.jpg)
இந்திய இசைத் தேர்வில் ஆண்ட்ரூ சாதனை
உலகின் முதல் இசை தமிழ் இசைதான் என்று ‘அடித்துக்’ கூறும் சீன மாணவர் ஆண்ட்ரூ டேங் இயூ சின் (11) சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் நடத்திய 5ம் நிலை மிருதங்க இசை தேர்வில் முதல் இடம் பெற்றார்.
ஆங்கிலோ சீனப் பள்ளியைச் சேர்ந்த அவர், வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நுண்கலைக் கழகத்தின் இசை நிகழ்ச்சியில் தன¬யாக மிருதங்கம் வாசிப்பார்.
மிருதங்க வித்வான் டி ஆர் சுந்தரேசன¬ன் மாணவரான ஆண்ட்ரூ, இசை குடும்பத்தில் இருந்து வந்தவர்.
தந்தை கேலி டேங் தேசிய கல்விக் கழகத்தில் இசை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
பல இசைக்கருவி களையும் வாசிக்கும் ஆண்ட்ரூ தமிழ் இசை பயின்றிருப்பதால் மற்ற இசைகளை அறியவும் மெட்டுக்கள் போடவும் எளிதாகிறது என்றார்.
No comments:
Post a Comment