Pages

Tuesday, November 10, 2009

சலங்கை ஒலி ரீ மேக்கில் கமல்

1982ல் டைரக்டர் விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான சலங்கை ஒலி படத்தினை யாராவது ரீ-மேக் செய்தால் அதில் நடிக்க விரும்புவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். சலங்கை ஒலி படத்திற்கு இளையராஜா இசையமைத்து தேசிய விருது பெற்றார். கமல்ஹாசன் பரதநாட்டிய கலைஞராக நடித்து அசத்தியிருந்தார். அந்த காலகட்டத்தில் வசூலில் சாதனை படைத்த சலங்கை ஒலியில் ஜெயப்பிரதா, எஸ்.பி.ஷைலஜா மற்றும் சரத்பாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். தனது ஆசையை வெளிப்படுத்தி கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், சலங்கை ஒலி ஒரு சிறந்த படைப்பு. அந்தப் படத்தை இப்போது யாராவது மீண்டும் எடுத்தால், அதில் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு 54 வயது ஆகிவிட்டதை பெரிது படுத்த வேண்டாம். வயதைத் தாண்டியது திறமை, என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment