.jpg)
இந்த பெண்ணின் தாயின் இரண்டாவது கணவர், இரண்டாவது கணவரின் தம்பி, தாய் மாமன் ஆகியோர், தன்னை ஐந்து வயதில் இருந்தே கற்பழித்து வந்தனர் என, புகாரில் தெரிவித்திருந்தார். 14 வயதில் இந்த பெண் கர்ப்பமடைந்தாள். இவளது தாய்க்கு இந்த விஷயம் தெரிந்த போது சிறுமி ஏழு மாத கர்ப்பமாக இருந்ததால் கருவை கலைக்க முடியவில்லை. இந்த சிறுமிக்கு பிறந்த குழந்தை தனக்குப் பிறந்ததாக கூறி அக்கம் பக்கத்தினரை சமாளித்துள்ளார் சிறுமியின் தாய். தற்போது இந்த பெண்ணுக்கு 27 வயதாகிறது. தன்னை கற்பழித்தவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் என கூறியும், தனது தாய் அதை நம்பாமல் தன்னை கடுமையாக அடித்தாள் எனவும், இந்த பெண் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த கார்டிப் கோர்ட், "காசு கொடுக்காமல் சிறுமியை விபச்சாரியாக பயன்படுத்தி வந்துள்ளீர்கள்' என, மூன்று பேர் மீது குற்றம் சாட்டியுள்ளது.
அதுமட்டுமல்லாது, இந்த பெண் வீட்டின் பின்புறத்தில் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள். இதற்காக தாயின் இரண்டாவது கணவருக்கு(51) 20 ஆண்டு சிறையும், இவரது தம்பிக்கு 15 ஆண்டு சிறையும், கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு, "நான் தான் தந்தை' என ஒப்புக்கொண்ட தாய் மாமனுக்கு 12 ஆண்டு சிறையும் வழங்கப்பட்டுள்ளது. தாயின் இரண்டாவது கணவர், அவரது தம்பி ஆகியோர் உரிய பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் பிரிட்டனில் தங்கியிருப்பதால் தண்டனை காலம் முடிந்ததும் அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
They must be given death sentence . Don't send back to India . Hang them there itself
ReplyDelete