Pages

Sunday, December 6, 2009

ராஜபக்சே தமிழ் எம்.பி.ரகசிய சந்திப்பு ?

இலங்கையில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 22 எம்.பி.க்களுக்கு அதிபர் ராஜபக்சே தனித்தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜபக்சே சார்பில் பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த கடிதங்களை எழுதியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்து உள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ராஜபக்சே 2 நாட்களுக்கு முன் தனியே சந்தித்துப் பேசியதாகவும், இந்த நிலையில் அந்த கூட்டணியின் அனைத்து எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பது அதன் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கருதுவதாக அந்த இணையதளம் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment