.jpg)
ஆப்கானில் படைக் குறைப்பு இல்லை: ஒபாமா
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் செனட் சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது ஒபாமா இந்தக் கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2001 செப் 11ந் தேதி ஆப்கானில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கப் படையினர் தொடங்கிய போர் எட்டாண்டுகளாக நீடித்து வரும் நிலையில், இதுவரை சுமார் 800 அமெரிக்கப் படையினர் மாண்டுள்ளனர்.
ஆதலால் மிகவும் கவலையடைந்துள்ள ஒபாமா, மேற்கொண்டு இந்தப் போரை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. படை குறைத்தால் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள், தலிபான்கள் ராஜ்ய மாய்ப் போய்விடும் எனக் கூறப்படுகிறது.
ஒ இதனால்தான் ஒபாமாவிற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதோ ?
-நக்கல் நாகராசன்
No comments:
Post a Comment