எனினும், அவரால் அவரது திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை. ஏனென்றால், மலேசிய நாட்டு சட்டப்படி, அந்நாட்டு முஸ்லிம் கள் வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்யக் கூடாது அல்லது அந்த வேற்று மதத்தவர் முஸ்லிம் மதத்திற்கு மாற வேண்டும். இதனால், பங்கார்மா, தன் எட்டு வயது மற்றும் இரண்டு வயது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில், கணவர் பெயரை தந்தை என்று குறிப்பிட முடியாத நிலையில் உள்ளார். இதனால், தான் இந்து மதத்திற்கு மாற விரும்புவதாகவும், பெயரையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், மலேசியாவில், முஸ்லிம் மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதுகுறித்து பங்கார்மா கூறுகையில், "நான் இந்துவாகவே பிறந்தேன். நான் இந்துவாகவே வாழ்வேன். இந்து மதத்தை சேர்ந்தவளாகவே இறக்க விரும்புகிறேன்' என்றார்.
( MODEL )
No comments:
Post a Comment