இதனால், அதிருப்தி அடைந்த பாண்டியன், இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். நாராயணமணியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தேவக்கோட்டையை சேர்ந்த ஒய்யப்பன்(48), கன்னியாகுமரியைச் சேர்ந்த எட்வின் விக்டர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. இவர்கள், ஈரோடு, கோவை, சிவகங்கை மாவட்டங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 15 பேரிடம், 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும் தெரிந்தது. நாராயணமணி, ஒய்யப்பன் ஆகிய இருவரும் கைது செய்த போலீசார், தலைமறைவான எட்வின் விக்டரை தேடுகின்றனர்.
No comments:
Post a Comment