இந்நிலையில், இலங்கையில் போர் நடந்தபோது, புலிகளுக்கு ஆயுதம் கடத்த பயன்பட்ட எம்.வி.பிரின்ஸ் கிறிஸ்டினா என்ற மிகப் பெரிய கப்பல் ஒன்றை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.இதற்கிடையே, இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா பொதுச் செயலர் தில்வின் சில்வா கூறுகையில்,"ராணுவத் தளபதி பதவியில் இருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட்டதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ராணுவ புரட்சி நடக்கும் என்ற அச்சம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இதற்கான உண்மையான காரணத்தை அரசு உடனடியாக தெரிவிக்க வேண்டும்"என்றார்.
No comments:
Post a Comment