மொத்தம் 21 பெண்கள் தேவநாதன் விரித்த செக்ஸ் வலையில் சிக்கியது தெரிய வந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலான பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்து விட்டனர். டாக்டர் மனைவி, பேராசிரியர் மனைவி, நர்ஸ், தொழில் அதிபர்களின் மனைவிகள் என தேவநாதனுடன் உல்லாச லீலையில் ஈடுபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இவர்களின் வரிசையில் டி.வி. நடிகை ஒருவரும் தற்போது சேர்ந்துள்ளார்.
மச்சேஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த டி.வி. நடிகையையும் தேவநாதன் தனது ஆபாச வலையில் வீழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. டி.வி. நடிகையும், அர்ச்சகரும் உல்லாசமாக இருப்பது போன்ற புதிய சி.டி. வெளியாகி இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. காஞ்சீபுரம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த சி.டி. அமோகமாக விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, இது குறித்து எங்களுக்கும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரித்து வருகிறோம் என்றனர்.
போலீசார் விசாரணை நடத்தியுள்ள 21 பெண்களில் பேராசிரியர் மனைவி மட்டும் முறைப்படி வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பூக்காரியிடம் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இவரிடமும் முறைப்படி வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே போலீஸ் விசாரணையின் போது அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் விபசாரம் நடப்பதாக பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அர்ச்சகர் தேவநாதனின் வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு 2 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. இன்னும் அவர்கள் விசாரணையை தொடங்கவில்லை. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, தேவநாதன் தொடர்பான பைல்கள் இன்னும் எங்களிடம் வந்து சேரவில்லை, உள்ளூர் போலீசார்தான் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை சூடு பிடிக்கும் பட்சத்தில் “செக்ஸ்” அர்ச்சகர் தேவநாதன் தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment