
பல ஆண்டுகளாக நடந்த விசாரணைக்கு பிறகு கடந்த வாரம் கண்ணூரை சேர்ந்த நவாஸ்(வயது28) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரை உதவி கமிஷனர் வர்க்கீஸ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் நவாசுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்பு களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் கேரளாவில் நடந்த பல்வேறு நாச வேலைகளுக்கு இவர் லட்சக்கணக்கில் பண உதவி செய்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நவாசை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் நவாசுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
கோழிக்கோட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக நவாஸ் ரூ.41 லட்சம் பணத்தை காசிம் என்பவருக்கு கொடுத்து உள்ளார்.
இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத அமைப்புகளில் சேர்க்க நசீர் என்பவருக்கு ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார்.
இப்பணத்தை சவுதிஅரேபியா, துபாய் மற்றும் அபுதாபி, ஆகிய நாடுகளுக்கு சென்று திரட்டி உள்ளார். இதற்கு அல் கொய்தா அமைப்பு உதவி செய்துள்ளது. இப்பணத்தின் மூலம் கேரளாவில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத செயல்களை நடத்த இக்கும்பல் திட்டமிட்டுள்ளது.
இவை அனைத்தும் போலீ சார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நவாசை கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் மீண்டும் அவரை காவலில் எடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment