கங்கை நதி பனிபடர்ந்த இமயமலையில் கங்கோத்ரி என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. அங்கு படிந்திருக்கும் பனிப்படலங்கள் நீராக உருகி கங்கை ஆகிறது. ஆனால் இது உற்பத்தியாகும் கங்கோத்ரியில் 15 முதல் 20 மீட்டர் நீளத்துக்கு அதாவது 1 1/2 கி.மீட்டர் தூரத்துக்கு பனிக்கட்டிகளே இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை இந்தியாவின் விண்வெளி நிறுவனமான “இஸ்ரோ” தெரிவித்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி மைய இயக்குனர் டாக்டர் ஆர்.ஆர்.நவல்குந்த் தெரிவித்துள்ளார்.
“இஸ்ரோ” அனுப்பியுள்ள செயற்கைகோள் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படத்தில் இது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பூமி வெப்பமயமாகி வருவதால் கடந்த 30 ஆண்டுகளாக பனிபடிவங்கள் அளவுக்கு அதிகமாக உருகி சுமார் 1 1/2 கி.மீட்டர் தூரத்துக்கு இல்லாமல் போய்விட்டது என்று அவர் தெரிவித்தார். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் கங்கை நதி வற்றிவிடும் சூழ்நிலை உருவாககூடும். எனவே இதை தடுப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் இந்த ஆய்வு அறிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment