Pages

Sunday, December 20, 2009

ஆப்கானிஸ்தானுக்கு தங்கள் நாட்டு வழியாக இந்திய பொருட்களை கொண்டு செல்ல பாகிஸ்தான் தடை

ஆப்கானிஸ்தானுக்கு தங்கள் நாட்டு வழியாக இந்திய பொருட்களை கொண்டு செல்ல பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி வீழ்ந்த பிறகு, அமெரிக்காவின் ஆதரவுடன் அதிபர் கர்சாய் தலைமையில் ஜனநாயக ஆட்சி அமைந்தது. 40 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்த நாட்டில் சண்டை நடந்ததால் அடிப்படை வசதிகள் ஏதும் இன்னும் வளர்ச்சியடைவில்லை. எனவே, எல்லாவற்றுக்கும் அண்டை நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய சூழலில் ஆப்கானிஸ்தான் உள்ளது. ஆப்கானிஸ்தானின் போக்குவரத்து தேவையான பஸ்கள் உள்ளிட்ட வசதிகளை இந்தியா அளித்து வருகிறது.ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்படும் பொருட்கள், பாகிஸ்தான் வழியாக தான் எடுத்துச் செல்ல வேண்டும்.


கடந்த ஆண்டு மும்பைத் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா துண்டித்துக் கொண்டது.இதனால், கோபமடைந்துள்ள பாகிஸ்தான், இந்திய பொருட்களை தங்கள் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்குகொண்டு செல்லக்கூடாது, என, ஆப்கனுடனான நடந்த பேச்சுவார்த்தையின் போது தெரிவித்துள்ளது. "பாகிஸ்தானின் இந்த செயல் எரிச்சலை கிளப்புவதாகவும், இருப்பினும் பாகிஸ்தான் -ஆப்கன் பேச்சுவார்த்தை இதனால் பாதிக்கப்படாது, என, ஆப்கானிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியாவுடனான பேச்சுவார்த்தையின் போது, ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை கொண்டு செல்வது குறித்து விவாதிக்கப்படும்"என பாகிஸ்தான் அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment