Pages

Sunday, December 6, 2009

கொடைக்கானலில் நவீன சுற்றுலா மையம் ?

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை கவர, எதிரொலிப் பாறையில் நவீன வசதிகளுடன் சுற்றுலா மையத்தை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ளது எதிரொலிப் பாறை. இப்பகுதி, வனத்துறை வசம் உள்ளது. அதை, அரசிடம் சுற்றுலாப் பகுதிக்கு ஒப்படைக்க, வனத்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.


இதுகுறித்து, கலெக்டர் வள்ளலார் கூறுகையில்,ஏற்கனவே தடியன்குடிசை சுற்றுலா திட்டத்தில், இவ்விடங்கள் உள்ளன. இச்சுற்றுலா தலம் துவங்க, அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் முடிக்கி விடப்பட்டுள்ளது.


இந்நிலையில், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை கவர, யானைச்சவாரி, மரக்குடில், மினி ரெஸ்டாரன்ட், தொங்கும் பாலம், பாரசூட் கிளைடர், டிரக்கிங் வசதியை ஏற்படுத்த, எதிரொலிப் பாறை பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்லும் ரோட்டில், அருகாமையிலுள்ள இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அதிகளவு கவரும் நோக்கில், இத்திட்டம் தற்போது மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப் பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment