.jpg)
அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் தொடர்ந்து போதிப்பதற்கான விருப்பத் தேர்வு அனைத்துத் தேசியப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கல்வி பற்றிய பெற்றோர் நடவடிக்கைக் குழு விரும்புகிறது.
சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் உள்ள ஏழு பள்ளிக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு, ஆங்கிலத்தில் அறிவியல் கணிதப் பாடங்களைப் போதிக்கும் கொள்கையை கைவிடுவதிலிருந்து தங்களது பிள்ளைகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டுமென்று 97 விழுக்காடு பெற்றோர்கள் விரும்புவதைக் காட்டுவதாக அந்தக் குழுவின் தலைவர் நூர் அஸிமா அப்துல் ரஹீம் கூறினார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் சமர்ப்பிப்பதற்காக அறிக்கை ஒன்று கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எம் சரவணனிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment