
இந்தியருக்கு கிடைத்த ‘புக்கர்’ இம்முறை ஆங்கிலேயருக்கு
இலக்கிய உலகில் உயர்ந்த விருதாகக் கருதப்படும் புக்கர் பரிசு கடந்த முறை இந்திய எழுத்தாளர் அரவிந்த் அதிகாவுக்கு கிடைத்தது. இந்தாண்டு போட்டியில் இந்திய எழுத்தாளர்கள் இடம் பெறாத நிலையில், இங்கிலாந்து நாவலாசிரியை ஹிலாரி மேன்டல் (57), புக்கர் பரிசை வென்றுள்ளார். லண்டனில் செவ்வாயன்று நடந்த நிகழ்ச்சியில் 50,000 பவுண்டு மதிப்பிலான புக்கர் பரிசை அவர் பெற்றார். இப்பரிசை இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி, அனிதா தேசாய், அரவிந்த் அதிகா, அருந்ததி ராய் போன்றோர் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment