
இதையடுத்து, தாக்குதல் நடத்தியது தொடர்பாக, பிரவீண் பல்தேவ், நரேஷ் ரமேஷ் உட்பட சிவசேனா கட்சியைச் சேர்ந்த 17 பேரை, மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபடுதல், கொலை முயற்சி ஆகிய வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.இதற்கிடையே, "டிவி'அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் மற்றும் எடிட்டர்ஸ் கில்டு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என, மகாராஷ்டிரா அரசை எடிட்டர்ஸ் கில்டு வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment