Pages

Friday, December 4, 2009

பாகிஸ்தானி எச்சரிக்கும் பிரிட்டிஷ் முதல்வர் ?

அல் காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லாடனைப் பிடிக்க பாகிஸ்தான் அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் வலியுறுத்தியுள்ளார்.
“அல் காய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு ராணுவத் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ஆனால் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த 8 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒசாமாவை ஏன் பிடிக்க முடியவில்லை என்று நாங்களே கேட்டுக்கொள்ள வேண்டி யிருக்கிறது,” என்றார் பிரிட்டிஷ் பிரதமர்.
ஒசாமா மற்றும் அவரின் முக்கிய உதவியாளரான அல் ஜவஹிரி எங்கு மறைந்திருக்கிறார்கள் என்பதுகூட பாகிஸ்தானில் எவருக்கும் தெரியாது என்பது வியப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆகவே பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தலிபான் மற்றும் அல் காய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment