Pages

Saturday, December 5, 2009

முதல்வரின் பெரும் குணம்

முதல்-அமைச்சர் கருணாநிதி தமிழகத்தில் உள்ள அருந்ததிய சமுதாய மாணவ, மாணவியர் மருத்துவக்கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர்கல்வி பெறுவதற்கு உதவிட “பெண் சிங்கம்” எனும் திரைப்படத்திற்குக்கதை வசனம் எழுதியதற்காக தனக்கு அளிக்கப்பட்ட 50 லட்ச ரூபாயுடன், மேலும் தமது சொந்த நிதியில் இருந்து 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

அருந்ததியருக்கு 3 சதவீத தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக நடப்பு ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 56 அருந்ததியர் வகுப்பு மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 1165 அருந்ததியர் வகுப்பு மாணவர்கள் என மொத்தம் 1221 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 61 லட்சத்து

5 ஆயிரம் ரூபாயை மருத்துவக்கல்வித்துறை இயக்குநர், தொழில் நுட்பக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் மூலம் வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி அருந்ததியின சமுதாயத்தைச்சேர்ந்த மருத்துவக்கல்வி பயிலும் 10 மாணவர்களுக்கும், பொறியியல் கல்வி பயிலும் 13 மாணவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி வழங்கி மொத்தம் 1221 அருந்ததியின மாணவ மாணவியருக்கு கல்வி வளர்ச்சி நிதி வழங்கும் பணிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று காலை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழரசி, நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன், உயர்கல்வித்துறைச்செயலாளர் கணேசன், மக்கள் நல்வாழ்வுத்துறைச்செயலாளர் சுப்புராஜ், தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெயக்கொடி, ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment