மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா :சினிமாவில் ஆபாசமாக நடிப்பது எல்லை மீறிவிட்டது. எப்படியும் ஆடை அணியலாம் என நடிகைகள் நினைத்து, மிகவும் கவர்ச்சியாக உடைகள் உடுத்தி நடிக்கின்றனர். இது கலாசார சீரழிவை ஏற்படுத்தும். நடிகைகளின் ஆபாசம், தனியார் "டிவி' சேனல்களில் ஒளிபரப்பப் படுவதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கிறது. இப்போதைய சினிமாக்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம் பெறுகிறது. இதை சென்சார் குழு எப்படி அனுமதிக்கிறது?.இனி வரும் சினிமாக்களில் ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றால் அந்த படங்ளை சென்சார் குழு அனுமதிக்கக்கூடாது. முன்னணி இளம் நடிகைகளில் சிலரும் மிகவும் ஆபாசமாக நடிக்கின்றனர். அவர்களுக்கு வெட்கம், மானம், இருந்தால் இனி ஆபாசமாக நடிக்கக்கூடாது. ஆபாசமாகவே உடை அணியும் நடிகைகளுக்கு சேலை கட்டும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். தொடர்ந்து அப்படியே நடித்தால் ஷூட்டிங் நடக்கும் இடத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
Photo courtesy : Dinamalar daily
No comments:
Post a Comment