70 சதவீதம் பேர் ஆக்கிரமித்துள்ளனர். “அவர்களை ஐதராபாத்தில் இருந்து விரட்டியடித்து விட்டு அவர்களது சொத்துக்களை ஆக்கிரமித்து கைப்பற்றி கொள்ளுங்கள்.

நமக்கு சொந்தமான இடத்தை நாம் கைப்பற்றுவதில் தவறு எதுவும் இல்லை. இது நமது பிறப்புரிமை. அதை யாரும் தடுக்க முடியாது” என்று அதில் கூறி உள்ளார்.

இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த நக்சலைட் ஆதரவாளர்கள் 130 பேர் திடீரென ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள சிரஞ்சீவி மைத்துனரும் பிரபல படத்தயாரிப்பாளருமான அல்லு அரவிந்தின் சினிமா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் “தெலுங்கானாவுக்கு ஜே” என்று கோஷமிட்டபடியே அந்த அலுவலகத்தின் முன்புறம் இருந்த போர்டை கழற்றி வீசினர். அதை தடுக்க முயன்ற காவலாளியை அடித்து விரட்டினார்கள்.

அந்த அலுவலகத்தின் முன்பு “தெலுங்கானா இளைஞர் பிரிவு அலுவலகம்” என்ற டிஜிட்டல் பேனரை கட்டினார்கள். இதை அறிந்ததும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அல்லுஅரவிந்த் அலுவலகத்தை உடைத்து உள்ளே நுழைய முயன்ற அக்கும்பலை விரட்டி அடித்தனர்.

இச் சம்பவத்தால் ஐதராபாத்தில் வசிக்கும் ஆந்திர பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சாமியார் ஸ்ரீகுமாரை தேடிவருகின்றனர் ?

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரைச்சேர்ந்தவர் சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார். இவர் மீது தேனாம்பேட்டை கரியப்பா காலனியைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் உதவி போலீஸ் கமிஷனர் கண்ண பிரான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தலைமறைவாகிவிட்டார். இன்று மதியம் 12 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்று சாமியார் வீட்டில் சம்மன் நோட்டீசும் ஒட்டப்பட்டது.

ஆனால் சாமியார் போலீசாரின் எந்த உத்தரவுக்கும் வளைந்து கொடுக்கவில்லை. இலவுகாத்த கிளியாக ஏமாந்து போன போலீசார் சாமியாரை கைது செய்தாவது விசாரணைக்கு அழைத்து வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

அவரது செல்போன் மூலம் துப்பு துலக்கிய போலீசார் சாமியார் பெங்களூரில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். அவரை சுற்றி வளைக்க தனிப்படை பெங்களூர் விரைந்தது. அங்கு முகாமிட்டு சாமியார் ஸ்ரீகுமாரை தேடிவருகின்றனர்.

தற்கிடையே சாமியார் நாளை கோர்ட்டில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு போலீசில் ஆஜராவது இல்லாவிட்டால் கோர்ட்டில் சரண் அடைந்து விசாரணைக்கு ஒத்துழைப்பது என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் மத்திய அரசின் ஆலோசனை குழு உறுப்பினர் பதவிக்கு போலீஸ் நடவடிக்கையால் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதால் சாமியார் தலைமறைவாக சுற்றி திரிவது தெரிய வந்துள்ளது. மேலும் தனது ஆதரவாளர்கள் மூலம் ஹேமலதாவிடம் சமாதானம் பேசி வருவதாகவும், இன்னும் ஒரு சில தினங்களில் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வந்தார் -அனுபவித்தார் - சென்றார்

ஆந்திராவில் கவர்னராக இருந்த என்.டி.திவாரி மீது செக்ஸ் குற்றச்சாட்டு கூறப்பட்டது. 3 பெண்களுடன் அவர் இருக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

என்.டி.திவாரியை அதிரடியாக பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கு முன்னதாக அவரை பதவியில் இருந்து விலகுமாறு மத்திய உள்துறை நோட்டீசு அனுப்பியது. இதையடுத்து தன் உடல்நிலை காரணமாக கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு திவாரி கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.

பதவி விலகிய பிறகும் தொடர்ந்து ஐதராபாத்தில் தங்கி இருக்க என்.டி.திவாரி விரும்பவில்லை. நேற்றே அவர் ஆந்திராவில் இருந்து ஓசையின்றி வெளியேறினார். தன் உடமைகள் அனைத்தையும் லாரி ஒன்றில் யாருக்கும் தெரியாமல் அவர் முதலில் அனுப்பினார். பிறகு அவர் கவர்னர் மாளிகையில் இருந்து தனியாக வெளியேறினார்.

அவர் விமான நிலையத்துக்கு புறப்படும் முன்பு ஆந்திர முதல்- மந்திரி ரோசய்யா, தலைமை செயலாளர் ராம்சந்த் ரெட்டி இருவர் மட்டும் சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் திவாரி விடைபெற்றார்.

பொதுவாக ஒரு மாநிலத்தில் இருந்து கவர்னர் பதவி நிறைவு செய்து புறப்படும்போது அவருக்கு சிறப்பான வழியனுப்பு விழா நடத்தப்படும். அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் அனைவரும் அந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

ஆனால் நேற்று என்.டி. திவாரி புறப்பட்டு சென்றபோது இந்த மரபு எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. செக்ஸ் குற்றச்சாட்டு காரணமாக அவர் ஓசையின்றி கண்கலங்க புறப்பட்டு சென்றது பரிதாபமாக இருந்தது.

இந்த நிலையில் ஆந்திர கவர்னராக கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் கவர்னர் இ.எஸ்.லட்சுமி நரசிம்மன் நேற்றிரவு ஐதராபாத் வந்தார். பேகம்பட் விமான நிலையத்தில் அவரை முதல்- மந்திரி ரோசய்யா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

இன்று காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் ஆந்திர கவர்னராக லட்சுமி நரசிம்மன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.ரமேஷ் தவே பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆந்திர கவர்னராக பொறுப்பேற்றுள்ள லட்சுமி நரசிம்மன் முன்பு ஆந்திராவில் உயர் போலீஸ் அதிகாரியாகவும், ஆந்திர உளவுத்துறை தலைவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

thandiya nadanam aada padaviyum paripoga

ஆந்திர கவர்னர் என்.டி. திவாரி மீது “செக்ஸ்” புகார் வந்து இருப்பது இப்போது முதல் முறை அல்ல. அவர் ஆந்திர கவர்னர் ஆவதற்கு முன்பு உத்தரகாண்டத்தில் முதல்- மந்திரியாகவும், உத்தர பிரதேசத்தில் 3 முறை முதல்- மந்திரியாகவும் இருந்தார். பலமுறை மத்திய மந்திரியாகவும் இருந்தார்.

1952-ல் முதன் முதலில் அரசியலுக்கு வந்தார். அதில் இருந்தே அவர் “செக்ஸ்” விஷயத்தில் பலவீனமாகவே இருந்துள்ளார். அவர் முதல்-மந்திரியாக மற்றும் மந்திரியாக இருந்த காலங்களில் அவருக்கு பெண்களை சப்ளை செய்தே அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் காரியம் சாதிப்பார்களாம்.

பெண்களை சப்ளை செய்பவர்களுக்கே அரசியலிலும் முக்கிய பதவிகளை கொடுப்பாராம்.

சாதாரண உள்ளூர் தலைவர் பதவி உள்பட பெரிய பதவிகள் வரை அவருக்கு பெண்களை விருந்தாக்குபவர்களுக்குதான் கிடைக்கும் என்று உத்தரகாண்டம் மாநில அரசியல் பிரமுகர் ஒருவர் கூறினார்.

திவாரி மக்களுக்கு அறிமுகமே இல்லாத பல பெண்களை அரசியல் உயர் பதவிகளுக்கு திடீரென கொண்டு வருவார். அவர்களும் இப்படி வந்தவர்கள்தான் என்று உள்ளூர் கட்சியினர் கூறுகின்றனர்.

அவரை சுற்றி எப்போதும் ஒரு நண்பர்கள் கூட்டம் உண்டு. அவர்கள் திவாரிக்கு வேண்டிய பெண்களை ஏற்பாடு செய்து கொடுப்பதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தனர் என்றும் சொல்கின்றனர்.

அவரது அலுவலகத்துக்கு வரும் பெண்களை வளைத்து விருந்தாக்கிய சம்பவமும் உண்டு. சமீபத்தில் ரோகித் சேகர் என்ற வாலிபர் திவாரி எனது தந்தை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவருடைய தாயார் உஜ்வாலா முன்னாள் மத்திய மந்திரி ஷேர் சிங்கின் மகள். உஜ்வாலா கட்சி பணியாக திவாரியை சந்திக்க சென்றபோது அவரை மடக்கி ஆசை நாயகியாக்கி கொண்டார்.

இளம் பெண்களை கட்டிப்பிடித்து தாண்டியா நடனம் ஆடுவதில் ஆர்வம் காட்டுவார். அப்போது பெண்களிடம் அத்துமீறுவதும் உண்டு என்று உத்தரகாண்டம் ஆதிவாசி அமைப்பின் தலைவி அவதாஷ் குஷால் புகார் கூறி இருக்கிறார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், டேராடூனில் உள்ள காட்டிலாகா ஆராய்ச்சி மைய விருந்தினர் மாளிகைக்கு செல்வார். அங்கு அவர் தவறான செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்றும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அவருக்கு எதிராக பாரதீய ஜனதா வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் திவாரியின் மோசமான நடத்தைகளை குறிப்பிடும் பாடல்களும், சில காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இந்த பாடல்களை பிரபல பாடகர் நரேந்திரசிங் ராஜி எழுதி பாடி இருந்தார். அப்போது 50 ஆயிரம் வீடியோ சி.டி. விற்பனையாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திவாரி ஆந்திராவில் “செக்ஸ்” புகாரில் சிக்கியதை அடுத்து அவரது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் பல்வேறு பத்திரிகைகளும் அவருடைய பழைய விவகாரங்களை கிளறி ஏராளமான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.