அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், இந்த விஷயத்தில் மதம், இனம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை ஒருவரது தகுதிதான் முக்கியம். இன்று மன்மோகன்சிங் பிரதமராக இருக்கிறார் என்றால் அவர் சீக்கியர் என்பதற்காக அல்ல. அவர் தகுதியும், திறமையானவரும் என்பதால்தான் பிரதமராக இருக்கிறார். இஸ்லாமியர் ஒருவர் முழுமையான தகுதி பெரும் பட்சத்தில் அவர் இந்தியாவில் பிரதமராக முடியும்.
சீக்கியர்கள் நமது மக்கள் தொகையில் மிகமிக குறைவு தான். தங்கள் இனத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வருவார் என்று அவர்கள் கற்ப்பனை செய்து கூட பார்த்திருக்கமாட்டார்கள். அது போல இஸ்லாமியர்களும் அரசியலில் அதிக அளவில் ஈடுபட்டால் உயர் பதவிகளை எட்ட முடியும் என்றார்.
No comments:
Post a Comment