இந்த தீபாவளிக்கு அவர்தான் நிஜமான நாயகன் எனும் அளவு பேராண்மையின் வெற்றி பார்க்கப்படுகிறது. படத்தின் நாயகன் ஜெயம் ரவி, நிஜமாகவே சொல்கிறேன்" ஜனா சார் முன்பு நானெல்லாம் ஒன்றுமே இல்லை. அவர் மிகப்பெரிய கல்வி மையம். நான் அதில் படித்த மாணவன் என்பகதே பொருந்தும். வாழ்க்கையில் எனக்கெல்லாம் இப்படியொரு படம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை" என்கிறார் நிஜமான உணர்வோடு. அடுத்த ஜனநாதன் எடுக்கப் போகும் படம் அக்மார்க் காதல் படைப்பாம்.
ஆனால் வழக்கமான காதல் அல்ல.. லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட், சலீம் - அனார்கலி போல சரித்திரக் காதலை மிகைப்படுத்தாமல், அன்றைய மனிதர்களின் நிஜமான வாழ்க்கை முறைப் பின்னணியில் சொல்லப் போகிறாராம். "கிரேக்கக் காதல் கதைகள் அல்லது இந்தியில் எடுக்கப்படும் காதல் கதைகள் உலகம் முழுக்க வரவேற்புப் பெறும்போது, அதுபோன்றதொரு பின்னணியில், அதைவிட தரத்தோடு தமிழில் எடுத்தால் அதுவும் உலக அளவில் நிச்சயம் வரவேற்புப் பெறும் என்று நம்புகிறேன். அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளேன்.." என்கிறார் ஜனநாதன்.
No comments:
Post a Comment