Pages

Sunday, December 6, 2009

கலக்கும் சுப்ரமணியசாமி யோசனை ?

"ஓட்டுப் போட்டதும் அதற்கு ஆதாரமாக, இயந்திரத்தில் ரசீது வர வேண்டும்,'' என்று, சுப்ரமணியசாமி வலியுறுத்தினார்.சென்னையில், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட மத்திய அரசு, தமிழக அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது. கடந்த வாரத்தில் நான் விடுத்த அறிக்கையை அடுத்து இக்கோரிக்கையை அரசு வைத்துள்ளது.


2001ம் ஆண்டில், எனது கோரிக்கையை அன்றைய தமிழக அரசு நிராகரித்தது.தமிழக அரசு, உடனே இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு ஒப்புதல் கேட்டு கடிதம் எழுத வேண்டும்.மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் குறித்து ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளேன். ஓட்டுப் போட்ட மக்களுக்கு, அவர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டனர் என்பதற்கு ஆதாரமாக ரசீது, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் இருந்து கிடைக்க வேண்டும். இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

No comments:

Post a Comment