Pages

Sunday, December 6, 2009

தீட்சிதர்கள் - அரசு மோதல் வலுக்கும் ?

நடராஜர் கோவிலில் பூஜை செய்து வரும் தீட்சிதர்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என, அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவில், கடந்த பிப். 2ம் தேதி அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, செயல் அலுவலர் நியமித்து நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலில் உண்டியல், பிரசாத கடை ஆகியன அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கோவிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள் பற்றிய விவரங்கள் அறநிலையத் துறை செயல் அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, நேற்று மாலை கோவில் செயல் அலுவலர் அலுவலக வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது.இந்த அறிவிப்பு பலகை, தீட்சிதர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தி மு க ஆட்சிக்கு வந்த பின் சிதம்பரம் கோயிலை தீஷிதர்களிடம் இருந்து பிடுங்கி அற நிலைய துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது குறிபிட்ட தக்கது ?

No comments:

Post a Comment